search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், கண்களில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டம்
    X

    தஞ்சை ரெயிலடியில் கண்களில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சையில், கண்களில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டம்

    • நீதி கேட்டு போராடும் அந்த வீராங்கனைகளும் எங்களது மகள்களை போன்றவர்கள் தான்.
    • எதற்கும் கலங்க வேண்டாம், உங்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.

    அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், தில்லியில் நீதி கேட்கும் மகள்கள், தமிழகத்தில் இருந்து ஆதரவு தரும் தாய்மார்கள் என்ற மவுன அறவழி போராட்டம் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    தஞ்சை ரெயிலடியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டு தங்களது கண்களில் கருப்புத்துணி கட்டி தில்லியில் போராடும் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில்:-

    ஒன்றுபட்ட இந்தியாவில் நீண்ட நாட்களாக நீதி கேட்டு போராடும் அந்த வீராங்கனைகளும் எங்களது மகள்களை போன்றவர்கள் தான்.

    போராடும் நாங்கள் பெறாத அந்த பிள்ளைகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு தாய்மார்கள் இருக்கிறார்கள், எதற்கும் கலங்க வேண்டாம், உங்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்படும் என்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×