search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக"

    குமாரபாளையத்தில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் சார்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் முன்பிருந்து அமைப்பின் நிர்வாகி சீனிவாசன் தலைமயில் 17 பேர் சைக்கிளில் சென்றனர்.

     காவேரி நகர், பெரந்தார் காடு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, தாலுக்கா அலுவலக சாலை, தம்மண்ணன் சாலை, நகராட்சி அலுவலக காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. 

    ஒவ்வொரு முக்கிய இடங்களில் நின்று, சைக்கிளில் சென்றால் என்னென்ன நன்மைகள் என்பது பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் செயலர் பிரபு, பொருளர் வரதராஜ், செந்தில்குமார், மோகன்ராஜ், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ×