search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandhi Jayanti"

    • பாமனி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டம் பாமனி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது .

    ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய குழு உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் முருகதாஸ், இந்துமதி, பிரமிளா, பத்மா ,ஜெயலெட்சுமி, ஜெயந்தி, மதுமதி, சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைமை ஆசிரியர் கிரிஜா, கிராம அலுவலர் மணிகண்டன், கோசி மணி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி செயலர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

    • சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது.
    • முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் இளங்கோவன், சூரியா, வெங்கடேஷ்வரி, பிரியதர்ஷினி, கீதா பால சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் அன்பரசி வரவேற்றார். டாக்டர் தனசேகரன் முகாமை தொடங்கி வைத்து ரத்ததான வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

    உசிலம்பட்டி அரசு மருத்துவமனை ரத்ததான வங்கி மருத்துவர் உஷாராணி தலைமையில் மருத்துவகுழுவினர், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். முன்னாள் கவுன்சிலர் சீனிராஜா, முன்னாள் கூட்டுறவுசங்கதலைவர் பொன்ராம், ஜெயலலிதாபேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், அ.தி.மு.க.வார்டு செயலாளர் லில்லி, ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சூரியா, வெங்கடேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.

    • காந்தியடிகள் உருவப் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
    • ரூ.90 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சை தலைமைதபால் நிலையம் எதிரில் உள்ள ராணுவத்தினர் மாளிகை காதிகிராப்ட்டில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

    இதையடுத்து காந்தியடிகள் உருவப் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்து

    கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் உதவி இயக்குநர், பிரான்சிளப் தெரசாமேரி, கதர் அங்காடி மேலாளர் சாவித்திரி மற்றும் அரசு அலுவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.90 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்ப ட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு எங்கள் கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கை யாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளது.

    மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள் மெத்தை விரிப்புகள், கதர் அங்காடியில் இருப்பில் உள்ளது.

    கதர் பருத்தி, பட்டு, பாலியஸ்டர் ஆகியவற்றிருக்கு 30 சதவீதம் தள்ளுபடியும், உல்லனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.
    • குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

    சென்னை:

    காந்தி ஜெயந்தியையொட்டி இன்று நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன. இன்று மதுக்கடை மூடப்படுவதை அறிந்த சிலர் நேற்றே ஏராளமான மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்தனர். அவற்றை இன்று கள்ளச்சந்தைகளில் விற்றனர். இதனால் இன்று பல இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை ஜரூராக நடந்தது.

    சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலை வடக்கு போக் சாலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி இந்த மதுக்கடையும் இன்று மூடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நேற்று இரவு அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் இன்று காலையில் மதுபாட்டில்களை ஸ்கூட்டரில் கொண்டு வந்து தி.நகர் ஜி.என்.செட்டி சாலை-வடக்கு போக் சாலை சந்திப்பு அருகே சாலை ஓரம் வைத்தபடி விற்றுக் கொண்டிருந்தார்.

    இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு பரவியது. மதுக்கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்ததால் விடுமுறை தினத்தை எப்படி கொண்டாடுவது என்று தவித்த குடிமகன்கள் உடனடியாக கள்ளச்சந்தையில் மது விற்கப்படும் இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஸ்கூட்டரில் வைத்து மது விற்றவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    வழக்கமாக ரூ.140-க்கு விற்கப்படும் மதுபாட்டில்கள் அந்த நபர் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.110 விலை வைத்து ரூ.250-க்கு விற்றுக் கொண்டிருந்தார். குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் பட்டப்பகலில் சாலை ஓரத்தில் மது விற்பனை மிகவும் ஜரூராக நடந்தது.

    அதேபோல் சென்னையின் சில இடங்களிலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.

    • நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
    • காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவரை தொடர்ந்து காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • நகராட்சி கமிஷனர் உத்தரவு
    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை

    வேங்கிக்கால்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி திங்கட்கிழமை திருவண்ணாமலை நகரத்தில் உள்ள இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசு உத்தரவின்படி அக்டோபர் 2 -ந்தேதி காந்தி ஜெயந்தி நாளில் திருவண்ணாமலை நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி திறந்த வெளி புல்வெளி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.கல்லூரி திறந்த வெளி புல்வெளி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.

    அருட்தந்தை ஜோபி ஜார்ஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் பீட்டர் மனோகரன் பங்கேற்று பேசினர்.

    பின்னர் மாணவ- மாணவிகளின் தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன.

    இதனை தொடர்ந்து நடந்த மாணவ-மாணவிகள் நடனம் அனைவரையும் கவர்ந்தது.பின்னர் காந்தி குறித்த ஆவண படம் அகன்ற திரையில் பின்னணி இசையுடன் காண்பிக்கப்பட்டது‌.

    விழாவில் துணை முதல்வர் மேகி முருகன், செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி உள்ளிட்ட மருத்துவ மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை மருத்துவமனை வளாக பாதுகாப்பு மற்றும்மேம்பாட்டு நிர்வாகி டாக்டர் பிரசன்னாராஜு மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • காந்திஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • இத்தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    மதுரை

    சென்னை, முதன்மை தொழிலாளர் ஆணையர் டாக்டர் அதுல்ஆனந்த் உத்தரவின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் குமரன் மற்றும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்ரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் விருதுநகர், தொழிலாளர் உதவிஆணையர் (அம லாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு தொழில் நிறு வனங்கள் (தேசியபண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958ன்படி, தேசிய விடுமுறை தினமாகிய காந்தி ஜெயந்தி தினத்தன்று (2.10.2022) கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும். மேற்படி தினத்தில் விடு முறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டு மானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்படவேண்டும்.

    மேற்படி தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலாளர்களிடம் கடைகள் மற்றும் நிறுவனங்கள் 5.ஏ. என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு 4இ.இ. என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் 12ஏ. என்ற படிவத்திலும் கையொப்பம் பெற்று, அதனை தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிதிகளை அனுசரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 37 கடைகள், நிறுவனங்கள், 23 உணவு நிறுவனங்கள் மற்றும் ஒரு மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆக மொத்தம் 61 நிறுவனங்க ளில் முரண்பாடு கண்ட றியப்பட்டு, சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958 தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும். இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பளபட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இத்தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • அவ்வாறு இல்லையெனில், சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் அறிவுரைப்படியும், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் மற்றும் கோவை தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையிலும் திருப்பூர், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை ஆகிய பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தேசிய விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை பணியமர்த்தினால்

    அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளர்க ளுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 72 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியமர்த்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    • ஒவ்வொரு பொருட்களின் மேலும் அதன் விலை அச்சிடப்பட்டு இருந்தது. பொருட்களின் அருகே ஒரு டப்பா வைக்கப்பட்டு இருந்தது.
    • பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த ஆளில்லா கடை ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது.

    தஞ்சை:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் பஸ் நிறுத்தத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஆளில்லா கடை திறக்கப்பட்டது. இந்த கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுது பொருட்கள், திண்பண்டங்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு பொருட்களின் மேலும் அதன் விலை அச்சிடப்பட்டு இருந்தது. பொருட்களின் அருகே ஒரு டப்பா வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த கடைக்கு வருபவர்கள் தங்களுக்கு தேவையான பொருளை எடுத்துக்கொண்டு அதற்குரிய தொகையை அங்கு வைக்கப்பட்டு இருந்த டப்பாவில் போட்டு விட்டு சரியான சில்லரையை எடுத்து சென்றனர்.

    ஆளில்லா கடை திறப்பு நிகழ்ச்சியில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் கூறும்போது, 'மகாத்மா காந்தி நேர்மை, நாணயம், உண்மை, நம்பிக்கை நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவர் கண்ட கனவை நனவாக்கிட எங்களது அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்த நாளில் அனைவரும் வாழ்வில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆள் இல்லா கடையை திறந்து நடத்தி வருகிறோம்.

    பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த ஆளில்லா கடை ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இதில் விற்பனையாகும் தொகை சேவை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றார்.

    • காந்தி ெஜயந்தி கொண்டாட்டத்தில் சிலைக்கு அமைச்சர்-கலெக்டர் மரியாதை செலுத்தினர்.
    • மதுரை கோட்டத்தில் பல்வேறு ெரயில் நிலையங்களில் நடந்து வரும் தூய்மை பிரசார பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

    மதுரை

    மகாத்மா காந்தி பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சி யகத்திலும் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் அனீஷ்சேகர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் காந்தி மியூசியத்தில் உள்ள அஸ்தி பீடத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மதுரைக்கு வருகை தந்த காந்தி மேல மாசி வீதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கினார். அப்போதுதான் அவருக்கு அரை ஆடை அணிவது பற்றிய ஞானோ தயம் ஏற்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் மதுரை மேலமாசி வீதியில் காந்தி தங்கி இருந்த வீடு, நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அமைச்சர் மூர்த்தி

    காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அமைச்சர் மூர்த்தி இன்று காலை மேல மாசி வீதியில் உள்ள நினைவிடத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கதர் ஆடை விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்தி ராணி, மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.

    மகாத்மா காந்தி கடந்த 1921-ம் ஆண்டு மதுரைக்கு ரெயில் மூலம் வந்தார். அதனை நினைவு கூறும் வகையில் ெரயில் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னம் (காந்தி கார்னர்) அமைக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள படத்திற்கு கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உட்பட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மேலும் காந்தி வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட 100 புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு கண்காட்சி நடந்தது. இதனை கோட்ட ெரயில்வே மேலாளர் தொடங்கி வைத்தார்.

    அப்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மூங்கில், மரக்குச்சிகள், பேப்பர், சில்வர் டப்பா க்கள் போன்றவற்றை பயன்படுத்த வலியுறுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மதுரை கோட்டத்தில் பல்வேறு ெரயில் நிலையங்களில் நடந்து வரும் தூய்மை பிரசார பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

    மதுரை ெரயில் நிலைய முதல் நடைமேடை சுற்றுச்சுவரில் காந்தி மார்பளவு உருவம் மற்றும் தூய்மை பிரச்சாரம் பற்றிய நவீன ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

    நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட ெரயில்வே மேலா ளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை பொறியாளர் நாராயணன், முதுநிலை எந்திரவியல் பொறியாளர் சதீஷ் சரவணன், சுற்றுச்சூழல் மேலாளர் மகேஷ் கட்கரி, கோட்ட வர்த்தக மேலாளர் பிரபு பிரேம்குமார், ஊழியர் நல அதிகாரி சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை நேருயுவகேந்திரா சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்க நுழைவு வாயில் முன்பு கலெக்டர் அனீஷ்சேகர் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் ெதாடங்கி வைத்தனர்.

    இதையொட்டி தினந்தோறும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் நேருயுவகேந்திரா மதுரை மண்டல இயக்குநர் செந்தில், மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்றுநர்கள், நேருயுவகேந்திரா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.

    சென்னை:

    காந்தி ஜெயந்தியையொட்டி மத்திய மந்திரி எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற நாமக்கல் கவிஞர் வரிகள் உரைக்கும் அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×