காந்தி ஜெயந்தி: காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி மரியாதை

மகாத்மா காந்தி 156-வது பிறந்த நாள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
காந்தி ஜெயந்தி: காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி மரியாதை
Published on

சென்னை:

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

கவர்னர் ஆர்.என்.ரவி காந்தி மண்டபம் சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்தும் காந்தியின் உருவ படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக அரசின் சார்பில் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு அருகே காந்தியின் உருவப்படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினாார்.

அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ராஜ கண்ணப்பன், மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்ச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.ஏல்.ஏ.க்கள் பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., ப.ரங்கநாதன் மற்றும் செய்தித் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com