search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ratathana Camp"

    • ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கேணிக் கரை கிரசெண்ட் (பிறை) ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் (கி) தேனி சை.அக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ் மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரசெண்ட் (பிறை) ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உரிமையாளர் பயாஸ் அகமது வரவேற்றார்.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் பொறியாளர் கர்ண மஹாராஜா, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா, மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் ஷரீப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன்,இளைஞர் சங்க செயலாளர் துல்கர்,இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம் ,மாணவர் சங்க செயலாளர் சந்தோசம்,கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி,உழவர் பேரியக்கம் தலைவர் ஐ.பி.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    • சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது.
    • முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் இளங்கோவன், சூரியா, வெங்கடேஷ்வரி, பிரியதர்ஷினி, கீதா பால சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் அன்பரசி வரவேற்றார். டாக்டர் தனசேகரன் முகாமை தொடங்கி வைத்து ரத்ததான வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

    உசிலம்பட்டி அரசு மருத்துவமனை ரத்ததான வங்கி மருத்துவர் உஷாராணி தலைமையில் மருத்துவகுழுவினர், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். முன்னாள் கவுன்சிலர் சீனிராஜா, முன்னாள் கூட்டுறவுசங்கதலைவர் பொன்ராம், ஜெயலலிதாபேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், அ.தி.மு.க.வார்டு செயலாளர் லில்லி, ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சூரியா, வெங்கடேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.

    • மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், ஜே.சி.ஐ. மதுரை லயன்ஸ் இணைந்து ஒருநாள் ரத்ததான முகாமை இன்று நடத்தியது.

    கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வாழ்த்துரை வழங்கினார். சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். காசிநாததுரை வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர் ராஜலிங்கம், காமராஜர் பல்கலைகழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பா ளர்கள் சிலம்பரசன், வெங்கடேஷ் பாரதி, பெரியகருப்பன், திருஞான சம்பந்தம், மற்றும் வெங்க டேஷ நரசிம்ம பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
    • முகாமில் கல்லூரியின் 80 மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முருகானந்தம், பான் செக்கர்ஸ் கல்லூரியின் இயக்குனர் டெரன்சியா மேரி, கல்லூரி முதல்வர் காயத்ரி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட சேர்மன் மருத்துவர் வரதராஜன், மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார், தஞ்சை மிராசுதார் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் காயத்ரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வித்யா மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கல்லூரியின் 80 மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர்.

    • கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் பால சுப்ரமணியன் வரவேற்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சமூக மேம்பாடு (கனடா - இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டம்), கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து தன்னார்வ ரத்த தான முகாமை கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் தலைமையேற்று தொடங்கி வைத்து ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.

    ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் பால சுப்ரமணியன் வரவேற்றார்.துணை முதல்வர் சேக் தாவூத், ரோட்டரி சங்க தலைவர் சம்சூல் கபீர் ஆகியோர் ரத்ததானம் செய்வது எப்படி நம் ஆளுமையை வடிவமைக்கிறது என்பது குறித்தும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த வங்கி மேலாளர் ரவி ரத்ததானம் கொடுப்ப வருக்கும், பெறுபவர்க்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசினார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த சேகரிப்பு மருத்துவ குழுவினரிடம் பயிலக மாணவர்கள் 96 பேர் ரத்தம் தானம் அளிக்க ஆர்வத்துடன் முன் வந்தனர்.

    முடிவில் கல்லூரியின் கனடா இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டத்தின் தொடர் கல்வி மேலாளர் நாகராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி துறைத் தலைவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், கீழக்கரை ரோட்டரி சங்க செயலர் சுப்ரமணியன், மரியதாஸ், எபன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்நிகழ்விற்கு பரிசுத்தம் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார்.
    • ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை கீழவாசலில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்விற்கு பரிசு த்தம் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். டாக்டர் ராதிகாமைக்கேல் சிறப்புரை யாற்றினார்.

    இந்த ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் ரத்ததானம் அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி முன்னாள் மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், ரத்தவங்கி மருத்துவ அலுவலர் ஹேனாஜெர்லின், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாநில செயலாளர் பாதுஷா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மன்ற கவுரவ தலைவர் பரந்தாமன், செயலாளர் சோலையப்பன், பொருளாளர் ரெங்கசாமி, ஆலோசகர்கள் பாண்டித்துரை, பழனிச்சாமி, துணை தலைவர் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் ரத்ததான முகாம்
    • பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    செல்லப்பன் வித்யா மந்திர் இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் காரைக்குடி ரோட்டரி சங்கம் இணைந்து ரத்ததான முகாமை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் ராஜேஸ்வரி, முதல்வர் வாணிபோஜன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்த்துறை தலைவர் ஜான் போஸ்கோ வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் பெரியண்ணன் முகாமை தொடங்கி வைத்தார்.

    ரோட்டரி சங்க தலைவர் சத்குரு தேவன், அரசு மருத்துவமனை ரத்த வங்கி இயக்குநர் அருள்தாஸ், ரோட்டரி சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவிகள் பிரபாஷினி, ஸ்ரீசவுந்தரி ஆகியோர் ரத்ததானம் பற்றி பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். தலைமையாசிரியர் மீரா நன்றி கூறினார்.

    ×