என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்டாளி மக்கள் கட்சி"

    • மாநாட்டை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
    • அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தால் நடவடிக்கை.

    செங்கல்பட்டு மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 11ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் (FL1. FL2. FL3. FL3A. FL3AA, மற்றும் FL11) மூடப்பட்டிருக்கும் என்றுதெரிவிக்கப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் FL1. FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிம நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துக் கொள்கிறார்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • முடிவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமையில் ராமநாதபுரம் நகரச் செயலா ளர் பாலாகுமார் முன்னிலை யில் கொண்டாடப்பட்டது.

    ராமநாதபுரம் நகர் பகுதியில் கொடிக்கம்பங்களில் புதிய கொடிகள் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கவுன்சிலர் மருது பாண்டியனை சந்தித்து இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பனைக்குளம் நூருல் அமீன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளிமுத்து, மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம்கான், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் ஷெரிப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், ராமநாதபுரம் ஒன்றிய துணை செயலாளர் கனகு மற்றும் பலர் கலந்து கொண் டனர். முடிவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கேணிக் கரை கிரசெண்ட் (பிறை) ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் (கி) தேனி சை.அக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ் மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரசெண்ட் (பிறை) ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உரிமையாளர் பயாஸ் அகமது வரவேற்றார்.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் பொறியாளர் கர்ண மஹாராஜா, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா, மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் ஷரீப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன்,இளைஞர் சங்க செயலாளர் துல்கர்,இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம் ,மாணவர் சங்க செயலாளர் சந்தோசம்,கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி,உழவர் பேரியக்கம் தலைவர் ஐ.பி.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    ×