search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    X

    காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    • காந்திஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • இத்தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    மதுரை

    சென்னை, முதன்மை தொழிலாளர் ஆணையர் டாக்டர் அதுல்ஆனந்த் உத்தரவின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் குமரன் மற்றும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்ரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் விருதுநகர், தொழிலாளர் உதவிஆணையர் (அம லாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு தொழில் நிறு வனங்கள் (தேசியபண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958ன்படி, தேசிய விடுமுறை தினமாகிய காந்தி ஜெயந்தி தினத்தன்று (2.10.2022) கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும். மேற்படி தினத்தில் விடு முறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டு மானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்படவேண்டும்.

    மேற்படி தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலாளர்களிடம் கடைகள் மற்றும் நிறுவனங்கள் 5.ஏ. என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு 4இ.இ. என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் 12ஏ. என்ற படிவத்திலும் கையொப்பம் பெற்று, அதனை தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிதிகளை அனுசரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 37 கடைகள், நிறுவனங்கள், 23 உணவு நிறுவனங்கள் மற்றும் ஒரு மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆக மொத்தம் 61 நிறுவனங்க ளில் முரண்பாடு கண்ட றியப்பட்டு, சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958 தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும். இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பளபட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இத்தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×