search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Dress"

    • கோவில்களில் ஏழை, எளியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது.
    • புத்தாடை, மிக்ஸி, பீரோ உள்பட பல்வேறு சீர்வரிசை பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். இதற்கான செலவை கோவில்களே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஏழை, எளியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று தஞ்சை இணை ஆணையர் மண்டலத்தின் சார்பில் 19 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

    இதில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 9 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்க ளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் புத்தாடை, மிக்ஸி, பீரோ, கட்டில், 4 கிராம் திருமாங்கல்யம் உள்பட பல்வேறு சீர்வரிசை பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட அறங்கா வலர் குழு உறுப்பினர் அரசாபகரன், தஞ்சை மண்டல இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் அரண்மனை தேவஸ்தானம் கவிதா, தஞ்சை உதவி ஆணையர் நாகையா, கவுன்சிலர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவிலில் 2 ஏழை ஜோடிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவி லில் 5 ஜோடிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 3 ஜோடிகள் என தஞ்சாவூர் இணை ஆணையர் மண்டல எல்லைக்கு உட்பட்ட கோவில்களில் 19 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

    • தீபாவளி பண்டிகையை அதன் சுற்றுபகுதியில் நரிக்குறவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடன் கொண்டாடி வருகிறார்.
    • மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடுசுந்தரரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியா ற்றுபவர் வசந்தா . வேதாரண்யம் பகுதிகளில் நிறைய சமூக சேவைகளை ஆற்றுபவர்.

    பற்றி மாணவர்களுக்கு மழை காலங்களில் பற்றி வருவது தடைபட கூடாது என கருதி இதுவரை ஜந்து ஆயிரம் குடைகளை பற்றி மாணவர்களுக்கு வழங்கி உள்ளார் அது போல் இதுவரை பொது மக்களுக்கு 5 லட்சம் முககவசம் வழங்கி உள்ளார்

    பல்வேறுசமூகப் சேவை பணிகளுக்காக ஜம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.இவர் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நரிகுறவர்கள் ( நாடோடிகள்) மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடன் கொண்டாடி வருகிறார்.

    அதேபோல் இந்த ஆண்டும்வேதாரண்யத்தை அடுத்த அண்டர் காடு, ஆயக்காரன்புலம், வாய்மேடு ,தாணிக்கோட்டகம் மற்றும் இடும்பாவனம் பகுதிகளில் சாலை ஓரங்களில் தற்காலிக குடிசைகளில் நிரந்தரமாக வசித்து வரும்40 நாடோடி குடும்பங்களைச் சேர்ந்த 125 க்கு மேற்பட்டவர்களுடனும் வீதிகளிலும் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்த 50 நபர்களுடனும்தீபாவளியை கொண்டாடினார்.

    இதில் கலந்துகொண்ட நாடோடிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குஅன்பளிப்பு , புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், மற்றும் காலை உணவு வழங்கினார்

    நிகழ்ச்சியில்சமூக ஆர்வலர் சித்திரவேல், மற்றும்ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள்கலந்து கொண்டனர். படவிளக்கம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காட்டில் நரிகுறவர்களுக்கு புத்தாடைகளை ஆசிரியை வசந்தா வழங்கினார்

    • திருநகரியில் நடந்த விழாவில் 350 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நெப்பத்தூர் மீனாட்சி உதவிபெறும் தொடக்கபள்ளி மாணவர்களுக்கு குடைகளை வழங்கினார்.

    சீர்காழி:

    விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 60வது மணி விழா பிறந்தநாளையொட்டி திருவெண்காடு பகுதியில் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    விடுதலை கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவனின் மணிவிழா பிறந்தநாளை யொட்டி திருவெண்காடு பகுதியில் கட்சியினர் பல்வேறு நலத்திட்டஉதவி களை வழங்கினர்.

    திருநகரியின் நடந்த விழாவில் 350 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழச்சிக்கு முன்னாள் நெப்பத்தூர் ஊராட்சி த்தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

    கட்சி நிர்வாகி ஸ்டாலின் வரவேற்றார்.

    இதில் வி.சி.க முன்னாள் மாவட்ட செயலாளர் மா.ஈழவளவன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

    மேலும் அவர் கீழ நெப்பத்தூர் மேற்கு ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பட்டன.

    மேலும் நெப்பத்தூர் மீனாட்சி உதவிபெறும் தொடக்கபள்ளி மாணவ ர்களுக்கு குடைகள் ஆகியவற்றை வழங்கினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் பாரதிவளவன், சிவக்குமார், ரகுராஜ் உள்ளிட்டதிரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இதனைதொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப ட்டன.

    ×