search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A.D.M.U. 51st Annual"

    • அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா ராமநாதபுரம், கீழக்கரை, திருப்புல்லாணியில் கொண்டாடப்பட்டது.
    • தொடர்ந்து 51 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அ. தி. மு. க. பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கி ணங்க, மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில், நகர் செயலாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் அரண்மனை அருகே அ.தி.மு.க.51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. முன்னதாக அ.தி.மு.க.கட்சி கொடியினை மாவட்ட செயலாளர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து 51 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரண்ம னையில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் வாழ்த்து பெற்றனர். விழாவில் மாவட்ட அவைத்தலைவர் சாமிநா தன்,எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், செந்தில்குமார், சரவ ணகுமார், திலகர், ராதாகிருஷ்ணன், ஜெயல லிதா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், ராமநா தபுரம் நகர் துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை இந்து பஜாரில் அ.தி.மு,க, 51 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அவைத் தலைவர் சரவண பாலாஜி தலைமையில் நகர செயலாளர் ஜகுபர் உசேன் முன்னிலையில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இதில் துணைச்செய லாளர் குமரன், பொரு ளாளர் ஹரி நாராயணன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் வேலன், முன்னாள் நகர செயலாளர் இம்பாலா உசேன், கருப்பையா, முனியசாமி, பாருக், விஜி காசிநாதன், அங்குசாமி, சிவா, சிவராமலிங்கம், பிரதீபன், முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 51-ம் ஆண்டுதொடக்க விழாவை யொட்டி ஒன்றிய செய லாளர் கருப்பையா தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல் திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் பாக்கியநாதன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் அ. தி.மு,க.கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் ஏராள மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×