search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக கண் பார்வை தின விழா
    X

    உலக கண் பார்வை தின விழா

    • ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழா நடந்தது.
    • கண் பார்வையினை பாதுகாக்க ஆலோசனை வழங்கினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவமனை, கண் மருத்துவப்பிரிவு. இணைந்து உலக கண் பார்வை தின விழாவை நடத்தியது.

    செவிலியர் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார். தலைமை பொறுப்பு மருத்துவர் உமா ஜெயபாஸ்கர் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுரேஷ், சீனிவாசன், மேகலா, அருண், கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளர், தலைமை கண் மருத்துவர் பொன்னுசாமி, கண்களை பாதுகாப்பது, கண்ணில் ஏற்படும் கண்நோய்கள், அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயினால் ஏற்படும் பார்வை இழப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கண் மருத்துவர் நதியா குழந்தை பிறந்தவுடன் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய, கண் புரை அறுவை சிகிச்சைக்குப்பின் கண் பார்வையினை பாதுகாக்க ஆலோசனை வழங்கினார். இதில் பொதுமக்கள் மற்றும் வெளிநோயாளிகள் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் கலந்துகொண்டனர். முதுநிலை கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ், கண் மருத்துவ உதவியாளர் பிரேமா ஆகியோர் நன்றி கூறினர்.

    Next Story
    ×