search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாரணை"

    • இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.
    • தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு.

    பெங்களூரு:

    பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோவில் இருந்த மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா சார்பில் அவரது வக்கீல் பவன்சாகர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் விசாரணை நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி விசாரணையை இன்று ஒத்திவைத்தார். எனவே இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.

    பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பான வழக்கை விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ஆபாசமான வீடியோக்கள், புடைப்படங்களை பகிர்வது மட்டுமல்ல, அவற்றை வைத்திருப்பதும் குற்றம். தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்தி ருந்தால் கண்டுபிடிப்பது எளிது. எனவே இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புடைப்படங்களை யாராவது வைத்திருந்தால், அவற்றை அழித்து விடுவதன் மூலம் சட்ட நடவடிக்கைகளில் இருந்த தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.
    • நாற்காலியில் அமர்ந்தபடியே இரவில் தூங்கினார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா (64). எம்.எல்.ஏ.வாக உள்ள இவர் மீதும், அவரது மகன் பிரஜ்வால் மீதும் வீட்டு பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது தாயை ரேவண்ணா அவரது மனைவி பவானியின் உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கடத்தி சென்றதாக புகார் செய்தார். அதன் அடிப்படையில் கே.ஆர்.நகர் போலீசார் ரேவண்ணா, சதீஸ்பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு வீடியோவில் ஆபாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    எனவே அந்த பெண் பிரஜ்வால் மீது புகார் கொடுக்காமல் இருக்க ரேவண்ணா மற்றும் சதீஸ்பாபு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சதீஸ்பாபுவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரேவண்ணா பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரத்தில் தேவகவுடா வீட்டில் பதுங்கி இருந்த ரேவண்ணாவை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

    பின்னர் பெங்களூரு பவுரிங் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்று விடிய, விடிய விசாரணை நடத்தினர். சுமார் 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் ரேவண்ணா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் அவரை காவிலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.

    இதையடுத்து ரேவண்ணாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

    இதையடுத்து ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள ஒரு அறையில் அவரிடம் விசாரணை தொடங்கியது.

    அவரிடம் பாலியல் பலாத்கார புகார்கள் மற்றும் பெண் கடத்தல் தொடர்பாகவும் அவரது மகன் பிரஜ்வால் குறித்தும் போலீசார் விசாரித்தனர். நள்ளிரவு வரை இந்த விசாரணை நடந்தது.

    பின்னர் ரேவண்ணாவை விசாரணைக்குழு அதிகாரிகள் படுத்து ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆனால் அவர் கீழே படுத்து தூங்க மறுத்துவிட்டார். நாற்காலியில் அமர்ந்தபடியே இரவில் தூங்கினார்.

    காலையில் எழுந்து விசாரணைக்குழு அலுவலகத்திலேயே ரேவண்ணா குளித்தார். தொடர்ந்து காலை உணவும் சாப்பிட்டார். இதையடுத்து மீண்டும் காலை 10 மணி முதல் அவரிடம் விசாரணை தொடங்கியது. எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் மற்றும் பிற அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காத ரேவண்ணா இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    அப்போது அதிகாரிகள் சில ஆதாரங்களை முன்வைத்து கேள்விகளை கேட்டனர். அப்போது ரேவண்ணா அமைதியாக இருந்துள்ளார்.

    தொடர்ந்து ரேவண்ணாவை போலீசார் போட்டோ எடுத்தனர். அவரது கை ரேகைகளும் பெறப்பட்டது. முதலில் போட்டோ எடுக்கவும், கை ரேகை பெறவும் ரேவண்ணா எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது போலீசார் நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதையடுத்து ரேவண்ணா ஒத்துழைத்தார். தொடர்ந்து ரேவண்ணாவிடம் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ரேவண்ணாவால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    பின்னர் அந்த பெண்ணை அவரது மகனுடன் பாதுகாப்பான இடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ரேவண்ணாவிடம் விசாரணை முடிவடைந்த பின்பு மீண்டும் 8-ந் தேதி அவரை கோர்ட்டில் போலீசார் அஜர்படுத்த உள்ளனர். விசாரணை நடந்து வரும் அலுவலகத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • எச்.டி.ரேவண்ணா மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார்
    • எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார்.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக எச்.டி.ரேவண்ணாவின் உறவினரான சதீஸ் பாபுவை போலீசார் கைது செய்திருந்த நிலையில், எச்.டி.ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இருக்கும் இடத்தை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

    இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த சில நிமிடத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தது.

    அவரை அரண்மனை சாலையில் உள்ள கார்ல்டன் கட்டிடத்தில் இயங்கி வரும் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா குறித்தும் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ரேவண்ணாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு பெங்களூரு 17வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    • பக்‌சிஷ் சிங் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத் தளத்தில் பரவியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பந்தலா கிராமத்தில் உள்ள குருத்வாரா வளாகத்திற்குள் பக்சிஷ் சிங் என்ற வாலிபர் நுழைந்து அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பின் சில பக்கங்களை கிழித்ததாக கூறி அவரை சிலர் கும்பலாக சரமாரியாக தாக்கினர்.

    படுகாயம் அடைந்த அவரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

    பக்சிஷ் சிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக அவர் 2 ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது தந்தை லக்விந்தர் சிங் தெரிவித்தார். தனது மகனைக் கொன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசில் புகார் செய்தார்.

    அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பக்சிஷ் சிங் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத் தளத்தில் பரவியது. அதில் பக்ஷிஷ் கைகள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அமர்ந்திருப்பதும், ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து தாக்குவதும் இடம் பெற்றுள்ளது.

    • சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை.
    • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக `புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க பரிந்துரை.

    பாலியல் புகாரில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஆஜராக கூறி ஏற்கனவே ஒருமுறை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

    ஆனால் ஜெர்மனியில் இருப்பதால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தகவல் தெரிவித்த பிரஜ்வல் ரேவண்ணா, அவரது வக்கீல் மூலம் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் கேட்டார். அதை ஏற்காத சிறப்பு புலனாய்வு குழு போலீசார், தேடப்படும் நபராக பிரஜ்வல் ரேவண்ணாவை அறிவித்து லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கினர்.

    இவ்வழக்கில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சி.பி.ஐ. 'புளூ கார்னர்' நோட்டீஸ் வழங்கினால் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருக்கிறார் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

    இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 'புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க மத்திய உளவுத்துறை (இன்டர்போல்) உடன் நேரடி தொடர்பில் உள்ள சி.பி.ஐ.யிடம் கர்நாடக அரசு மூலம் பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டில் வைத்து கைது செய்து அழைத்து வர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா துபாயில் இருந்து இன்று பிற்பகல் பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு படையினர் பெங்களூர் தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு வைத்து அவரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

    • பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார். அதன் அடிப்படையில் 2 பேர் மீதும் கர்நாடக மாநில கூடுதல் டி.ஜி.பி. பிஜய்குமார் சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தனது தாயை எச்.டி.ரேவண்ணாவும், அவரது ஆதரவாளரும், பவானி ரேவண்ணாவின் உறவினருமான சதீஸ் பாபு ஆகியோர் சேர்ந்து கடத்திச் சென்றுவிட்டதாக அந்த பெண்ணின் மகன் கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக பவானி ரேவண்ணாவின் உறவினரான சதீஸ் பாபுவை போலீசார் கைது செய்திருந்த நிலையில், எச்.டி.ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இருக்கும் இடத்தை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கண்டுபிடித்தனர். அந்த பெண் எச்.டி.ரேவண்ணாவின் உதவியாளரும், ஏற்கனவே கைதான சதீஸ் பாபுவின் உறவினருமான ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருப்பதும், அந்த வீடு மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா காலேனஹள்ளி கிராமத்தில் இருப்பதும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

    இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த 5 நிமிடத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் புறப்பட்டு பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் வீட்டுக்கு வந்தனர்.

    சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீட்டின் கதவை திறக்குமாறு கூறி தட்டினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்பு எச்.டி.ரேவண்ணா கதவை திறந்து வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் பெண்ணை கடத்தியது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் தங்களை கைது செய்வதாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தெரிவித்தனர். பின்னர் எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் பெங்களூரு பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது ரத்த அழுத்த மற்றும் உடல்நிலை குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவரை அரண்மனை சாலையில் உள்ள கார்ல்டன் கட்டிடத்தில் இயங்கி வரும் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அவரிடம் போலீசார் பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது மகன் பிரஜ்வால் குறித்தும் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டு உள்ளனர். அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் வர தடை விதிக்கப் பட்டு உள்ளது. மேலும் ரேவண்ணா கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர். இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ரேவண்ணாவிடம் விசாரணை நடத்திய பின்பு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவரை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்தவும் சிறப்பு விசார ணைக்குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தேவகவுடாவின் மகனான ரேவண்ணா கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சந்திரசேகரனின் செல்போன் எண் சிக்னல் மூலம் போலீசார் தேடிவந்தனர்.
    • தென்காசி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவராக சந்திரசேகரன் இருந்து வருகிறார். தற்போது தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியிலுள்ள திருநகரில் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாகவும், அப்பொழுது அவரது மனைவி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது ஆத்திரத்தில் அவர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சந்திரசேகரை வெட்டி விட்டு சென்று விட்டதாகவும் புகார் ஒன்றை தென்காசி போலீஸ் நிலையத்தில் அளித்திருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கிய போது, கொள்ளை அடிக்க வந்ததாக கூறப்படும் நபர்கள் சந்திரசேகரின் செல்போனை எடுத்து சென்றதும், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒரு கைப்பையை அங்கே விட்டு சென்றதும் தெரியவந்தது.

    அதனைத்தொடர்ந்து அவர்கள் விட்டு சென்ற கைப்பையை எடுத்து போலீசார் சோதனை செய்த போது, அவர்கள் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என சந்திரசேகரனின் செல்போன் எண் சிக்னல் மூலம் போலீசார் தேடிவந்தனர்.

    அந்த செல்போன் எண்ணின் சிக்னல் மூலம் அவர்கள் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை பின் தொடர்ந்து சென்ற தென்காசி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கூலிப்படை போல் செயல்பட்டதும், அவர்களை தென்காசி பகுதியை சேர்ந்த 2 பேர் இதுபோல் செய்ய சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தென்காசி பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளநீர் கண்ணன் மற்றும் சக்திமாரி ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் தி.மு.க. ஊராட்சி தலைவரான சந்திரசேகரனிடம், அவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது போன்று ஆடியோ இருப்பதாகவும், செல்போன் செயலி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ உள்ளதாக கூறி சந்திரசேகரனை பணம் கேட்டு மிரட்ட முடிவு செய்து, அதன்படி, கோயம்புத்தூர் கும்பலை இங்கு வந்து வீடியோ மற்றும் ஆடியோக்கள் உள்ளதாக கூறி சந்திரசேகரனை மிரட்டி உள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரச்சினை ஏற்படவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து சந்திரசேகரனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சக்திமாரி (வயது 47), ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), தேனி பகுதியை சேர்ந்த ரிஸ்வான் (22), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதன்குமார் (20) கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த போத்திராஜ் (30), கோவை பகுதியை சேர்ந்த அருள் ஆகாஷ் (34) மற்றும் முக்கிய குற்றவாளியான தென்காசி பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளநீர் கண்ணன் (40) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
    • காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மாயமான நிலையில் நேற்று இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கே.பி.கே. ஜெயக்குமாரின் பூத உடலை அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் பெற்றுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கே.பி.கே. ஜெயக்குமார் ஒரு நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர். அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் எந்த கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இன்று மாலைக்குள் ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்.பி என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் யாருடைய பெயர்கள் இருந்தாலும் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    எங்கள் கட்சியை சேர்ந்த வர்களாக இருந்தாலும் கூட காவல்துறை வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால் தான் இவர் உயிர் இழப்புக்கு யார் காரணம் என்பது வெளியே வரும்.

    மேலும் நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து மேலிடத்திற்கு இந்த அறிக்கையை அனுப்புவோம். காவல்துறை விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருப்பதன் காரணமாக மற்ற தகவல்கள் எங்களால் வெளியே தெரிவிக்க முடியாது.

    இதில் பணம் படைத்தவராக இருக்கலாம். மிகப்பெரிய அரசியல்வாதியாக கூட இருக்கலாம். அப்படி இருந்தாலும்கூட அவர்கள் மீதும் காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் உள்ள தாக எங்கள் கட்சிக்காரர்கள் என்னிடம் தெரிவித்துள்ளா ர்கள். அதேபோன்ற புகைப்பட ங்களும் வெளியாகி உள்ளது. ஆகவே இதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இந்த விசாரணை என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். மேலும் உயிரிழந்த ஜெயக்குமாரின் கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏதோ ஒரு சம்பவம் நடை பெற்றுள்ளதாக எங்களுக்கு தெரிகிறது.

    ஆகவே தான் நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கி றோம் வெளிப்படையான விசாரணை மேற்கொண்டால்தான் இவருடைய உயிர் இழப்புக்கு காரணம் என்ன என்பது வெளியே தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கிள்ளியூர் ராஜேஷ் குமார், விஜய் வசந்த் எம்.பி., நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பண்டியன் மற்றும் திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து நெல்லூருக்கு வந்தே பாரத் ரெயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    2 வாலிபர்கள் வைத்திருந்த சூட்கேஸை போலீசார் சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.50 லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் ஆத்மகூரு சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. வேட்பாளராக போட்டியிடும் மேகவதி விக்ரம் ரெட்டிக்கு சொந்தமான பணம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வருமானவரித்துறை அதிகாரிகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் சூரிக் காடு பீமநதி பகுதியை சேர்ந்தவர் சுதாகரன்(வயது 52). இவரது மனைவி அஜிதா(35). இவர்களுக்கு சவுரவ் என்ற மகன் இருக்கிறார். சவுரவ் கோழிக்கோட்டில் சி.ஏ படிப்பதற்கு, அங்குள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ளார்.

    அவரை விடுதியில் விட்டுவிட்டு வருவதற்காக சுதாகரன், அவரது மனைவி, மாமனார் கிருஷ்ணன் (65) மற்றும் மனைவியின் அண்ணன் மகன் ஆகாஷ்(9) ஆகியோர் காரில் தலச்சேரியில் இருந்து காசர்கோடு நோக்கி சென்றனர்.

    காரை காசர்கோடு மாவட்டம் காளிச்சநடுக்கம் சாஸ்தம்பாறை பகுதியைச் சேர்ந்த பத்மகுமார் 59 என்பவர் ஓட்டிச் சென்றார். சவுரவ்வை விடுதியில் விட்டுவிட்டு சுதாகரன் உள்ளிட்ட மற்றவர்கள் காரில் திரும்பி வந்தனர். அவர்களது கார் கண்ணூர் செருக்குன்னு அருகே உள்ள புன்னச்சேரி பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

    அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ஒரு லாரி, காரின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் அவர்களது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் அவர்களது கார், லாரியின் முன்பதிக்குள் புகுந்தது.

    காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த கோரவிபத்து குறித்து கண்ணபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    முதலில் அவர்கள் லாரிக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்தனர். பின்பு காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அப்போது காரில் இருந்த சுதாகரன், அவரது மனைவி அஜிதா, மாமனார் கிருஷ்ணன், டிரைவர் பத்மகுமார் ஆகிய 4பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியாகியிருப்பது தெரியவந்தது.


    மேலும் அந்த காரில் இருந்த சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவனை போலீசார் மீட்டு பரியாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 5பேருமே விபத்தில் பலியாகிவிட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோர விபத்தில் சிறுவன் உள்பட 5பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
    • தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐ.எம்.ஓ. என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற முகவரியில் இருந்து தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.

    அவர், மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டு உள்ளார்.

    அதனை நம்பிய இளைஞர் ரூ. 4 லட்சம் 88 ஆயிரத்து 159 பணத்தை 'ஜிபே' மூலம் அனுப்பி உள்ளார்.

    பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இளைஞர் இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (வயது31) என்பவர், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று ராஜவேலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனை செய்யக் கூடிய பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பார்சல் இருந்தது.
    • 1,200 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் என கணக்கிடப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் அதிகளவில் விமானங்கள் வருவது வழக்கம். வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பயணிகளின் உடமைகள், பாஸ்போர்ட் போன்றவற்றை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.

    பரபரப்பாக காணப்படும் விமான நிலையத்தில் நேற்றிரவு தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சோதனை செய்யக் கூடிய பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பார்சல் இருந்தது. அதனை எடுத்த ஊழியர் ஒருவர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் தங்க கட்டிகள் இருந்தன. 1,200 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் என கணக்கிடப்பட்டது.

    வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பயணி யாரோ ஒருவர் பரிசோதனையின் போது சிக்கி கொள்வோம் என பயந்து குப்பை தொட்டியில் போட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் உள்ள பதிவினை ஆய்வு செய்தனர். அதில் முகம் தெளிவாக தெரியவில்லை. அதனை தொடர்ந்து மற்ற கோணங்களில் பதிவான கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×