search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beaten to death"

    • முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த தூசி நத்த கொள்ளையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. வெம்பாக்கத்தில் காஞ்சிபுரம்- கலவை சாலையில் தனியார் பள்ளி எதிரே குளக்கரையில் செல்வராஜ் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பிரம்மதேசம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது செல்வராஜின் அருகே இரும்பு ராடும் அவரது தலையில் வெட்டு காயங்களும் இருந்தது. வாலிபரை மர்ம நபர் யாரோ இரும்பு ராடால் சரமாரியாக அடித்தும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி உடலுறவுக்கு மறுத்ததால் தகராறு
    • மகன் வெறிச்செயல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், சு.பள்ளிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கீழ் குரும்பர் தெருவை சேர்ந்தவர் ஜெயபால்( வயது 42). இவரது மனைவி சிவகாமி (34) , உமேஷ்(20) மகன், சுகன்யா(19) மகள் உள்ளனர். ஜெயபால் கட்டிட மேஸ்திரியாக பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜெயபால் பெங்களூரில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது ஜெயபால் மனைவியை உடலுறவிற்கு அழைத்துள்ளார். இதற்கு சிவகாமி மறுத்துள்ளார். அப்போது கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெயபால், மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினார்.

    இதனை பார்த்த அவரது மகன் உமேஷ், அருகில் இருந்த கட்டையை எடுத்து ஜெயபாலின் தலையின் பின்பக்கம் ஓங்கி அடித்தார். இதில் மயங்கி விழுந்த அவர், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து உமேஷ் மற்றும் சிவகாமியை படித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிகிச்சை பெற்று வந்த ரகுபதி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
    • சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தில் வசிப்பவர் விஸ்வநாதன். இவரது தம்பி சாரங்கபாணி. இவ்விரு குடும்பத்தாருக்கு இடையே சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில், விஸ்வநாதன், அவரது மனைவி கஸ்தூரி, மகன் ரகுபதி, மருமகள் வைதேகி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் சாரங்கபாணி, அவரது மனைவி ராஜாமணி, மகன்கள் உதயசூரியன், ரஞ்சினிகுமார், மருமகள்கள் அனிதா, பரிமளா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியல் சிகிச்சை பெற்று வந்த ரகுபதி (எலக்ட்ரீசியன்) நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார், இந்த வழக்கினை கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரகுபதியின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர்.

    அதன்படி, சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள உதயசூரியன், ரஞ்சினிகுமார், பரிமளா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாரங்கபாணி உறவினர் வீடுகளில் இரவு நேரங்களில் நெய்வேலி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் நெய்வேலியை விட்டு தப்பிச் செல்லமுடியாதவாறு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
    • தனியாக வசித்து வந்த சுப்பிரமணி அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்து வந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ருக்குமணி 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவருக்கு முருகன் (55), பாஸ்கர் (53) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முரு கன் ஆட்டையாம்பட்டியில் சுகாதார ஆய்வாளராக உள்ளார். பாஸ்கர் குடும்பத்துடன் புதுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த சுப்பிரமணி அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்து வந்தார்.

    இன்று காலை சுப்பிரமணி வேலைக்கு வராததால் மணிகண்டன் அவரை தேடி வீட்டுக்கு வந்தார். அங்கு கட்டிலில் படுத்த நிலையில் சுப்பிர மணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி சுப்பிரமணியின் மகன்க ளுக்கும், நாமகிரிபேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மர்ம நபர்கள் கட்டில் சட்டத்தால் தாக்கி சுப்பிரமணியை கொலை செய்துள்ளனர். அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? சுப்பிர மணிக்கும் வேறு யாருக்கும் முன்விரோதம், பகை உள்ளதா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தது. யாரயும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்த கொலை சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வக்கீல் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அஸ்வின் மற்றும் சீரஞ்சிவிக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் சீரஞ்சிவி (வயது 26). இவர் பழைய கார்களை வாங்கி விற்பது, கார் அடகு வைக்கும் தொழில் செய்து வந்தார். சவுரிபாளையத்தை சேர்ந்தவர் அஸ்வின்(39). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். 2 பேரும் சேர்ந்து தான் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்வினிடம் ஒரு நபர், காரை கொடுத்து பணம் தருமாறு கூறியதாக தெரிகிறது. அதன்பேரில் அஸ்வினும் அந்த காரை வாங்கி, சீரஞ்சிவியிடம் கொடுத்தார். சீரஞ்சிவி அந்த காரை ரூ.3 லட்சத்திற்கு விற்று விட்டார்.

    இந்த நிலையில் அஸ்வினிடம் காரை கொடுத்த நபர் தனது கார் தனக்கு திரும்ப வேண்டும். அதனை தற்போது கொடுத்து விடு என கேட்டார்.

    இதனையடுத்து அஸ்வின், சீரஞ்சிவியை சந்தித்து, நான் உன்னிடம் கொடுத்த காரை திருப்பி கொடுத்து விடு. காரை கொடுத்த நபர் கேட்கிறார் என தெரிவித்தார்.

    அப்போது அவர் காரை விற்று விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டதும் அதிர்ச்சியான அஸ்வின் நான் உன்னிடம் அடகுக்காக தானே கொடுத்தேன். நீ எப்படி விற்கலாம் என தெரிவித்தார். இதனால் 2 பேருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக 2 பேருக்குமே முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே காரை கொடுத்த நபர் தொடர்ந்து போன் செய்து அஸ்வினிடம் காரை கேட்டு வந்தார்.

    இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் இதுகுறித்து தனது நண்பர்களான நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த கண்ணன் (26), நாங்குநேரியை சேர்ந்த முத்தையா (வயது 33), வேடப்பட்டியை சேர்ந்த ஆனந்தபாபுவிடம் (49) தெரிவித்தார். இவர்களில் கண்ணன் டிரைவராகவும், முத்தையா வக்கீலாகவும், ஆனந்தபாபு பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தனர்.

    அஸ்வினின் புலம்பலை கேட்ட அவரது நண்பர்கள், சீரஞ்சிவியை சந்திக்க வர சொல். அவரிடம் இது சம்பந்தமாக பேசுவோம் என கூறினர்.

    அதன்படி கடந்த 22-ந் தேதி இரவு அஸ்வின் சீரஞ்சிவியை தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும். மருதமலை ரோட்டிற்கு வா என அழைத்தார். இதனை நம்பி சீரஞ்சிவியும் அங்கு சென்றார்.

    அப்போது அங்கு அஸ்வின் தனது நண்பர்களுடன் நின்றிருந்தார். சீரஞ்சிவி வந்ததும், அஸ்வின் கார் சம்பந்தமான பேச்சை எடுத்தார். இதனால் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அஸ்வின் தனது நண்பர்களுடன் சேர்ந்து சீரஞ்சிவியை அங்கு கிடந்த கட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்து விட்டார்.

    பின்னர் அவரை அங்கேயே போட்டு விட்டு 4 பேரும் சென்று விட்டனர். மறுநாள் காலை அந்த வழியாக வந்த 2 பேர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சீரஞ்சிவியை பார்த்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே சீரஞ்சிவி தாக்கப்பட்ட தகவல் ஆஸ்பத்திரி மூலமாக அவரது தந்தைக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் விரைந்து சென்று தனது மகனை மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மேலும் இதுகுறித்து வடவள்ளி போலீசிலும் சீரஞ்சிவியின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அஸ்வின் உள்பட 4 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சீரஞ்சிவி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

    தொடர்ந்து சீரஞ்சிவியை அடித்து கொலை செய்த அஸ்வின், அவரது நண்பர்களான கண்ணன், முத்தையா, ஆனந்தபாபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • கடந்த 5 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோவை, -

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலை யாண்டிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 40). தொழிலாளி. இந்தநிலையில் இவர் கடந்த 5 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    சோமசுந்தரம் எப்போதும் வீட்டின் அருகே உள்ள பகவதியம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்று தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று சோமசுந்தரம் வழக்கம்போல தூங்குவதற்கு மண்டபத்திற்கு சென்றார். அங்கு தனது நண்பர் பூபதி என்பவருடன் பேசி கொண்டு படுத்திருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் அங்கு மதுபாட்டிலுடன் வந்தார். பின்னர் மண்டபத்தில் அமர்ந்து மதுகுடித்தார். இதனை பார்த்த சோமசுந்தரம் அந்த வாலிபரிடம் கோவில் மண்டபத்தில் மதுகுடிக்க கூடாது என கண்டித்தார்.

    கொலை வழக்கு

    இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து சோமசுந்தரத்தின் தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இதுகுறித்து கோட்டூர் போலீசார் அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ராம்குமார் (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சோமசுந்தரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே மர வேலை தொழிலாளி அடித்துக்கொலை? போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
    • கார்த்திகேயன் அணிந்திருந்த கைலி மற்றும் உடலில் லேசான காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு வாண்டராசன் குப்பம் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). மரவேலை செய்து வந்தார். இவர் இன்று காலை நடுவீரப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உடலில் லேசான காயத்துடன் இறந்த நிலையில் கிடந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து நடுவீரப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த நிலையில் இருந்த கார்த்திகேயன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் எப்படி இறந்தார்? இவருடன் யாராவது இருந்தார்களா? என்பதை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உறவினர்கள், கார்த்திகேயன் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. மேலும் கார்த்திகேயன் அணிந்திருந்த கைலி மற்றும் உடலில் லேசான காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடும்பப்பிரச்சனை காரணமாக 16 வயது சிறுமியை வளர்ப்புத்தாய் கொடூரமாக அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #stepmother #Minorgirl
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் சாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷோகின். இவருக்கு ஷாமின் என்ற 16 வயது மகள் உள்ளார். ஷோகின் சிதாரா பேகம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
          
    இந்நிலையில், நேற்று ஷாம்னுக்கும், அவரது வளர்ப்புத்தாய் பேகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துக்கொண்டனர். சண்டை முற்றிய நிலையில், பேகம் தனது வளர்ப்பு மகளை கொடூரமாக அடித்துக்கொன்றார். இதற்கு ஷோகினும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இக்கொலை குறித்து ஷாம்னியின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேகம் மற்றும் அவரது கணவர் ஷோகின் இருவரையும் கைது செய்தனர். இக்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #stepmother #Minorgirl
    ×