search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் அருகே பயங்கரம் ஓய்வுபெற்ற மின் ஊழியர் அடித்துக்கொலை
    X

    கொலை நடந்த இடத்தை டி.எஸ்.பி. செந்தில்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்திய காட்சி.

    ராசிபுரம் அருகே பயங்கரம் ஓய்வுபெற்ற மின் ஊழியர் அடித்துக்கொலை

    • சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
    • தனியாக வசித்து வந்த சுப்பிரமணி அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்து வந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ருக்குமணி 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவருக்கு முருகன் (55), பாஸ்கர் (53) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முரு கன் ஆட்டையாம்பட்டியில் சுகாதார ஆய்வாளராக உள்ளார். பாஸ்கர் குடும்பத்துடன் புதுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த சுப்பிரமணி அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்து வந்தார்.

    இன்று காலை சுப்பிரமணி வேலைக்கு வராததால் மணிகண்டன் அவரை தேடி வீட்டுக்கு வந்தார். அங்கு கட்டிலில் படுத்த நிலையில் சுப்பிர மணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி சுப்பிரமணியின் மகன்க ளுக்கும், நாமகிரிபேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மர்ம நபர்கள் கட்டில் சட்டத்தால் தாக்கி சுப்பிரமணியை கொலை செய்துள்ளனர். அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? சுப்பிர மணிக்கும் வேறு யாருக்கும் முன்விரோதம், பகை உள்ளதா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தது. யாரயும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்த கொலை சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×