என் மலர்
நீங்கள் தேடியது "பாலியல் வழக்கு"
- திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கேரள நடிகைகள் கூட்டமைப்பு முடிவு
- பேருந்தில் நடிகர் திலீப்பின் `பறக்கும் தளிகா' படம் ஒளிபரப்பப்பட்டது
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து தொட்டில்பாலம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் நடிகர் திலீப்பின் `பறக்கும் தளிகா' படம் ஒளிபரப்பியதை கண்டித்து பெண் பயணி ஒருவர் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து படம் பாதியில் நிறுத்தபப்பட்டது.
இதனால் படத்தை ஆர்வமுடன் ரசித்து பார்த்து வந்த சில ஆண் பயணிகள் ஆத்திரமடைந்து, அந்த பெண் பயணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாள் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது.
நடிகை பாலியல் வழக்கு தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள சமயத்தில் கேரளாவில் இச்சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
- 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
- 2020-ம் ஆண்டிலேயே இந்த வழக்கில் ஏதோ சரியில்லை என்பதை நான் உணரத் தொடங்கினேன்.
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை என பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வலியைப் பொய் என்றும் இது பொய்யான வழக்கு என்று கூறியவர்கள் இப்போது உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.
முதல் குற்றவாளி எனது தனிப்பட்ட ஓட்டுநர் என்று இன்னுமே சிலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அது முற்றிலும் பொய்.. அவர் எனது ஓட்டுநர் அல்ல.எனக்குத் தெரிந்தவரும் இல்லை.
2016-ல் நான் நடித்த ஒரு படத்தில் மட்டும் எனக்கு ஏதோ ஓட்டுநராக இருந்தவர். ஆதலால் தயவுசெய்து தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள்.
2020-ம் ஆண்டிலேயே இந்த வழக்கில் ஏதோ சரியில்லை என்பதை நான் உணரத் தொடங்கினேன்.
அதனால் தான் விசாரணை நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதாலேயே பலமுறை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகினேன். இருப்பினும், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதற்கான கோரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை. அனைத்து நீதிமன்றங்களும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை என உணர்ந்துள்ளேன். என் மீது அவதூறு கருத்துகளை வெளியிடுபவர்கள், வாங்கிய காசுக்கு சுதந்திரமாக பணியை தொடரட்டும் என பாதிக்கப்பட்ட நடிகை கூறினார்.
- திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கேரள நடிகைகள் கூட்டமைப்பு முடிவு.
- இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு மூளையாக இருந்தவர் இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறார்.
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே திலீப் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியார் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு மூளையாக இருந்தவர் இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறார். அதுவே மிகவும் அச்சமூட்டுகிறது.
இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்படும் போதுதான் நீதி முழுமையடையும். இது ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக மட்டுமல்ல. இது தங்கள் பணியிடங்களிலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி, துணிச்சலுடன், தலைநிமிர்ந்து நடக்கத் தகுதியான ஒவ்வொரு பெண்ணுக்காகவும் ஆகும். இப்போதும், எப்போதும் பாதிக்கப்பட்ட நடிகையுடன் நிற்பேன்" என்று மஞ்சு வாரியார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையும் இதே கருத்தை தான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
- நாம் மிகவும் கொடூரமான மற்றும் கவனமான வடிவமைக்கப்பட்ட ஒரு திரைக்கதையின் முடிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் நேற்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள். அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். இந்த வழக்கில் திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது. 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது.
இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே திலீப் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை பார்வதி திருவோத்து இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இது நீதியா?.. என்றும் அவருடன் (பாதிக்கப்பட்ட நடிகை). அவர் தனக்காக மட்டுமல்ல, கேரளாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்காகவும் போராடினார். அவரது போராட்டம் கேரளாவின் சமூகத்தில் பெண்கள் நிற்கும், போராடும், பேசும், வன்முறைக்கு எதிர்வினையாற்றும் விதத்தை மாற்றியது.
நீதி என்றால் என்ன? இப்போது நாம் மிகவும் கொடூரமான மற்றும் கவனமான வடிவமைக்கப்பட்ட ஒரு திரைக்கதையின் முடிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது.
- எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி.
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள். அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். இந்த வழக்கில் திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது. 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது.
எர்ணாகுளம் கோர்ட் அளித்த தீர்ப்பையடுத்து, நடிகர் திலீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,
இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை வைத்து எனது தொழில் வாழ்க்கையை அழிக்க சதி நடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி என்று கூறினார்.
இந்த வழக்கில் சுமார் 80 நாட்கள் திலீப் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்.
திமுக நிர்வாகி கோட்டூர்புரம் சண்முகம், முன்னாள் பிஆர்ஓ நடராஜனின் நண்பர் என அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு பல்கலை. முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் அவர்,"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்திய மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்" என பல்கலை. முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- 36 வயதான ஜாக்குலின் மா, சான் டியாகோ பள்ளியில் பணிபுரிகிறார்.
- மாணவர்களுக்கு அவர்களின் வீட்டுப்பாடம் முதற்கொண்டு செய்துகொடுத்து வலையில் வீழ்த்தினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயதான ஜாக்குலின் மா, சான் டியாகோவில் உள்ள லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 12 வயது மாணவனுடன் சுமார் 10 மாதங்களாக அவர் உறவு வைத்துள்ளார். சிறுவனுக்குக் காதல் கடிதங்கள் அனுப்புவது, தொலைப்பேசியில் அரட்டை அடிப்பது, சாட்டிங் செய்வது என ஆசிரியை ஜாக்குலின் இருந்துள்ளார்.
அந்த காதல் கடிதங்களையும், சாட்டிங் குறுஞ்செய்திகளையும் பார்த்து சந்தேகமடைந்த பையனின் தாய் போலீசில் புகார் அளித்தார். அதன்படி ஜாக்குலின் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் பரபரப்பு விஷயங்கள் தெரிய வந்தன. ஜாக்குலின் மா அந்தப் பையனுடன் மட்டுமல்ல, மற்ற சில மாணவர்களுடன் உறவு வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களுக்கு பரிசுகள், உணவு மற்றும் சிறப்பு கவனம் கொடுத்து அவர்களின் வீட்டுப்பாடம் முதற்கொண்டு செய்துகொடுத்து தனது வலையில் அவர்களை வீழ்த்தியுள்ளார் ஜாக்குலின். இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தில் ஜாக்குலின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் மீது கொலை வெறி தாக்கு தல் நடத்தி விட்டு தப்ப முயன்றார்.
- 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி, போலீசாரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள இஞ்சி விளை பகுதியை சேர்ந்த வர் ஸ்டாலின், தொழிலாளி.
கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான இவன், கடந்த 2010-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஓரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாறசாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை தேடி வந்தனர். ஆனால் அவன் தலைமறைவாகி விட்டான். கடந்த 12 வருடங்களாக போலீசார் பல இடங்களில் தேடியும் ஸ்டாலின் எங்கு உள்ளார் என்பது தெரி யாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்டாலின், தனது சொந்த ஊரான இஞ்சி விளையில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாறசாலை போலீஸ் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜிதின், ஜாண் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.
அவர்கள் ரகசியமாக கண்காணித்து இஞ்சிவிளை பகுதியில் ஸ்டாலினை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் ஸ்டாலின் தப்பி ஓட முயன்றார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் மீது கொலை வெறி தாக்கு தல் நடத்தி விட்டு தப்ப முயன்றார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் விரைந்து செயல்பட்டு ஸ்டாலினை மடக்கி பிடித்த னர். தொடர்ந்து அவனை கைது செய்து போலீஸ் நிலை யம் கொண்டு சென்று பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.
12 வருடங்களாக தலை மறைவாக எங்கு தங்கியி ருந்தான்? யார் அவனுக்கு உதவி செய்தார்கள்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தாக்குத லில் காயமடைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் பாறசாலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவனந்தபுரம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி, போலீசாரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மத்திய பிரதேச அரசுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் காந்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.
- கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்துவிட்டதாக மனுவில் கூறி உள்ளார்
போபால்:
மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் காந்து, கான்டிலால் பீல் (வயது 35). இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தார். சகோதரரின் வீட்டில் கொண்டு விடுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் வேறு ஒரு நபரிடம் விட்டுச் சென்று, அந்த நபர் 6 மாதமாக தன்னை சீரழித்தாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் காந்துவை கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
சுமார் 2 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரை நீதிமன்றம் விடுதலை செயத்து. இதையடுத்து போலி குற்றச்சாட்டில் தன்னை சுமார் 2 ஆண்டுகள் சிறையில் அடைத்ததற்காக, 10,006 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, மத்திய பிரதேச அரசுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் காந்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சிறைவாசத்தால் அவரது குடும்பம் பசி பட்டினியால் வாடியதாகவும், சிறையில் துன்பமும் மன வேதனையும் அடைந்ததாகவும் மனுவில் கூறி உள்ளார். மனித உயிர் விலை மதிப்பற்றது என்று குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகள், கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்தல், வழக்கு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரூ.10,006 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். இந்த வழக்கு 10ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
- சுனு மீதான புகார்கள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த், புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சுனுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த பைப்பூர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுனு.
இவர் மீது ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள், இவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தனர்.
பின்னர் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுனு மீதான புகார்கள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் சுனு தனது பணிக்காலத்தில் கிரிமினல்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், இதற்காக 6 முறை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அதன்பின்பும் சுனு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டது உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் போலீஸ் டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த், புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சுனுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் இன்ஸ்பெக்டர் சுனுவுக்கு போலீஸ் பணியில் நீடிக்க தகுதி இல்லை எனவும் தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கிடையே பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கோர்ட்டில் முறையிடப்போவதாக சுனு தெரிவித்துள்ளார்.
தன்மீது ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது. அதனையும் விரைந்து முடிக்க கேரள ஐகோர்ட்டை அணுக உள்ளதாகவும் அவர் கூறினார்.
- மாணவியின் பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்த போது, சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி உள்ளார்.
இந்த நிலையில் மாணவி யிடம் நைசாக பேசிய அபிஷேக், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்து மாணவியை அடிக்கடி மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் நாகா்கோ வில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் அபிஷேக், துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை பிடிக்க போலீசார் நட வடிக்கை எடுத்து வந்த னர். இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து ஊருக்கு வருவதாக நாகர்கோவில் மகளிர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.
அப்போது அவர் தனக்கு நெஞ்சு வலிப்ப தாக கூறியதால், ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை நிறைவடைந்ததை தொடர்ந்து, அபிஷேக் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- ஆசாராம் பாபுவுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது.
- மனைவி லட்சுமி, மகன் உள்ளிட்ட 6 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன. சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதனிடையே, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரத்தைச் சேர்ந்த பெண், அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா போலீசில் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
2013ல் பதிவு செய்யப்பட்ட இந்த புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கோர்ட் விசாரித்து வந்தது. பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகளாக கூறிக்கொண்ட 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், சாமியாரின் மனைவி, மகன், 4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. ஆசாராம் பாபுவுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.






