search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவு பிடிக்க வந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போக்சோ குற்றவாளி கைது - களியக்காவிளை அருகே பரபரப்பு
    X

    பாலியல் வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவு பிடிக்க வந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போக்சோ குற்றவாளி கைது - களியக்காவிளை அருகே பரபரப்பு

    • தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் மீது கொலை வெறி தாக்கு தல் நடத்தி விட்டு தப்ப முயன்றார்.
    • 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி, போலீசாரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள இஞ்சி விளை பகுதியை சேர்ந்த வர் ஸ்டாலின், தொழிலாளி.

    கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான இவன், கடந்த 2010-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஓரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாறசாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை தேடி வந்தனர். ஆனால் அவன் தலைமறைவாகி விட்டான். கடந்த 12 வருடங்களாக போலீசார் பல இடங்களில் தேடியும் ஸ்டாலின் எங்கு உள்ளார் என்பது தெரி யாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்டாலின், தனது சொந்த ஊரான இஞ்சி விளையில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாறசாலை போலீஸ் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜிதின், ஜாண் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அவர்கள் ரகசியமாக கண்காணித்து இஞ்சிவிளை பகுதியில் ஸ்டாலினை சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் ஸ்டாலின் தப்பி ஓட முயன்றார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் மீது கொலை வெறி தாக்கு தல் நடத்தி விட்டு தப்ப முயன்றார்.

    ஆனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் விரைந்து செயல்பட்டு ஸ்டாலினை மடக்கி பிடித்த னர். தொடர்ந்து அவனை கைது செய்து போலீஸ் நிலை யம் கொண்டு சென்று பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    12 வருடங்களாக தலை மறைவாக எங்கு தங்கியி ருந்தான்? யார் அவனுக்கு உதவி செய்தார்கள்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் தாக்குத லில் காயமடைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் பாறசாலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவனந்தபுரம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி, போலீசாரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×