search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடித்து கொலை"

    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
    • வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த அருப்பாக்கம் குளத்து தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 40), கூலித்தொழிலாளி. பள்ளமுள்ளுவாடி, சின்ன நாயக்கர் தெருவை சேர்ந்தவர் கமலகண்ணன் (33). தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் மது குடிப்பதற்காக சென்றனர். மது போதையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    ஆத்திரமடைந்த கமலகண்ணன், மகாதேவனை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. அப்போது மகாதேவன் வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கலவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.கலவை இன்ஸ்பெக்டர் காண்டீபன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் ஆகியோர் மகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன் பிடிக்கும் தகராறில் விபரீதம்
    • 4 பேர் கைது

    நெமிலி:

    நெமிலி அருகே பேனர் கடை உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் என்கிற பிரபு (வயது 40). இவர் காஞ்சிபுரத்தில் டிஜிட்டல் பேனர் பிரின்டிங் கடை நடத்திவந்தார்.

    இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், ருதேஷ், வேதேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். லாரன்ஸ் நேற்று கீழ் வீதி கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், லாரன்ஸை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    உறவினர்கள் ஏரிப் பகுதியில் சென்று லாரன்சை தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கீழ்வீதி ஏரிக்கு செல்லும் வழியில், லாரன்ஸ் தலையில் காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த லாரன்ஸ் குடும்பத்தினர், அவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ்கிரிஷ் அசோக், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் லாரன்ஸ் மற்றும் கீழ் வீதி கிரமத்தை சேர்ந்த ராமதாஸ் (32), தங்கராஜ் (23), தங்கராசு (22), தீபக் (24) ஆகியோருக்கும் ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றியதில் ராமதாஸ், தங்கராஜ், தங்கராசு, தீபக் ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடால் லாரன்சை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமதாஸ், தங்கராஜ், தங்கராசு, தீபக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மருமகனிடம் விசாரணை
    • நிலதகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா?

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி.

    இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு ஜெயலட்சுமி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    ஜெயலட்சுமி தனது கணவருடன் லத்தேரி கலைஞர் நகரில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். செல்வத்திற்கு விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு மகள் வீட்டிற்கு வந்த செல்வம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். இன்று அதிகாலை செல்வம் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் செல்வம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    காட்பாடி டி.எஸ்.பி பழனி, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

    செல்வம் தலையில் பலத்த காயங்கள் இருந்தது.

    பின்னர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நிலதகராறு காரணமாக உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் செல்வம் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அவரது மருமகனிடம் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தேவகோட்டை அருகே கல்லூரி மாணவர் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
    • இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கூத்தலூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சுதந்திரன் (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., படித்துவந்தார். சுதந்திரனும் கல்லல் விநாயகநகரைச் சேர்ந்த கணேசன் மகன் சூர்யபிரகாஷ் (20) என்பவரும் நண்பர்கள்.

    இந்த நிலையில், நேற்று கல்லலில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு சூர்யபிரகாஷ் அழைத்ததால், சுதந்திரன் கல்லல் சென்று திருவிழா தேரோட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

    அவர்கள் விநாயகபுரம் அருகே வந்தபோது மதுபோதையில் நின்றிருந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் பீர்பாட்டிலால் சுதந்திரனையும், சூர்யபிர காசையும் கடுமையாக தாக்கினர்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சுதந்திரன், சூர்யபிரகாஷ் ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதற்கிடையே, திருவிழாவுக்கு சென்று விட்டு அந்த வழியாக வந்த சிலர் 2 வாலிபர்கள் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுபற்றி கல்லல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சுதந்திரன் கவலைக்கிடமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சூர்யபிரகாசுக்கு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து கல்லல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கொலை நடந்த பகுதிக்கு இன்று சென்று அங்கு உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் பதிவாகி உள்ள மர்மநபர்களின் உருவங்களை வைத்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்.

    • புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிலப்பாறை திருமூலநகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 45). இவரது மனைவி மேரி சைலஜா (40) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    ஜார்ஜ் கொத்தனார் வேலை செய்து வந்தார். அவருடன் வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கும் ஜார்ஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் மேரி சைலஜா விற்கு தெரியவந்தது. இதை யடுத்து அவர் கணவரை கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட் டது. சம்பவத்தன்று மேரி சைலஜா வீட்டில் இருந்தார்.

    அப்போது வீட்டிற்கு வந்த ஜார்ஜிடம் இனி அந்த பெண்ணுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று கூறி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ் மனைவி மேரி சைலஜாவை சரமாரியாக தாக்கினார். இதில் மேரி சைலஜா படுகா யம் அடைந்தார்.

    இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாகர்கோ விலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. இதுகுறித்து மேரி சைலஜாவின் தாயார் ராஜம் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை யில் இருந்த மேரி சைலஜா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக் காக மாற்றப்பட்டு உள்ளது. போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். மேரி சைலஜா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாககிடந்தார்.
    • இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தி வருகிறாார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 26). இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 4நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் பெண்ணாடம் சென்று விட்டு வருவதாக வீட்டில் இருந்தவரிடம் கூறி சென்றவர் இது வரை வீட்டிற்கு வரவில்லை.

    இந்த நிலையில் பெண்ணாடத்திலிருந்து தொளார் செல்லும் சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாககிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டனர். சரவணனின் முகத்தில் காயங்கள் உள்ளது. எனவே அவரை யாராவது அடித்து கொன்று உடலை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தி வருகிறாார்கள். சரவணன் உடலை போலீசார் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதனைக்கான அனுப்பி வைத்தனர். 

    • தம்பதியிடம் தகராறு செய்ததை தட்டி கேட்டதால் விபரீதம்
    • டீக்கடைக்காரர் கைது

    போளூர்:

    போளூர் அடுத்த மங்களா மேடு கூட்ரோட்டில் செங்குனம் கிராமத்தை சேர்ந்தவர் முபினுதீன் (வயது 30). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலூர் நோக்கி பைக்கில் தம்பதி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முபினுதீன் டீக்கடையில் பைக்கை நிறுத்தி டீ குடித்தனர்.

    அப்போது முபினுதீனுக்கும் தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முபினுதீன் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த தர்மலிங்கம் (75) நாடக ஆசிரியர் தகராறு செய்தவரை விளக்கி உள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த முபினுதீன் தர்மலிங்கத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தர்மலிங்கத்தை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முபினுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
    • சீரங்கன் குடியிருந்து வரும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி இளைய மகன் ராஜ்குமார் தகராறு செய்து வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த ஆடையூர் கிராமம், குடியானூரை சேர்ந்தவர் டிரைவர் சீரங்கன் (வயது 64), அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சீரங்கம்மாள் . இவர்களுக்கு சரவணன் (35), ராஜ்குமார் (31) என்ற மகன்கள் உள்ளனர்.

    2-வது திருமணம்

    கருத்து வேறுபாடு காரணமாக சீரங்கம்மாளை விவாகரத்து செய்த சீரங்கன் 2-வதாக ராஜேஷ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஜலகண்டாபுரத்தை அடுத்த சூரப்பள்ளி சோரையான் வளைவு பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வந்தார்.

    இந்தநிலையில் முதல் மனைவியின் மகன்களுக்கு ஆடையூர் பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் தலா 2 ஏக்கர் பிரித்து தருவதாக தெரிவித்தார். ஆனால் சீரங்கன் குடியிருந்து வரும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி இளைய மகன் ராஜ்குமார் தகராறு செய்து வந்தார்.

    இது குறித்து சீரங்கன் பூலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் சரவணன், ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி யமுனாதேவி ஆகியோர் சீரங்கன் வீட்டிற்கு சென்று சொத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சீரங்கனை மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு பெருந்துறையில்உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    சிறையில் அடைப்பு

    இது குறித்து விசாரணை நடத்திய ஜலகண்டாபுரம் போலீசார் சீரங்கனின் மூத்த மகன் சரவணனை கைது செய்தனர். பின்னர் கோர்டடில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 2-வது மகன் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி யமுனா தேவி (25) ஆகிய 2 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். 

    • பெண்களை அவதூறாக பேசியதால் சக தொழிலாளி ஆத்திரம்
    • தலைமறைவான கொலையாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சித்திரங்கோடு பகுதியில் அலங்கார தரையோடுகள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

    இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார் கள். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோம்போ (வயது 28), அனில் பர்மன் (22) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் அங்கேயே உள்ள அறை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இவர்கள் 5 பேரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்ப டுகிறது. பின்னர் சோம்போ, அனில்பர்மன் இருவரும் குடிபோதையில் இருந்தபோது அவர்க ளுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    சோம்போ, அனில்பர் மனின் உறவினர் களை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. பெண்களை இழிவாக பேசியதால் ஆத்திரமடைந்த அனில்பர்மன் அங்கிருந்த பாட்டிலால் சோம்போவை தாக்கினார்.பின்னர் அந்த பகுதியில் கிடந்த இரும்பு கம்பியா லும் அடித்தார். இதில் சோம்போ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சோம்போ உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அனில் பர்மனை கைது செய்தனர்.

    கைது செய்யப் பட்ட அவரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தென் தாமரைகுளம் அருகே மணக்குடி பகுதியில் இதே போல் ஒரே அறையில் தங்கி இருந்த வட மாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளி அங்கிருந்து தலைமறைவானார். இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் திருவட்டார் பகுதியில் வட மாநில தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×