search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beat to death"

    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
    • வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த அருப்பாக்கம் குளத்து தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 40), கூலித்தொழிலாளி. பள்ளமுள்ளுவாடி, சின்ன நாயக்கர் தெருவை சேர்ந்தவர் கமலகண்ணன் (33). தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் மது குடிப்பதற்காக சென்றனர். மது போதையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    ஆத்திரமடைந்த கமலகண்ணன், மகாதேவனை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. அப்போது மகாதேவன் வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கலவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.கலவை இன்ஸ்பெக்டர் காண்டீபன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் ஆகியோர் மகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநங்கை நவ்யா (36), இவர் கடந்த 10 ஆண்டுகளாக அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.
    • ஆத்திரம் அடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34), சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    திருநங்கை

    அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்தவர் திருநங்கை நவ்யா (36), இவர் கடந்த 10 ஆண்டுகளாக அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் சதீஷ்குமார் அடிக்கடி நவ்யாவின் வீட்டிற்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சதீஷ்குமார் தனது நண்பரான வாழப்பாடி பாட்டப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கவியரசன் (34) என்பவருடன் குடிபோதையில் நவ்யாவை தேடி அவரது வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அவரை அழைத்து பேசி விட்டு சதீஷ்குமாரும், கவியரசனும் அங்கிருந்து சென்று விட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஷ்குமார் கதவை தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்தார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அடித்து கொலை

    இதில் ஆத்திரம் அடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் கதறி துடித்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு வாழப்பாடியில் முதலுதவி சிகிச்சை அளித்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்த சதீஷ்குமார் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    பரபரப்பு வாக்குமூலம்

    இதற்கிடையே நவ்யாைவ கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு எனது வீட்டிற்கு வந்து என்னை உல்லாசத்திற்கு அழைத்தார். அதற்கு நான்மறுத்ததால் தகாத வார்த்தையால் பேசினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினேன். இதில் நிலைகுலைந்த அவர் தரையில் சாய்ந்தார். இதையடுத்து அங்கிருந்து நான் தப்பி ஓடினேன், ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மருத்துவ பரிசோதனை

    இதையடுத்து சேலம் அரசு மருத்துவ மனையில் அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் பெற்று வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மீன் பிடிக்கும் தகராறில் விபரீதம்
    • 4 பேர் கைது

    நெமிலி:

    நெமிலி அருகே பேனர் கடை உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் என்கிற பிரபு (வயது 40). இவர் காஞ்சிபுரத்தில் டிஜிட்டல் பேனர் பிரின்டிங் கடை நடத்திவந்தார்.

    இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், ருதேஷ், வேதேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். லாரன்ஸ் நேற்று கீழ் வீதி கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், லாரன்ஸை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    உறவினர்கள் ஏரிப் பகுதியில் சென்று லாரன்சை தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கீழ்வீதி ஏரிக்கு செல்லும் வழியில், லாரன்ஸ் தலையில் காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த லாரன்ஸ் குடும்பத்தினர், அவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ்கிரிஷ் அசோக், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் லாரன்ஸ் மற்றும் கீழ் வீதி கிரமத்தை சேர்ந்த ராமதாஸ் (32), தங்கராஜ் (23), தங்கராசு (22), தீபக் (24) ஆகியோருக்கும் ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றியதில் ராமதாஸ், தங்கராஜ், தங்கராசு, தீபக் ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடால் லாரன்சை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமதாஸ், தங்கராஜ், தங்கராசு, தீபக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மருமகனிடம் விசாரணை
    • நிலதகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா?

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி.

    இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு ஜெயலட்சுமி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    ஜெயலட்சுமி தனது கணவருடன் லத்தேரி கலைஞர் நகரில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். செல்வத்திற்கு விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு மகள் வீட்டிற்கு வந்த செல்வம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். இன்று அதிகாலை செல்வம் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் செல்வம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    காட்பாடி டி.எஸ்.பி பழனி, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

    செல்வம் தலையில் பலத்த காயங்கள் இருந்தது.

    பின்னர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நிலதகராறு காரணமாக உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் செல்வம் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அவரது மருமகனிடம் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விஜயகுமார் (வயது 29). இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.
    • கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வைஷ்ணவி அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் சின்னப்பன் தெருவை சேர்ந்த இளங்கோ மகன் விஜயகுமார் (வயது 29). இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். விஜயகுமாருக்கு ரேகா தேவி(28) மற்றும் வைஷ்ணவி(27) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.

    முதல் மனைவிக்கு 11 வயதில் ஒரு மகனும் 2-வது மனைவிக்கு 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து திருவாக் கவுண்டனூர் பகுதியில் வசித்து வருகிறார். 2-வது மனைவி வைஷ்ணவியுடன் விஜயகுமார் வசித்து வந்தார்.

    கடந்த மாதம் 25-ந் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வைஷ்ணவி அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த விஜயகுமார் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்த புகார் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விஜயகுமார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    விஜயகுமாருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 3 வாலிபர்கள் விஜயகுமாரை தாக்கி உள்ளனர் இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது.

    விஜயகுமாரை தாக்கிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் இது சம்பந்தமாக சிலரை பிடித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

    • தம்பதியிடம் தகராறு செய்ததை தட்டி கேட்டதால் விபரீதம்
    • டீக்கடைக்காரர் கைது

    போளூர்:

    போளூர் அடுத்த மங்களா மேடு கூட்ரோட்டில் செங்குனம் கிராமத்தை சேர்ந்தவர் முபினுதீன் (வயது 30). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலூர் நோக்கி பைக்கில் தம்பதி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முபினுதீன் டீக்கடையில் பைக்கை நிறுத்தி டீ குடித்தனர்.

    அப்போது முபினுதீனுக்கும் தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முபினுதீன் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த தர்மலிங்கம் (75) நாடக ஆசிரியர் தகராறு செய்தவரை விளக்கி உள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த முபினுதீன் தர்மலிங்கத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தர்மலிங்கத்தை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முபினுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
    • சீரங்கன் குடியிருந்து வரும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி இளைய மகன் ராஜ்குமார் தகராறு செய்து வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த ஆடையூர் கிராமம், குடியானூரை சேர்ந்தவர் டிரைவர் சீரங்கன் (வயது 64), அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சீரங்கம்மாள் . இவர்களுக்கு சரவணன் (35), ராஜ்குமார் (31) என்ற மகன்கள் உள்ளனர்.

    2-வது திருமணம்

    கருத்து வேறுபாடு காரணமாக சீரங்கம்மாளை விவாகரத்து செய்த சீரங்கன் 2-வதாக ராஜேஷ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஜலகண்டாபுரத்தை அடுத்த சூரப்பள்ளி சோரையான் வளைவு பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வந்தார்.

    இந்தநிலையில் முதல் மனைவியின் மகன்களுக்கு ஆடையூர் பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் தலா 2 ஏக்கர் பிரித்து தருவதாக தெரிவித்தார். ஆனால் சீரங்கன் குடியிருந்து வரும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி இளைய மகன் ராஜ்குமார் தகராறு செய்து வந்தார்.

    இது குறித்து சீரங்கன் பூலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் சரவணன், ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி யமுனாதேவி ஆகியோர் சீரங்கன் வீட்டிற்கு சென்று சொத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சீரங்கனை மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு பெருந்துறையில்உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    சிறையில் அடைப்பு

    இது குறித்து விசாரணை நடத்திய ஜலகண்டாபுரம் போலீசார் சீரங்கனின் மூத்த மகன் சரவணனை கைது செய்தனர். பின்னர் கோர்டடில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 2-வது மகன் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி யமுனா தேவி (25) ஆகிய 2 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். 

    ×