search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி அடித்து கொலை
    X

    தொழிலாளி அடித்து கொலை

    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
    • வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த அருப்பாக்கம் குளத்து தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 40), கூலித்தொழிலாளி. பள்ளமுள்ளுவாடி, சின்ன நாயக்கர் தெருவை சேர்ந்தவர் கமலகண்ணன் (33). தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் மது குடிப்பதற்காக சென்றனர். மது போதையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    ஆத்திரமடைந்த கமலகண்ணன், மகாதேவனை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. அப்போது மகாதேவன் வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கலவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.கலவை இன்ஸ்பெக்டர் காண்டீபன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் ஆகியோர் மகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×