search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP alliance"

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே பேசியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    கூட்டணியில் இருந்து கொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி வகித்து வருகிறார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
    • பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த வழக்கில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பா.ம.க. கேட்ட தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. ஒத்துக்கொண்டது. ஆனால் மேல்சபை பதவியை வழங்க மறுத்து விட்டது.
    • தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வும் முயற்சி செய்தது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

    அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை திரை மறைவில் மேற்கொண்டன. அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். அப்போது பா.ம.க. தரப்பின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார்.

    அதில் பா.ம.க. கேட்ட தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. ஒத்துக்கொண்டது. ஆனால் மேல்சபை பதவியை வழங்க மறுத்து விட்டது. மேலும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் பா.ம.க. தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்கவில்லை.

    இந்த தகவல்களை சி.வி.சண்முகம் 2-வது முறையாக டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியபோது எடுத்து கூறினார். இதனால் இரு கட்சிகளிடையேயும் கூட்டணி அமைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

    இதையடுத்து பா.ம.க. வுடன் பா.ஜனதா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது தேவையான தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்திய பா.ம.க. அவர்களுக்கு சாதகமான வடமாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கேட்டது. மேலும் டெல்லி மேல்சபை பதவி உள்பட சில நிபந்தனைகளையும் விதித்தது.

    இது தொடர்பாக டெல்லி தலைவர்கள் ஆலோசித்து வந்தனர். மேலும் டெல்லி மேலிடத்தின் முடிவுகளை தெரிவிக்கவும், பா.ம.க.வை தங்கள் பக்கம் இழுக்கவும் மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன்ரெட்டி ஆகியோரை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் இருவரும் சென்னை தி.நகரில் டாக்டர் ராமதாசை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது பா.ஜனதா தரப்பில் ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி கூறினார்கள். மற்ற நிபந்தனைகளை ஏற்காததால் பா.ஜனதாவின் முயற்சி தோல்வி அடைந்தது.

    இதேபோல் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வும் முயற்சி செய்தது.


    அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தது. அதை தொடர்ந்து தே.மு.தி.க.வினர் மீண்டும் பேசினர். இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறப்படுகிறது.

    அப்போது தே.மு.தி.க. விதித்த நிபந்தனைகளையும் அ.தி.மு.க. தரப்பில் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் ஈடுபட்டு உள்ளன.

    அ.தி.மு.க. தரப்பில் இருந்து 3-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா காத்திருக்கிறார். இந்த இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க பா.ஜனதா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டது.

    எனவே பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்து உள்ள பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து எடப்பாடியை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்துள்ளார்.
    • கட்சியும் இல்லை. சின்னமும் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு கொடியும் இல்லாமல், கட்சியும் இல்லாமல் தவித்து வருகிறார். சட்டப் போராட்டங்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை எப்படியும் பறித்து விடலாம் என்கிற எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோல்வி அடைய செய்வோம் என்கிற கோஷத்தோடு களமிறங்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

    டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரசியல் களம் கண்ட ஓ.பன்னீர்செல்வத்தை காலச்சக்கரம் அவருடனேயே கொண்டு சேர்த்து இருக்கிறது என்றால் மிகையாகாது. அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்து உள்ள பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து எடப்பாடியை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்துள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அரசியல் பயணம் அவருக்கு எளிதாக இருக்கவில்லை. எந்த பக்கம் எப்படி பயணிப்பது என்று தெரியாமல் தவிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனது தனித்தன்மை பாதிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார்.

    அதே நேரத்தில் தற்போது அவருக்கு கட்சியும் இல்லை. சின்னமும் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னமான குக்கர் சின்னத்தில் போட்டியிடலாமா அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிடலாமா என்பது பற்றியும் அவர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அணி நிர்வாகிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனுக்களை ரூ.10,000 செலுத்தி பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் இன்று மாலை 6 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    • கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகள் கேட்டு பெறவும் முடிவு செய்யப்படுகிறது.
    • தனி சின்னத்தில் நிற்பதா? பா.ஜனதா சின்னத்தில் நிற்பதா? அவற்றின் சாதக-பாதகம் குறித்து பேசுகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் அணி சந்திக்கிறது. கூட்டணியில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை அ.தி.மு.க. தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ். அணி இதுவரையில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விருப்ப மனுக்களும் பெறப்படவில்லை.

    இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எழும்பூரில் நடக்கும் கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

    பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, வேட்பாளர்களாக யார் யாரை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் எந்த தேதியில் இருந்து பெறுவது என முடிவு செய்யப்படுகிறது.

    கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகள் கேட்டு பெறவும் முடிவு செய்யப்படுகிறது. தனி சின்னத்தில் நிற்பதா? பா.ஜனதா சின்னத்தில் நிற்பதா? அவற்றின் சாதக-பாதகம் குறித்து பேசுகிறார்கள்.

    பா.ஜனதா கூட்டணியில் புதிதாக இடம் பெறும் கட்சிகள் குறித்த முடிவு தாமதம் ஆவதால் தொகுதிகள் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் குறைந்தது 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

    • திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவிப்பு.
    • மத்திய அரசை பாராட்டியதுடன் வாரிசு அரசியலை கடுமையாக சாடினார் நிதிஷ் குமார்.

    பாட்னா:

    பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்துவந்தார். அதன்பின் 2022-ல் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறி லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார்.

    பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவர் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்தார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு கிடையாது என அறிவித்துள்ளதும் நிதிஷ் குமாரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

    இதுபோன்ற காரணங்கள் எல்லாம் நிதிஷ் குமாரை கூட்டணி மாற வைக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    ஒருவேளை நிதிஷ் குமார் பா.ஜ.க. கூட்டணியில் சேர முடிவு செய்தால், வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி பீகாரின் பெட்டியாஹ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் ஒரே மேடையில் தோன்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜ.க. தலைவருமான சுஷில்குமார், அரசியலில் கதவுகள் நிரந்தரமாக மூடப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

    • முத்தியால்பேட்டை அ.தி.மு.க. தீர்மானம்
    • மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என உறுதியாக தெரிவித்துவிட்டது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் இன்று தொகுதி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    அதிமுக மாநில துணை செயலாளர்வையாபுரி மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்தும், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்வது குறித்தும் ஆலோசனை நடந்தது.

    கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மாநில அந்தஸ்து வழங்காத கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன், மாநில அந்தஸ்து கிடைக்கா விட்டால் சட்டமன்ற தேர்தலையே புறக் கணிப்பேன் என முதல்- அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

    ஆனால், தற்போது மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என உறுதியாக தெரிவித்துவிட்டது.

    எனவே மாநில அந்தஸ்தை மறுத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை

    வேற்றப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் மாநில இணை செயலாளர் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், கட்சியின் மூத்த நிர்வாகி வில்லியனூர் மணி, கஜேந்திரன், உழவர்கரை நகர செயலாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன்,





    • கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது.
    • தி.மு.க. 520 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை.

    சேலம்:

    பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த 25-ந்தேதி அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்தது.

    இந்த கூட்டணி முறிவு நாடகம் என்றும், மீண்டும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்து விடும் என்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன. இதற்கு அ.தி.மு.க. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அதில் பாரதிய ஜனதா கட்சியுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி நீடிப்பதாகவும், சமரச பேச்சு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கோவைக்கு வந்திருந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டு சேர திட்டமிட்டிருப்பதாக மீண்டும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் எடப்பாடியில் விரிவாக பேட்டி அளித்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணி முறிவில் உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார்.

    எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா நிர்வாகிகள் விரும்புவது என்பது அவர்களின் விருப்பம். ஆனால் நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். நான் சேலம் மாநகர் மாவட்ட பூத் கமிட்டி நிகழ்ச்சியில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

    25.9.2023 அன்று தலைமைக் கழகத்தில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் பா. ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் எந்த மாதிரி கூட்டணி அமையும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயமாக எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேரும் என்பதை பத்திரிகைகளுக்கும், ஊடகத்துக்கும் தெரிவிப்போம்.

    பா.ஜனதா மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறி இருப்பதற்கு, நான் என்ன கருத்து சொல்ல முடியும். எங்களுடைய கருத்து நான் சொன்னது தான். எங்களுடைய முடிவுகள் அதுதான். 2 கோடி தொண்டர்களின் உணர்வு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.

    வேண்டுமென்றே திட்டமிட்டு தினந்தோறும் கேள்வி கேட்டால் நான் என்ன சொல்வது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சியை பற்றித்தான் நாங்கள் பேச முடியும்.

    நாங்கள் தனித்து நிற்பதால் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாது. மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வாக்களித்த பிறகு முடிவு தெரியும். எங்களை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் 7 எம்.பி. தொகுதிகளுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். சேலத்தில் மட்டும் 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். இப்படி பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம்.

    சிதம்பரம் தொகுதியில் 324 வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தோம். ஈரோட்டில் 7,800 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றோம். நாமக்கல்லில் 15,400 ஓட்டுகள் தான் குறைவு. இந்த 3 தொகுதியிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இந்த 10 தொகுதிகளும் எளிதாக வெற்றி பெற வேண்டியது.

    கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் என 10 பாராளுமன்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகத்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 1 லட்சம் வாக்குகளுக்கு கீழ் 7 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பறி போனது. எனவே 100-க்கு 100 சதவீதம் 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.

    கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க. 520 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சர் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சை பொய்யை சொல்கிறார்.

    தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது மக்கள் வாழ்க்கை நடத்துவதே இன்று சவாலாக இருக்கிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் தலைமையில் அமையும் கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தல் சாதகமாக இருக்கும்.

    எம்.பி., எம்.எல்.ஏ.க்களை மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். வீட்டிலேயே இருந்து விட்டால் அதை யார் நிறைவேற்றி தருவது. அதற்காகத்தான் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.

    இங்கிருக்கும் பல தி.மு.க. அமைச்சர்கள் போய் டெல்லியில் பா.ஜனதா மந்திரிகளை சந்தித்தனர். அப்படியென்றால் தி.மு.க.வை அவர்கள் கூட்டணி சேர்த்துக் கொண்டார்களா? பல மத்திய மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு வரும் போது அந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கு பெறுகிறார்கள். அந்த மாதிரிதான் இதுவும். அந்த பகுதி தென்னை விவசாயிகளின் நலன் கருதியும், அவர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையிலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கோவை வந்த போது தென்னை விவசாயிகள் படும் கஷ்டங்களை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் எடுத்து கூறி நிவாரணம் கேட்டுள்ளனர்.

    அதற்காகத்தான் சந்தித்தார்கள். ஆனால் உடனே கூட்டணி என்கிறீர்கள். தி.மு.க. அமைச்சர்கள் சந்தித்தால் எதுவும் கேள்வி கேட்பதில்லை. காவிரி பிரச்சனைக்கு மத்திய நீர்வளத்துறை மந்திரியை போய் பார்த்தார்கள். அப்போதெல்லாம் இந்த கேள்வி வரவில்லையே?

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கடமையை செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகுவது என்று எடுக்கப்பட்டது உறுதியான முடிவு.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது நாடகம் என்று தி.மு.க. தலைமை என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இந்தியா கூட்டணிதான் நாடகம். மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற வேட்பாளர்களை தனியாக அறிவித்து விட்டது.

    இந்தியா கூட்டணியில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் கொண்ட கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. அது இன்னும் முழு வடிவத்தையே பெறவில்லை. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, எங்களுக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் உடன்பாடு இல்லை என்கிறார்.

    கேரளாவில் கம்யூனிஸ்டு தலைவர்கள் காங்கிரசுடன் இணைய மாட்டோம் என்கிறார்கள். டெல்லி, பஞ்சாப்பிலும் முரண்பாடுகள் உள்ளன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக மேட்டூர் அணை நீரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு திறந்தார். அப்போது அவர் தன்னை டெல்டாக்காரன் என்றார். இப்போது அந்த வார்த்தையை காணோம்.

    உங்களை நம்பித்தான் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பதை அறிந்தீர்களா? அங்கு போய் பார்த்தீர்களா? தண்ணீர் இல்லாமல் 3½ லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி விட்டதாக தகவல் வருகிறது. விவசாயிகள் மீது முதலமைச்சர் அக்கறை கொண்டிருந்தால் காவிரி நீரை மாதா மாதம் கேட்டு பெற்றிருக்க வேண்டும்.

    இந்தியா கூட்டணியில் சேரும் போதே காவிரி நதி நீர் பிரச்சனையை எடுத்து வைத்திருக்கலாம். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற போது தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை அவர்களிடம் எடுத்து சொல்லி இருந்தால் நிச்சயமாக நமக்கு ஒரு சாதகமான முடிவு எட்டப்பட்டு இருக்கும். அந்த நல்ல வாய்ப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நழுவ விட்டு விட்டார்.

    கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி இருக்கிறது. அப்போதே தண்ணீரை கேட்டு பெற்றிருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான திட்டங்களை அளிப்போம்.

    அடுத்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததாக கூறுகிறீர்கள். அது தவறான செய்தி. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இப்போது நான் அதை தெளிவு படுத்துகிறேன். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இங்கே நடந்த நிகழ்வுகள் எங்கள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டது.

    ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும். எனவே எங்கள் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

    இப்போது தெளிவுபடுத்துகிறேன். அவர்கள் எந்த சீட்டும் பேசவில்லை. 20 சீட், 15 சீட் என்று எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதைப் பற்றி பேசவும் இல்லை.

    இங்குள்ள பா.ஜனதா மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்ட அந்த தகவலும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தே.மு.தி.க.வை அழைக்காததால் அக்கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
    • வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்து உள்ளது.

    இதில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாரதிய ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தே.மு.தி.க.வை அழைக்காததால் அக்கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

    தே.மு.தி.க.வை விட குறைவான ஓட்டு வங்கி வைத்துள்ள சிறிய கட்சிகளுக்குகூட அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் தே.மு.தி.க.வை கண்டு கொள்ளாதது அக்கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இதனால் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உண்டா? என்று தி.மு.க. மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் தி.மு.க. தான் அதிக இடங்களில் போட்டியிடும். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் எங்களது தொகுதி பங்கீடு இருக்கும்.

    இப்போதைய சூழலில் தி.மு.க. கூட்டணியில் இருக்கிற கட்சிகளுக்கே தொகுதி கொடுக்க முடியாமல் திணறி வருகிறோம்.

    இந்த நிலையில் தே.மு.தி.க. உள்ளிட்ட புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்றனர்.

    தே.மு.தி.க. கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த அளவில் ஓட்டுகள் இருந்தாலும் அது சட்டசபை தேர்தலுக்குதான் உதவும் என்பதால் பாராளுமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க.வை பெரிய கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? இல்லையா? என்பது போக போகத் தான் தெரியவரும்.

    இதுகுறித்து தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.

    • பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக இருந்த எதிர்ப்பு உணர்வு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பளித்திருக்கிறது.
    • புதுவை மக்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க ரங்கசாமி பா.ஜனதா கூட்டணியிலிருந்து இருந்து உடனே விலக வேண்டும்.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தென்னிந்தியாவின் கரையாக பா.ஜனதா கூட்டணி ஆட்சி புதுவை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சிக்கு அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. கர்நாடக மக்கள் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை நிராகரித்திருக்கிறார்கள்.

    பா.ஜனதாவின் இந்தத் தோல்வி கர்நாடக பா.ஜனதா அரசின் ஒட்டு மொத்த தவறான ஆட்சி மற்றும் ஊழலின் விளை வாகும். மக்கள் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக இருந்த எதிர்ப்பு உணர்வு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பளித்திருக்கிறது.

    ரங்கசாமி தான் எப்படியாவது முதல்-அமைச்சராக இருந்தால் போதும் புதுவை மக்களை, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் விரும்பாத பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இல்லாத கட்சியை உருவாக்க காரணமாகிவிட்டார்.

    தென்னிந்தியாவின் கரையாக புதுவையில் மட்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இருப்பது புதுவை மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. புதுவை மக்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க ரங்கசாமி பா.ஜனதா கூட்டணியிலிருந்து இருந்து உடனே விலக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

    91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்தன. பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான பலப்பரீட்சை நடந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதிய ஜனதா அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும் காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    273 தொகுதிகளில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த 2 மாத தீவிர பிரசாரத்தைத் தொடர்ந்து 7 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தடவை தேர்தலில் இதுவரை இல்லாத சாதனையாக 67.11 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 3 நாட்கள் இடைவெளி விட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்று காலை 8.15 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வந்தபோது பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலைப் பெற்று கருத்துக் கணிப்பை உறுதிப்படுத்தியது.

    காலை 8.30 மணிக்கு அதாவது ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை இருந்தது.

    9 மணி அளவில் 403 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி 236 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 96 இடங்களிலும் மாநில கட்சிகள் 73 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.

    10 மணி அளவில் 542 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புடன் முன்னிலைப் பெற்றது.



    காங்கிரஸ் கூட்டணி சுமார் 110 இடங்களுடன் பின் தங்கி விட்டது. மாநில கட்சிகளும் சுமார் 102 தொகுதிகளுடன் தத்தளித்தப்படி இருந்தன.

    காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க நேற்று மாலை வரை ரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுக்கும், மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.

    காங்கிரசும், மாநில கட்சிகளும் வெற்றி பெற்ற தொகுதிகளை சேர்த்தால் 212 இடங்களில்தான் முன்னிலையில் இருந்தன.

    பிற்பகல் தெளிவான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் இமாலய வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகப்படியான வெற்றியை பெறும் சூழ்நிலை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி கிடைத்து இருந்தது.

    இந்த தடவை பாரதிய ஜனதா தனிப்பட்ட முறையில் 289 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணி மீண்டும் இமாலய பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தடவை அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில கருத்து கணிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறியிருந்தது.

    ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 51 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

    421 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியாதது காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக ராகுலும், பிரியங்காவும் தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக வெறும் 6 அல்லது 7 இடங்களே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 95 முதல் 100 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.

    பாரதிய ஜனதா கூட்டணி சுமார் 350 இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. இந்த மேஜிக் நம்பரை பா.ஜனதா கூட்டணி மிக எளிதாக எட்டிப்பிடித்தது.

    எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 321 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 110 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

    ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


    பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிப்பதால், பங்குச்சந்தைகளும் எழுச்சி பெற்றன. இன்று காலை முதலே விறுவிறுப்பாக வர்த்தகம் நடைபெற்றது. காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 886.56 புள்ளிகள் உயர்ந்து 39,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257.95 புள்ளிகள் உயர்ந்து, 11,995.85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது.

    சுமார் 1240 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 370 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. 68 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. 
    ×