search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னிலை"

    • அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
    • லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட் பட்ட முதுநகர் பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். 

    கலெக்டர் அருண்தம்பு ராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜய லட்சுமி செந்தில், பால சுந்தர், மாவட்ட பிரதிநிதி கள் துர்கா செந்தில், மஸ்கட் புகழேந்தி, பகுதி துணை செயலாளர்கள் வக்கீல் பாபு, லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.
    • முடிவில் பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றுப் பேசினார். தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், து.செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக தலைமை பேச்சாளர்கள் போடி காமராஜ், பேர்ணாம்பட்டு ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, முன்னாள் எம்பி பரசுராமன், மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் இறை கார்குழலி, மாவட்ட நிர்வாகிகள் இறைவன் , அண்ணா, மணிமாறன், புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி, செல்வராஜ், உலகநாதன், முரசொலி, செல்வகுமார், பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், நீலகண்டன், சதாசிவம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன், தஞ்சை மாநகர நிர்வாகிகள் உஷா, காளையார் சரவணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வரகூர் காமராஜ், செந்தமிழ் செல்வன், கமலா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா நன்றி கூறினார்.

    • கூட்டத்திற்கு வட்டார தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார்.
    • மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

    கூட்டத்திற்கு வட்டார தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார் . கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்கூட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில்வருகிற 20ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் கலந்து கொள்வது

    நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடன் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் வீரசேகரன் நன்றி கூறினார்.

    ×