search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியலில் கதவுகள் நிரந்தரமாக மூடப்படுவதில்லை: முன்னாள் துணை முதல் மந்திரி
    X

    அரசியலில் கதவுகள் நிரந்தரமாக மூடப்படுவதில்லை: முன்னாள் துணை முதல் மந்திரி

    • திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவிப்பு.
    • மத்திய அரசை பாராட்டியதுடன் வாரிசு அரசியலை கடுமையாக சாடினார் நிதிஷ் குமார்.

    பாட்னா:

    பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்துவந்தார். அதன்பின் 2022-ல் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறி லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார்.

    பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவர் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்தார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு கிடையாது என அறிவித்துள்ளதும் நிதிஷ் குமாரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

    இதுபோன்ற காரணங்கள் எல்லாம் நிதிஷ் குமாரை கூட்டணி மாற வைக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    ஒருவேளை நிதிஷ் குமார் பா.ஜ.க. கூட்டணியில் சேர முடிவு செய்தால், வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி பீகாரின் பெட்டியாஹ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் ஒரே மேடையில் தோன்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜ.க. தலைவருமான சுஷில்குமார், அரசியலில் கதவுகள் நிரந்தரமாக மூடப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×