search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங். வெளியேற வேண்டும்
    X

    கூட்டத்தில் வையாபுரி மணிகண்டன் பேசிய காட்சி

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங். வெளியேற வேண்டும்

    • முத்தியால்பேட்டை அ.தி.மு.க. தீர்மானம்
    • மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என உறுதியாக தெரிவித்துவிட்டது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் இன்று தொகுதி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    அதிமுக மாநில துணை செயலாளர்வையாபுரி மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்தும், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்வது குறித்தும் ஆலோசனை நடந்தது.

    கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மாநில அந்தஸ்து வழங்காத கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன், மாநில அந்தஸ்து கிடைக்கா விட்டால் சட்டமன்ற தேர்தலையே புறக் கணிப்பேன் என முதல்- அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

    ஆனால், தற்போது மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என உறுதியாக தெரிவித்துவிட்டது.

    எனவே மாநில அந்தஸ்தை மறுத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை

    வேற்றப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் மாநில இணை செயலாளர் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், கட்சியின் மூத்த நிர்வாகி வில்லியனூர் மணி, கஜேந்திரன், உழவர்கரை நகர செயலாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன்,





    Next Story
    ×