search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவசேனா"

    • மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் பாஜகவின் முதல் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது
    • உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி போலியானது - மோடி

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் பாஜகவின் முதல் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றனர்.

    அப்போது பேசிய மோடியும் அமித் ஷாவும் , உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி போலியானது என்று தெரிவித்தனர்.

    இதற்கு விளக்கம் அளித்த உத்தவ் தாக்கரே "சிவசேனா போலியானது என்கிறார் நரேந்திர மோடி. அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். எங்கள் கட்சி அவரது கல்லூரி பட்டமல்ல" என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும், அமித் ஷாவிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களது இந்த தேர்தல் பிரசாரத்தில் உங்களிடம் உள்ள தலைவர்களில் எத்தனை பேர் பாஜகவில் இருந்து வந்தவர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்திய மக்களை தனது அடிமைகளாக நடத்தும் மோடி, 'பாரத் சர்க்கார்' என்பதற்குப் பதிலாக 'மோடி சர்க்கார்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இந்த அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள நாங்கள் கோழைகள் அல்ல, இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
    • மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.பி உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்துள்ளார்.

    ஜல்கான் தொகுதி எம்.பி உன்மேஷ் பாட்டீலுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில், அவர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

    மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதில், ஜல்கான் தொகுதி சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த தொகுதியில் சிவசேனா சார்பில், உன்மேஷ் பாட்டீல் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    • 2004-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 2009-க்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். தற்போது சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

    பாலிவுட் நடிகர் கோவிந்தா 2004-ல் அரசியலில் களம் இறங்கினார். அப்போது பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ராம் நாயக்கை தோற்கடித்து ஜெயன்ட் கில்லர்-ஆக திகழந்தார். காங்கிரஸ் கட்சி சார்பாக 2004-ல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    2009-ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தார். அதன்பின் அரசியலில் இருந்து விலகினார். தற்போது சுமார் 14 ஆண்டுகள் கழித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

    சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் பிரபல நபராக இருந்தவர் கோவிந்தா என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    2004-2009 அரசியலுக்குப் பிறகு அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். மீண்டும் அரசியலுக்கு திரும்புவேன் என்ற நினைத்து பார்க்கவில்லை. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியலுக்கு திரும்பியுள்ளேன். வாய்ப்பு வழங்கப்பட்டால் கலை மற்றும் கலாசாரம் துறையில் பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    1980-ல் சினிமாத்துறையில் நுழைந்த கோவிந்தா, ஏராளமான குடும்ப பொழுதுபோக்கு படங்களில் நடித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே பேசியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    கூட்டணியில் இருந்து கொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி வகித்து வருகிறார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரா மாநிலத்தில பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது.
    • சுப்ரியா சுலே எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராமதி தொகுதி அஜித் பவார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த மூன்று கட்சிகளும் மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்தன. 48 தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலவியது.

    இதனால் சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரியான அமித் ஷா தலையிட்டு இரண்டு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராமதி, ரெய்க்கார், ஷிருர், பார்பனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 13 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது.

    பாராமதி தொகுதி பவார் குடும்பத்தின் கோட்டையாக விளங்குகிறது. தற்போது சரத் பவார்- அஜித் பவார் குடும்ப உறுப்பினர்கள் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அவரை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.

    • கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
    • முன்னாள் பிரதமர்கள் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அரசியல், கலை, இலக்கியம் என தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பீகாரைச் சேர்ந்த கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், கட்சி தலைவரான பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதேபோல், மகா நிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவும் பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
    • இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட். இவருக்கும் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் கல்யாண் தொகுதி பொறுப்பாளர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே நிலத் தகராறு இருந்துள்ளது.

    இதற்கிடையே, உல்ஹாஸ் நகர் பகுதியில் உள்ள ஹில் லைன் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட்டின் மகன் நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது எதிர்தரப்பில் மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் வந்துள்ளனர்.

    தகவலறிந்த எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட்டும் அங்கு விரைந்தார். இன்ஸ்பெக்டர் அறையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கைகலப்பு ஏற்பட எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் தனது துப்பாக்கியை எடுத்து எதிர்தரப்பினரை நோக்கி சுட்டார். இதில் மகேஷ் கெய்க்வாட், அவரது உதவியாளர் ஆகியோர் காயமடைந்தனர்.

    உடனே இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

    ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இடையே நடந்த இந்த மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகாராஷ்டிரா அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது.
    • எனவே பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிரா வருகிறார் என்றார் சஞ்சய் ராவத்.

    மும்பை:

    உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிராவுக்கு வருகிறார். அவர் மகாராஷ்டிராவை அவ்வளவு நேசிக்கிறார் என்பதால் அல்ல.

    உத்தர பிரதேசத்திற்கு பிரதமர் செல்வது உ.பி.யை நேசிப்பதால் அல்ல. உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தொகுதிகள் அதிகம். அதற்குப் பிறகு மகாராஷ்டிரா. வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா முக்கியப் பங்கு வகிக்கும்.

    இங்குள்ள அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது.

    கடந்த 13 மாதங்களில் 8 முதல் 10 முறை இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஏன் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார்.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்வு ஜூன் 21-ம் தேதி அன்று சிவசேனா இரண்டாகப் பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது. ஷிண்டே முகாம் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார். ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

    ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. 53 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.

    இந்நிலையில், சபாநாயகர் அறிவிப்பை ஏற்க மறுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடரலாம்.

    மும்பை:

    மகாராஷ்டிரா முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் நேற்று முடிவை அறிவித்தார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா அணி. ஷிண்டே அணி எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது. சட்டமன்ற கட்சித்தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே, சபாநாயகரின் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வராக தொடரலாம்.

    மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்வு ஜூன் 21ம் தேதி அன்று சிவசேனா இரண்டாக பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது.

    ஷிண்டே முகாம் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார்.

    ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. மேலும், 53 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யவும் முடியாது.

    ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வராக தொடரலாம் எனவும் சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.

    • உத்தவ் தாக்கரே கட்சி 23 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிப்பு.
    • 48 இடங்களை பிரித்துக் கொள்வதில் மூன்று கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை.

    இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்திற்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய மாநிலமாக கருதப்படுவது மகாராஷ்டிரா மாநிலம். இந்த மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளது.

    மகாராஷ்டிராவில் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று கட்சிகளுக்கு இடையே இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில் "மகாராஷ்டிரா மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த இன்று முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்று கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    மகாராஷ்டிராவில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்கள் தொடர்பாக வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஆலோசனையில் அது சரி செய்யப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே கட்சி 23 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    ×