என் மலர்
நீங்கள் தேடியது "சிவசேனா"
- உத்தவ் சிவசேனா கட்சியின் 'சாம்னா' நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.
- முரண்பாடுகளை களைந்து, ஒற்றுமையாக ஒரு தலைவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டும்.
இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் -உத்தவ் சிவசேனா கட்சி வலியுறுத்தல்
இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியிருந்த நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியும் இதே கருத்தை தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் 'சாம்னா' நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.
அந்த தலையங்கத்தில், "இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள் வெவ்வேறு மாநிலங்களில் நிலவும் முரண்பாடுகளை களைந்து, ஒற்றுமையாக ஒரு தலைவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டும். அந்த தலைவர் ஸ்டாலினா, மம்தாவா அல்லது வேறு ஒருவரா என்பதை சீக்கிரம் முடிவு செய்வது அவசியம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் 27 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும் வெற்றி பெற்றன.
- தேர்தலில் பாஜக 32 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மேயர் தேர்தல் நடைபெற்று வருகிறது.
சந்த்ரபூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சி கவுன்சிலர்கள் வாக்களித்ததால், பாஜக மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றார். உத்தவ் தாக்கரே கட்சி கவுன்சிலர்கள் மாற்றி வாக்களித்ததால் குதிரை பேரம் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சந்த்ரபூர் மேயர் தேர்தலில் பாஜக 32 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் 31 இடங்களில் வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தது. சிவ சேனா (UBT) 6 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இது காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடித்திருந்தது. ஆனால் தேர்தலில் சிவ சேனா (UBT) கவுன்சிலர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.
63 இடங்களை கொண்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பாஜக 23 இடங்களை பிடித்திருந்தது. சிவ சேனா (UBT) 6 இடங்களையும், பாரதிய ஷேட்கரி கம்கார் பாக்ஷ் (ஜனவிகாஸ் சேனா) 3 இடங்களையும், விபிஏ 2 இடங்களையும், ஏஐஎம்ஐஎம், பிஎஸ்பி, சிவ சேனா ஆகியவை தலா ஒரு இடங்களையும் பெற்றிருந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடத்தில் வெற்றி பெற்றிருந்தன.
விபிஏ கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். விபிஏ கவுன்சிலர் இருவர் காங்கிரஸ்க்கு வாக்களித்திருந்தால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார். காங்கிரஸ் கட்சியுடன் விபிஏ கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் குதிரை பேரம் நடைபெற்றது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
- மும்பை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
- மனுவை வாபஸ் பெறும் நாளில் தான் தேர்தல் நடக்கிறது.
30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பா.ஜ.க அந்த மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.
மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க-89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன.
பெரும்பான்மைக்கு 114 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க கூட்டணிக்கு 118 கவுன்சிலர்கள் ஆதரவு உள்ளது. மும்பை மேயர் பதவி தொடர்பாக பா.ஜ.கவுக்கும், துணை முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார். சுழற்சி முறையில் 2½ ஆண்டுகள் மேயர் பதவி வேண்டும் என்று போர்க் கொடி தூக்கினார்.
மேயர் பதவி தொடர் பாக பா.ஜ.க-ஏக்நாத் ஷிண்டே இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பா.ஜ.கவுக்கு மேயர் பதவியும், ஏக்நாத் ஷிண்டே சிவ சேனாவுக்கு துணை மேயர் பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மும்பை மேயர் பதவிக்கு பெண் உறுப்பினரான ரிதுதவ்டே பா.ஜ.க பெயரை பரிந்துரை செய்து அறிவித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே சிவ சேனா சஞ்சய் சாடியை துணை மேயர் பதவிக்கு பரிந்துரைத்தது.
மும்பை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடக்கிறது. மனுவை வாபஸ் பெறும் நாளில் தான் தேர்தல் நடக்கிறது.
போட்டி இருந்தால் தேர்வு நடைபெறும். பா.ஜ.க-வை சேர்ந்த ரிதுதவ்டே மும்பை மேயராகவும், ஏக்நாத் ஷிண் டேயின் சிவசேனா வேட்பாளர் சஞ்சய் சாடி துணை மேயராகவும் தேர்வாகிறார்கள்.
- 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி.
- ஜெய் மராட்டியத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பாஜக அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக-89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன. உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 65 இடங்களும், அதன் கூட்டணியில் உள்ள ராஜ் தாக்கரே வுக்கு 3 இடங்களும் கிடைத்தன.
இந்த நிலையில் சிவ சேனாவை பாஜகவால் அழிக்க முடியாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பால் தாக்கரே நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி மட்டுமல்ல. அது ஒரு சித்தாந்தம் நிறைந்தது. அதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று பாஜக. நினைத்தால் அது தவறு. எங்களை பாஜகவால் அழிக்க முடியாது. சிவசேனா இல்லை என்றால் பாஜக ஒருபோதும் மும்பை மாநகராட்சிையயோ அல்லது மாநிலத்தையோ கைப்பற்றி இருக்க முடியாது.
உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக பணபலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் குறைபாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் சந்தித்தன. மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாங்கள் விரும்பியபடி இல்லாவிட்டாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம்.
சிவசேனா அதிகாரம் பெறுவதற்காக தொடங்கப் படவில்லை. மராட்டிய மக்களின் உரிமைக்காக போராடுவதற்காகவே தொடங்கப்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் மராத்தி அல்லாத கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி.
சிவசேனா தொண்டர்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் ஜெய் மராட்டியம் என்ற முழக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரும் அதை ஒரு வாழ்த்தாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
- காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
- அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 893 வார்டுகளுக்கு 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் அரசியல் போட்டி மிகக்கடுமையாக இருந்தது. பா.ஜ.க. மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன.
காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
புனே மாநகராட்சியில் பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. உத்தவ் சிவசேனா மற்றும் எம்.என்.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்தும், தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் ஒன்றிணைந்தும் போட்டியிட்டன.
மும்பை தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதற்கான முக்கிய காரணம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் நிற்கும் சூழல் உருவாகியிருப்பதே. தங்களின் பழைய அரசியல் அடையாளத்தையும் செல்வாக்கையும் மீட்டெடுக்க அவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அவர்களை நேரடியாக எதிர்கொண்டு களம் இங்கியுள்ளது.
இதனால், மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது. தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. இன்று மதியம் நிலவரப்படி பா.ஜ.க. 58 இடங்கள், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தாக்கரே சிவசேனா 45 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
அதேபோல நவி மும்பையில் இப்போது முழுமையாக பா.ஜ.க. கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது. பா.ஜ.க. 22 இடங்களிலும் ஷிண்டே சிவசேனா 25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்ற கட்சிகள் ஒற்றை இலக்கிலேயே உள்ளன.
நாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க. 73 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
122 வார்டுகளை கொண்ட நாசிக்கில் பா.ஜ.க. 10 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 3 வார்டுகளிலும் வெற்றிபெற்று உள்ளன.
புனேவில் பா.ஜ.க. 48 இடங்கள், அஜித் பவார் என்.சி.பி. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தாக்கரே சிவசேனா 4 இடங்களிலும் ராஜ் தாக்கரே கட்சி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
தானேவிலும் பா.ஜ.க. கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. அங்கு பா.ஜ.க. 10 இடங்கள், சிவசேனா 20 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.
- மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது.
- தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 893 வார்டுகளுக்கு 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
தேர்தலில் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பாக கருதப்படும் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்தலில், 227 இடங்களுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் அரசியல் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. பா.ஜ.க. மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன.
காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
புனே மாநகராட்சியில் பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. உத்தவ் சிவசேனா மற்றும் எம்.என்.எஸ். கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்தும், தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் ஒன்றிணைந்தும் போட்டியிட்டன.
மும்பை தேர்தல் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதற்கான முக்கிய காரணம், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் நிற்கும் சூழல் உருவாகியிருப்பதே. தங்களின் பழைய அரசியல் அடையாளத்தையும் செல்வாக்கையும் மீட்டெடுக்க அவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அவர்களை நேரடியாக எதிர்கொண்டு களம் இறங்கியுள்ளது.
இதனால், மும்பை மாநகராட்சி தேர்தல் ஒரு சாதாரண உள்ளாட்சி தேர்தலைத் தாண்டி, பெரிய அரசியல் போர்க்களமாக மாறியது. தேர்தலையொட்டிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 35 இடங்களிலும், சிவசேனா-உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி 24 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
மும்பை மாநகராட்சியில் 227 இடங்களில் 60 இடங்களுக்கான முன்னிலை விவரங்கள் தெரியவந்துள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணி 15 இடங்களிலும், ஷிண்டேவின் கட்சி 10 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் யு.பி.டி. 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. எம்.என்.எஸ். 6 இடங்களிலும், சரத் பவாரின் கட்சி 1 இடத்திலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
151 வார்டுகளை கொண்ட நாக்பூரில் பா.ஜ.க. கூட்டணி 35 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
- மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- எதிர்க்கட்சி வேட்பாளர்களை ED, CBI மூலம் மிரட்டி பயமுறுத்துகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் வாபஸ் பெற்றதால், அக்கூட்டணி 68 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி வேட்பாளர்களை ED, CBI மூலம் மிரட்டி பயமுறுத்தி, அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றிகளை விலைக்கு வாங்க பாஜக முயற்சிக்கிறது என்றும் இதனை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று உத்தவ் சிவசேனா கட்சி காட்டமாக தெரிவித்துள்ளது.
- வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை KKR அணி ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.
- ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச வீரர்களை புறக்கணிக்க வேண்டும்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானை துரோகி என த்தவ் சிவசேனா கட்சி கடுமையாகச் சாட்டியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷாருக்கானுக்குச் சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.
இதுகுறித்து பேசிய உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே, "வங்கதேச வீரரை கொல்கத்தா அணியில் சேர்ப்பது நாட்டின் பாதுகாப்பு விவகராம் தொடர்புடையது. ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச வீரர்களை புறக்கணிக்க வேண்டும். ஷாருக்கான் வங்கதேச வீரரை விளையாட வைத்தால் அதனால் அவருக்கு கிடைக்கும் பணம் பயங்கரவாதத்தை வளர்க்கவும், நமது நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டவும் பயன்படுத்தப்படும். எனவே நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். துரோகிகளை நாட்டுக்குள் விடமாட்டோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை கேட்போம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சங்கீத் சோம், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை துரோகி என்று கடுமையாகச் சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புனே மாநகராட்சியின் 34-வது வார்டுக்கு சிவசேனா சார்பில் உத்தவ் காம்ப்ளே, மச்சிந்திரா தவலே ஆகியோர் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவிக்க ஏ, பி விண்ணப்பங்களை வழங்கும். இந்த இருவருக்கும் அந்த வார்டில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப கடிதத்தை சிவசேனா கட்சி வழங்கி இருந்தது. இதனால் வேட்பு மனு தாக்கலின்போது வார்டு அலுவலகத்தில் இருவருக்கும் இடைேய கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் உத்தவ் காம்ப்ளே ஆத்திரமடைந்து மச்சிந்திரா தவலேயின் கையில் இருந்த கட்சி வழங்கிய அங்கீகார விண்ணப்ப கடிதத்தை பிடுங்கி கிழித்து வாயில் போட்டு விழுங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனா வேட்பாளர் உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, தேர்தல் பணியின் போது அரசு ஊழியரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக உத்தவ் காம்ப்ளே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
- ராஜ் தாக்கரே 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா கட்சியை தொடங்கினார்
- உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக கைகோர்த்தனர்.
சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி மொழிக்காக ஒன்றாக கைகோர்த்தனர்.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தியது.
இந்நிலையில், வரவிருக்கும் நகராட்சித் தேர்தல்களுக்காக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா காட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
கூட்டணி முடிவை அறிவித்த பிறகு தாக்கரே சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
- 2019-24 சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் அவரது சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது
- சஞ்சய் ஷிர்சத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.
மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் ஒரு தனியார் அறையில் பணம் நிறைந்த புகைபிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
2019-24 சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் அவரது சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது தொடர்பாக விளக்கம் நேற்று வருமான வரித் துறை சமீபத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு வெளியிடப்பட்ட மறுநாளே இந்த வீடியோ வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அவுரங்காபாத் (மேற்கு) தொகுதி எமில்ஏவும் பாஜக கூட்டணி அரசின் அமைச்சருமான சஞ்சய் ஷிர்சாத், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவைச் சேர்ந்தவர்.
இந்த வீடியோவை உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் வீடியோவில் காணப்படும் சூட்கேசில் பணம் இல்லை என்றும், அது துணிகளை வைப்பதற்கான பை என்றும் சஞ்சய் ஷிர்சாத் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சிலர் வருமான வரித்துறையில் தனக்கு எதிராக புகார் அளித்ததாகவும், இதன் காரணமாக தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கிடையேசஞ்சய் ஷிர்சத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.
- நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள்.
- குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிராவில் ஒருவர் வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் அவரின் காதுகளுக்குக் கீழே அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். நீங்கள் அடித்ததை வெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்'' என்று தெரிவித்தார்.






