என் மலர்
நீங்கள் தேடியது "Raj Thackeray In Mumbai"
- ராஜ் தாக்கரே 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா கட்சியை தொடங்கினார்
- உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக கைகோர்த்தனர்.
சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி மொழிக்காக ஒன்றாக கைகோர்த்தனர்.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தியது.
இந்நிலையில், வரவிருக்கும் நகராட்சித் தேர்தல்களுக்காக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா காட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
கூட்டணி முடிவை அறிவித்த பிறகு தாக்கரே சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். பெங்களூரில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்தார். சென்னைக்கு வந்து நடிகராகி முன்னணி நட்சத்திரமாக மாறினார். அவரது ரசிகர்கள் வலியுறுத்தியதால் கடந்த டிசம்பர் 31-ந்தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார்.
மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த அமைப்பான சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார் ரஜினிகாந்த். கடந்த 2010ம் ஆண்டு பால் தாக்கரேவை சந்தித்தபோது அவர் கடவுளைப் போன்றவர் என்று கூறினார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ள சூழலில் அவரது மனைவி லதா நவநிர்மான் சேனா தலைவரும் பால் தாக்கரேவின் மருமகனுமான ராஜ் தாக்கரேவை சந்தித்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் சினிமா, அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியுடன் இணக்கமாக இருந்த ராஜ்தாக்கரே சில நாட்களாக பா.ஜனதாவையும், மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
நேற்று லதா ரஜினிகாந்தை சந்தித்ததை டுவிட்டரில் பதிவு செய்த ராஜ் தாக்கரே ஆங்கிலத்தில் ரஜினிகாந்த் என்றும் மராத்தியில் சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்த் என்றும் ரஜினியை குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் பிறப்பால் மராட்டியர். மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கே மகாராஷ்டிராவில் முதல் உரிமை என்பதே ராஜ்தாக்கரே மாமனாரும் சிவசேனா கட்சி முன்னாள் தலைவருமான மறைந்த பால்தாக்கரே கொள்கை என்பது குறிப்பிடத்தக்கது. #LathaRajinikanth #RajThackeray
நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று மும்பை வந்திருந்தார். பின்னர் தாதரில் உள்ள மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயின் கிருஷ்ணா குஞ்ச் இல்லத்துக்கு லதா ரஜினிகாந்த் சென்றார். அங்கு ராஜ்தாக்கரே மற்றும் அவரது மனைவி ஷர்மிளா தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசினார்.
லதா ரஜினிகாந்த் உடனான இந்த சந்திப்பு குறித்து ராஜ் தாக்கரே, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், லதா ரஜினிகாந்த் உடனான சந்திப்பின் போது அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தெரிவித்து இருக்கிறார். அத்துடன் உரையாடலின் போது எடுத்த படங்களையும் ராஜ் தாக்கரே பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க ஆயத்தமாகி வரும் நிலையில், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்து அரசியல் குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






