search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாமலை"

    • சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை.
    • அண்ணாமலை அ.தி.மு.க. உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவை பற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம்.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த அன்னதானத் தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் குடிநீர் பிரச்சனைக்கும், விவசாயத்திற்கும் தேவையானது முல்லைப்பெரியாறு ஆகும். இந்த முல்லை பெரியாறில் ஜெயலலிதா தொடர் சட்டப் போராட்டம் நடத்தி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம். அணை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பை பெற்றுதந்தார். அது மட்டுமல்ல எட்டு முறை அணையை ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

    ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கேரளா அரசு புதிய அணைக்கட்ட முயற்சிக்கிறது. தி.மு.க. அரசு முல்லைப் பெரியாறு உரிமைக்காக எதையும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது.

    ஜனவரி மாதம் புதிய அணைக்கட்ட மத்திய அரசுக்கு மனுவை கேரளா அரசு அனுப்பி வைத்தது. அதை பரிசீலனை செய்து 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறின் உரிமை காக்க வேண்டிய தமிழக அரசு உரிமையை காவு கொடுத்து விட்டது. இது தொடர்பாக எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    தற்போது முல்லைப் பெரியாறில் உரிமையை நிலைநாட்ட கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்காமல் மென்மை போக்கை கடைபிடிக்கிறார் முதலமைச்சர். அங்கு இருக்கும் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார். எதற்காக இதை செய்கிறார் முதலமைச்சர்? வாக்கு வங்கிக்காகவா? கூட்டணி தர்மத்திற்காகவா? தன் குடும்ப சொத்தை பாதுகாக்கவா?.

    முல்லை பெரியாறு உரிமை பிரச்சனையில் தொடர்ந்து மென்மை போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை அல்லது தேனியில் விவசாயிகள் உரிமையை காக்க மாபெரும் போராட்டம் நடத்த அஞ்ச மாட்டோம்.

    ஜெயலலிதா இந்துத்துவா கொள்கையை கடைப்பிடித்தார். அவர் இல்லாததால் அதை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அ.தி.மு.க. இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற அம்மாவின் வார்த்தைக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

    சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை. அண்ணாமலையின் பாராட்டு அ.தி.மு.க.விற்கு தேவை இல்லை. அண்ணாமலை அ.தி.மு.க. உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவை பற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம். அண்ணாமலை அவரது தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, வீரசாவர்கர் ஆகியோரின் சாதனையை சொல்லி ஏன் பாராட்டவில்லை.

    மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஜெயலலிதாவை அண்ணாமலை அரசியல் உள்நோக்கத்துடன் புகழ்ந்து பேசியதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர்.
    • பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர்.

    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புரட்சித்தலைவி அம்மாவை இந்துத்துவா தலைவர் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை புரட்சித்தலைவி அம்மாவை பற்றி தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது. புரட்சித்தலைவி சாதி மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்.

    "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர்.

    பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி புரட்சித்தலைவி அம்மா தான் என்பது நாடறிந்த உண்மை.

    "அம்மா என்றால் அன்பு" என்ற தாய்மைக்கு இலக்கணமாக நம்மோடு வாழ்ந்து மறைந்தவர் அம்மா. புரட்சித்தலைவரை போன்று, புரட்சித்தலைவி அம்மாவும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

    அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் அம்மா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே சமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள்.
    • கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டி காட்டக்கூடாது.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளான இன்று சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது செய்தியாளர்கள் அவரிடம், தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். 

    அதற்கு பதில் அளித்த சீமான், தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு தனியாக நீங்கள் பெற்ற வாக்குகள் எத்தனை என்று பார்ப்போம். நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பாஜக பெற்று இருந்தால் நான் கட்சியை கலைத்துவிட்டு போய் விடுகிறேன். யார் பெரிய கட்சி என்று தெரிந்து விடும் இல்லையா. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டி காட்டக்கூடாது. தனியாக நீங்கள் எவ்வளவு வாக்கு பெற்று இருக்கிறீர்கள் என்பதை காட்ட வேண்டும் என்று பாஜகவிற்கு சவால் விட்டுள்ளார்.

    • 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெறும்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப்பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும். அ.தி.மு.க. இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் அதை நிரப்ப பா.ஜனதாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார்.

    ஆனால் 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டது. தமிழகத்தில் கோவில்களை காக்கும் ஒரு கட்சியை இந்துக்கள் தேடுகிறார்கள் என்றால் அது இயல்பாகவே பா.ஜனதாவாகத்தான் இருக்கும். ஏனென்றால் ஜெயலலிதாவிடம் இருந்து அ.தி.மு.க. வெகு தொலைவுக்கு விலகிவிட்டது.

    2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய 2 காரணங்களால்தான் தமிழகத்தில் பா.ஜனதா பெரிய இடத்தைப் பிடித்தது என்று நான் சொல்வேன்.

    தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெறும். தெலுங்கானாவில் 17 இடங்களில் 9 இடங்களைத் தாண்டி விடுவோம். ஆந்திராவிலும் நல்ல எண்ணிக்கையில் இடம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்றைக்கு, எப்போது, எத்தனை பேர் வருவார்கள் என்ற விபரத்தை மாநில தலைவர் முறைப்படி அறிவிப்பார்.
    • நாங்கள் மோடி சொந்த குடும்பத்துக்கே செய்த துரோக புத்தகத்தை தருகிறோம்.

    சென்னை:

    ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறை சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் மோடி பேசினார். இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

    மேலும், வரும் அனைவருக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி தி.மு.க.வும் காங்கிரசும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.

    எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதிலளித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-

    என்றைக்கு, எப்போது, எத்தனை பேர் வருவார்கள் என்ற விபரத்தை மாநில தலைவர் முறைப்படி அறிவிப்பார்.

    அதற்குள் நான் அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சாப்பாடு செய்யும் போது மாட்டிறைச்சி கறி செய்யுங்கள். நாங்கள் விரும்பி சாப்பிட தயாராக இருக்கிறோம்.

    நீங்கள் தி.மு.க., காங்கிரஸ் மீது இட்டு கட்டி தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாக புத்தகத்தை தாருங்கள். பரவாயில்லை, வாங்கி கொள்கிறோம். நாங்கள் மோடி சொந்த குடும்பத்துக்கே செய்த துரோக புத்தகத்தை தருகிறோம். அதையும் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?
    • முதலமைச்சரின் மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் நடத்துனரும், போலீஸ்காரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இதையடுத்து போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில்,

    கடந்த 2021-2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

    முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


    • மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது.
    • பிரிவினையை ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

    சென்னை:

    ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடியின் கருத்துக்கு, "தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்" என்றும் "வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவிற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    தமிழகத்திற்குள்ளும், வெளியிலும் நடக்கும் சம்பவங்கள் குறித்து எதுவுமே அறியாமல், நிலைய வித்வான்கள் சூழ்ந்த குழிக்குள்ளே வசிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசாவில் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி பேசியதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது.

    மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது என்பதையும், அந்தப் பிரிவினையை ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதையும், மு.க.ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


    • ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை.
    • ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆனால், தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.


    ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதையும் தடுக்கவில்லை. தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, திமுக எப்போதும் தயங்கியதே இல்லை.

    ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    உடனடியாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


    • கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஒரு சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    • மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தலைமையில் தனி கூட்டணியை அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்க சதவீதத்தில் ஓட்டுகளை பெற வேண்டும், குறைந்த பட்சம் 5 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்தால் தமிழக பா.ஜ.க.வில் நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலைக்கும் நெருக்கடி உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். பாராளுமன்ற தேர்தல் முடிவு சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை தலைவர் பதவியை தக்க வைக்க போராட வேண்டி இருக்கும். அவர் தலைவர் பதவியை இழக்கவும் நேரிடலாம்.

    அண்ணாமலை தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள தனிப்பட்ட முறையில் முயற்சி செய்தார். அ.தி.மு.க.வுடன் உறவை முறித்துகொண்ட அவர் பா.ஜ.க. மேலிடத்தின் கட்டளைக்கு உட்பட்டு தனது தலைமையில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். ஆனால் அவரால் தேர்தலில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

    கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஒரு சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. 2014-ம் ஆண்டு கோவை தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றிருந்தார். தற்போது அண்ணாமலைக்கு அந்த அளவுக்கு ஓட்டு கிடைக்குமா என்பது தெரியவில்லை. கோவையில் நிலைமை இப்படியென்றால் மற்ற தொகுதிகளில் நிலைமை என்னவாகும்?

    தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக பா.ஜ.க.வில் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும். அதன்படி தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக மற்றொரு பா.ஜ.க. நிர்வாகி கூறுகையில், 'தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்பது யூகத்தின் அடிப்படையிலான செய்தி. 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வரை தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிப்பார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை' என்றார்.

    • கோவையில் அண்ணாமலை வெல்வது உறுதி.
    • அண்ணாமலை ஜுரம் தி.மு.க.வை ஆட்டிப்படைத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சியை யாரும் எதிர்க்க துணியாத நிலையில் கடந்த 2021 ஜூலையில் தமிழக பா.ஜ.க. தலைவரானது அண்ணாமலை துணிவுடன் தக்க ஆதாரங்களுடன் எதிர்த்து வருகிறார். அது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என்றதும் பெரும் படையை அனுப்பி அதிகாரம், பணம், ஆள்பலத்தை வைத்து அவரை வீழ்த்த அத்தனை அட்டூழியங்களையும் திமுக செய்தது. ஆனாலும் கோவையில் அண்ணாமலை வெல்வது உறுதி. இப்படி அண்ணாமலை ஜுரம் தி.மு.க.வை ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால் எப்படியாவது, ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைத்து அவரை முடக்கி விடலாம் என தி.மு.க. முக்கியப் புள்ளிகள் பகல் கனவு கண்டு வருகின்றனர்.

    புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கவர்னர் மாளிகை அனுமதி கொடுத்து விட்டதாக பொய்யான தகவலையும் பரப்பினர். ஆனால் இதை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.

    எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் அண்ணா மலையின் மக்கள் பணிகளை முடக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அண்ணாமலை மீதான புகாரின்பேரில் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு அரசு அனுமதி.
    • வழக்கு தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என சமூக ஆர்வலர் புகாரின்பேரில் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

    இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்த எந்த தகவலும் தெரியாது என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

    அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை.

    மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது. என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    • அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும்.

    சேலம் சமூர் ஆர்வலர் புகாரின் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என சமூக ஆர்வலர் வழக்கு தொடரப்படுகிறது.

    சேலம் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் அளித்த புகாரின்பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர, அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார்.

    அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    தொடர்ந்து, அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், எத்தனை வழக்குகள் போட்டாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது;

    கடந்த 3 ஆண்டுகளில், தி.மு.க அரசு என் மீதும், எங்கள் பா.ஜக., நிர்வாகிகள் மீதும் உண்மையை பேசியதற்காக ஏராளமான வழக்குகளைத் தொடுத்துள்ளது. தற்போது என் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியது.

    என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மையை பேசியதற்காக என் மீது வழக்கு போடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கிய தி.மு.க.வின் உண்மை நிலை மக்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×