search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polling"

    • தமிழ்நாட்டி பெற்ற ஊழல் பணத்தை எல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்தார்கள். பேங்க் திறந்து இருக்கிறார்கள். இதுதான் இன்று தமிழ்நாட்டின் நிலைமை.
    • திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்து வீட்டு வரி, பால் விலை, மின்சார கட்டணம், பத்திர பதிவு ஆகிய அனைத்தையும் உயர்த்தி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தர் பேருந்து நிலையம், அரணாரை, சங்கு பேட்டை, துறைமங்கலம், பழைய பேருந்து நிலையம், ராஜா திரையரங்கம், வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    குறிப்பாக இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். அதேபோல் கழிவறைகள், சுற்றுசுவர் அமைத்து கொடுத்திருக்கேன். கடந்த முறை மத்திய அரசிடம் இருந்து என்ன நிதி பெறுகிறோம் என்றும் அதை எப்படி செலவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். சிறுகனூரில் மேம்பாலம், தரைப்பாலம், ரேஷன் கடை போன்றவற்றை அமைத்து கொடுத்திருக்கிறேன்.

    இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம். ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்தும், எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை அளித்துள்ளோம். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகாளாக ஆகியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 108 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மோடி தலைமையிலான 70 மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழங்கில் உள்ளார்கள் எப்படி தப்பிப்பார் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்து வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு 10 ஆண்டுகள் முதலமைச்சாராக இருந்தார். குஜராத்தில் நல்ல ஆட்சி கொடுத்திருக்கிறார். இந்த 23 வருடங்களில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் 1500 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் வீதம் மருத்துவ காப்பீடு வசதி செய்து தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். மருத்துவ உதவி என்றால் சாதாரண மருத்துவம் அல்ல உயர்தர சிகிச்சை செய்து தருகிறேன்.

    வருகிற வெள்ளிகிழமை யாருக்கு வாக்களிப்பது என்று குழப்பத்தில் இருப்பீர்கள். 50 ஆண்டுகலமாக தமிழ்நாட்டை ஆளவிட்டீர்கள், உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டுக் கொண்டே இருந்தீர்கள். அவர்களும் வாழ்ந்தார்கள் உயர்ந்தார்கள். குடும்பம் வாழ்ந்தது சொத்து சேர்த்தார்கள். தமிழ்நாட்டி பெற்ற ஊழல் பணத்தை எல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்தார்கள். பேங்க் திறந்து இருக்கிறார்கள். இதுதான் இன்று தமிழ்நாட்டின் நிலைமை.

    இங்கு உள்ள ஏழைகள், விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து இன்றைக்கு வரி கட்டுகிறார்கள். டாடா, பிர்லா மட்டும் வரி கட்டவில்லை. ஏழைகளான மக்களும் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம். பாவப்பட்ட மக்கள் அளிக்கும் இந்த வரி பணத்தை திராவிட முன்னேற்றகழக அரசும், முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்களும் ஊழல் செய்து கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். 50 ஆண்டுகள் இந்த திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்து வீட்டு வரி, பால் விலை, மின்சார கட்டணம், பத்திர பதிவு ஆகிய அனைத்தையும் உயர்த்தி உள்ளனர்.

    ஆகவே மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை ஆகவே தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

    • வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.
    • 16 ஆயிரத்து 500 பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த பணிகளை தேர்தல் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகிறார்கள்.

    சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 16 சட்ட மன்ற தொகுதிகள் வருகின் றன. இந்த தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தேர்தலுக்காக 3,719 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 600 பதற்றமான சாவடிகள் உள்ளன. சென்னையில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 299 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ள 16 ஆயிரத்து 500 பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.

    வாக்குப்பதிவு நடை பெறும் மையங்களில் போதிய மின் விளக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கூட வகுப்பறைகளே வாக்குப்பதிவு மையங்களாக மாறும் நிலையில் அங்கு ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள விளக்குகளோடு சேர்த்து கூடுதல் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டு போட வரும் வாக்காளர்களின் தாகத்தை தணிக்க தேவையான குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

    தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.

    மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டு போடுவதற்கு வசதி யாக சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. சக்கர நாற்காலி களில் வரும் வாக்காளர்கள் எளிதாக அதில் ஏறி வாக்குச் சாவடி மையத்துக்குள் சென்று ஓட்டு போடுவதற்கு உரிய நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்தே பாதுகாப்பு தொடர்பான பணிகளை போலீசாருடன் இணைந்து அனைத்து தேர்தல் அலுவலர்களும் மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் நாளில் வாக்குப் பதிவு மையங்களில் வாக் காளர்கள் அடையாள அட்டையுடன் இருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் வெளியாட்களை அனுமதிக்கவே கூடாது என்றும் தேர்தல் அலுவலர் களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் நாள் அன்று இது தொடர்பாக வாக்குப்பதிவு மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற் பாடுகளை போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசி முன்கூட்டியே முடி வெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதற்றமான சாவடிகளில் கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் சில தினங்களில் கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

    பதற்றமான சாவடிகளில் துணை ராணுவ படையினை கூடுதலாக மையத்தின் வளாகத்துக்குள்ளும் வெளியேயும் பணி அமர்த்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்படி பாராளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை திட்டமிட்டு அதில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகளும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    • அதேபோல விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.
    • நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது.

    கோவை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ் மொழிக்கு தேசிய அளவில் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். இந்த பிரச்சி னையில் தி.மு.க.வினருக்கும், எந்த கொள்கையும் இல்லை. தமிழகத்தில் வடமாநிலத்தி னரின் எண்ணிக்கை தொட ர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதேநிலை நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும்.

    சின்னத்தை முடக்கினாலும் நாம் தமிழர் கட்சியை எதுவும் செய்து விட முடியாது. அதேபோல விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவ டிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்து விட்டதாக உலக வங்கி கருத்து தெரி வித்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக மக்களை ஏமாற்று கின்றனர். வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளை அறிவிப்பதற்கு 44 நாள் தாமதப்படுத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    மேகதாது அணை விவகாரத்தில் அண்ணாமலையின் கருத்து என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதே போல தமிழக நதி நீர் உரிமையை பாதுகாப்பதில் பாரதிய ஜனதாவின் நிலை என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் தேசியம் பேசுகிறவர்கள் கர்நாடகத்தில் மாநில உரிமைகள் குறித்து பேசுகின்றனர். எனவே ஒரு சொட்டு கூட தண்ணீர் தர முடியாது என்பவர்களுக்கு ஒரு வாக்கு கூட கிடையாது என மக்கள் முடிவெடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது கன்னடராக இருப்பது தனக்கு பெருமை என பேசிய அண்ணாமலை, கர்நாடகத்தில் தேர்தலில் போட்டியிடாமல் தமிழகத்தில் எதற்கு போட்டியிட வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது.

    • கள் இறக்கும் தொழிலாளரிடம் உங்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
    • கம்மம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து பி.ஆர்.எஸ்.கட்சி சார்பில் நாம நாகேஸ்வர ராவ் போட்டியிடுகிறார்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கள்ளுகடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பனை மற்றும் தென்னை மரங்களில்கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களிடம் வேட்பாளர்கள் நேரடியாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தந்த்ரா வினோத் ராவ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது கள் இறக்கும் பனைமர தொழிலாளி ஒருவர் பானை மற்றும் பனைமரம் ஏற பயன்படுத்தக்கூடிய உபகரணங்களுடன் வந்தார்.

    அவரிடம் இருந்து கள் பானையை வாங்கிய வேட்பாளர் அதனை கையில் ஏந்திய படி தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

    மேலும் கள் இறக்கும் தொழிலாளரிடம் உங்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.

    கள்பானையுடன் வேட்பாளர் ஆதரவு கேட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கம்மம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து பி.ஆர்.எஸ்.கட்சி சார்பில் நாம நாகேஸ்வர ராவ் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பா.ஜ.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
    • அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    மேட்டுப்பாளையம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள், மான், சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
    • வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், வேலை காரணமாக வாக்குரிமையை யாரும் இழந்து விடக் கூடாது என்பதற்காக, தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    அதனால் வர இருக்கும் மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

    அதன்படி விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இந்த விடுமுறையை பயன்படுத்தி தொழிலாளர் கள் வாக்களித்தார்களா? என சரிபார்க்க எந்த நடை முறையும் இல்லை.

    அதனால் தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறையை பெற, வாக்களித்ததற்கான சான்றை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தேர்தல் தேதியில் வழங்கப்படும் விடுமுறையை பயன்படுத்தி தொழிலாளர்கள் வாக்களிக்காமல் இருப்பது விடுமுறையின் நோக்கம் நிறைவேற்றப்படாமல் போகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், தேர்தல் நாளில் வாக்களிக்க விரும்பாமல் வேலை செய்ய விரும்பினால் சம்பந்தப்பட்ட தொழிலாளியை தனியார் நிறுவனம் வேலை செய்ய அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு மனுதாரர் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததை அடுத்து, வாக்களிக்க வேலை தடையாக இருக்கக் கூடாது; தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டுமென்ற அடிப்படையில் தான் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    வாக்களிக்க வேண்டும் என எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும்? தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை பெற, வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது" என்று உத்தர விட்டு நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

    • அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.
    • நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட அரசரடி, இந்திரா நகர், பொம்முராஜபுரம், நொச்சிஓடை ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சராசரியாக 1500 வாக்குகள் பதிவாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை.

    குறிப்பாக சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் போன்ற எந்த பணிகள் மேற்கொள்ள வேண்டுமானாலும் வனத்துறை அனுமதி பெற்றே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.

    அதனை சீரமைக்க கூட வனத்துறை அனுமதிக்கவில்லை. பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இருப்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவித்தும் கட்டிடத்தை சீர் செய்யவில்லை.

    இது போன்ற காரணங்களால் மேற்படி 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறிவிப்பு பலகை வைத்தனர். தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் ஏற்கவில்லை.

    இந்நிலையில் இங்குள்ள அரசு பள்ளியில்தான் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் அந்த வாக்குப்பதிவு மையத்தை சீரமைக்க அதிகாரிகள் தலைமையில் பணியாளர்கள் வந்தனர்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவர்களுக்கு பாதிப்பு என்று நாங்கள் சொன்னபோது வராமல் வாக்குப்பதிவுக்காக மட்டும் பள்ளியை சீரமைக்க எதற்காக வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். பள்ளியின் மேற்கூரையை இடித்து விட்டு நிரந்தரமாக கட்டிடத்தை சீரமைத்தால் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும். தற்காலிக பணி மேற்கொள்வதென்றால் வேண்டாம் என அவர்களுக்கு எச்சரித்தனர்.

    மேலும் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர். இதனால் பணியை மேற்கொள்ளாமல் ஆணையாளர் தலைமையில் வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இன்று திட்ட அலுவலர் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது.
    • இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கேரளாவில் 26-ந்தேதியும் நடக்கிறது. இந்த 2 நாட்களும் வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க சிரமத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது.

    இது தொடர்பாக இந்திய முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.எம்.ஏ.சலாம் கூறியதாவது:-

    கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆகும். இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் முஸ்லிம்கள், நமாஸ் (பிரார்த்தனை) செய்ய மசூதிகளுக்கு செல்வார்கள். அந்த நாளில் வாக்குப்பதிவு வைத்திருப்பது இஸ்லாமிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    இந்த நாள் இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றும் வாக்காளர்கள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இடையூறாக இருக்கும். இதுகுறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனை மறுபரிசீலனை செய்ய அவர்கள் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நவாஸ் ஷெரீப் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
    • பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க ராணுவமும் சர்தாரிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ந்தேதி நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இதில் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன. பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சி கூட்டணி சார்பில் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அவருக்கு போட்டியாக, எதிர்க்கட்சிகள் சார்பில் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் களமிறங்கினார். இவருக்கு இம்ரான்கானின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    பாகிஸ்தான் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு மார்ச் 9-ந் தேதியன்று பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதன்மூலம் அவர் 2-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.

    பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க ராணுவமும் சர்தாரிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிப் அலி சர்தாரி முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆவார்.

    • பொறுப்பாளா்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
    • 14 ஆயிரத்து 411 வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா்.

    காங்கயம்:

    காங்கயம் அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதையொட்டி தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தாா்.அப்போது அவா் கூறியதாவது:-

    திருப்பூா் தி.மு.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கயம் அருகே உள்ள படியூாில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறாா். கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள், வாகன நிறுத்தங்கள் தயாா் செய்யும் பணிகள், உணவு கூடம் அமைத்தல் என அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

    நாட்டின் பன்முக தன்மை சிதைக்கப்பட்டு, ஜனநாயகம் சீா்குலைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதை எதிா் கொண்டு எவ்வாறு நாம் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆலோசனை கூட்டமாக இந்த கூட்டம் இருக்கும்.

    கூட்டத்தில் 14 கழக மாவட்டங்களில் இருந்து 14 ஆயிரத்து 411 வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா். அதாவது 50 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் இதில் கலந்துகொள்கின்றனா்.

    அவா்களோடு அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், தலைமை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொள்ள உள்ளனா்.மாலை 4 மணிக்கு தி.மு.க தலைவா் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறாா். இவ்வாறு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

    • இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
    • வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் கோசி, ஜார்க்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்காளத்தில் தூப்குரி, கேரளாவில் புதுப்பள்ளி, உத்தரகாண்டில் பாகேஸ்வரர்,மற்றும் திரிபுராவில் தன்கர், போக்சநகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. கோசி மற்றும் தன்கர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததாலும் மற்ற 5 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்ததாலும் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். பல வாக்குசாவடிகளில் ஓட்டுப்போடுவதற்காக காலை முதலே வாக்காளர்கள் காத்திருந்தனர். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரபிரதேசம் கோசி தொகுதியில் ஆளும் பாரதியஜனதாவுக்கும், எதிர்கட்சிகள் புதிதாக உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வாக இருந்த தாராசிங் சவுதான் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி போட்டியிடுகிறது. இவருக்கு காங்கிரஸ்,கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி போட்டியிடவில்லை. இதே போல டும்ரி தொகுதியில் பாரதியஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் நேரடியாக மோதுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ஏ.ஐ.எம். ஐ.எம். கட்சியும் நேரடியாக களத்தை சந்தித்துள்ளது.

    திரிபுரா போக்சநகர் தொகுதியில் பாரதிய ஜனதாவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மேற்குவங்காளம் தூப்குரி தொகுதியில் பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்டு கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணி உருவான பிறகு நடைபெறும் 6 மாநிலங்களில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால் தேர்தல் முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வட்டாட்சியர் (தேர்தல்) ரவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு வளாகத்தில் உள்ள ராமநாதபுரம், முது குளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக் கான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாது காப்பாக வைக்க ப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களு டன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வை யிட்டனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனை கூடம் அலுவலக வளா கத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாது காப்பு அறையினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இதில் வட்டாட்சியர் (தேர்தல்) ரவி மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×