search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரிவேந்தர்"

    • அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி
    • வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

    அனைவருக்கும் வணக்கம்

    எனக்காக இரவு பகல் பாராமல் உழைத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அமமுக, தமாகா, சகோதரர் OPS அணி, பாமக, தமிழர் தேசம் கட்சி, தமமுக, புதிய நீதி கட்சி, தமகமுக, காமராஜர் மக்கள் கட்சி மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சி என அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி.

    குறிப்பாக இந்த மக்களவை தேர்தலை ஒருங்கிணைத்து நடத்திய இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஆதரவளித்த பார்க்கவகுல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்

    டாக்டர் பாரிவேந்தர்

    நிறுவனர் , IJK

    • புதூர் உத்தமனூர் மற்றும் தச்சன் குறிச்சி கிராமத்திலும், பெருவளநல்லூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
    • தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், இன்று லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகிழம்பாடி வடக்கு ஊராட்சியில் டாக்டர் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர். தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து, புதூர் உத்தமனூர் மற்றும் தச்சன் குறிச்சி கிராமத்திலும், பெருவளநல்லூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

    பின்னர் குமுளூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கும்ப மரியாதை வழங்கியும், ஆரத்தி எடுத்தும் டாக்டர் பாரிவேந்தரை பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய அவர், நன்றியுள்ள இந்த ஊருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். குமுளூர் கிராமத்தில், 5 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தின்கீழ் கல்வி பயின்று வருவதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து, புஞ்சை சங்கேந்தி பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, வெங்கடாஜலபுரம் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, விவசாய சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெற்கதிர்கள், செங்கரும்பு வழங்கியும், பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். உழவு மாடுகளை ஏர் பூட்டி, டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார்.

    இ.வெள்ளனூர் மற்றும் நஞ்சை சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து, பூவாளூர் பகுதியில் ஆதரவு திரட்டிய அவர், நல்லவர்கள் யார்? ஊழல்வாதிகள் யார்? என்பதை

    அறிந்து வாக்களியுங்கள் என்றும், மறந்தும் சூரியனுக்கு வாக்களிக்காதீர்கள் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

    இதனையடுத்து லால்குடிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தும், ஆரத்தி எடுத்து

    மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், மத்திய அரசு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடி ரூபாயை, முழுமையாக செலவு செய்து, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ததாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தாம் செய்த பணிகள், அமைச்சர்களை சந்தித்தது உள்ளிட்டவைகள் குறித்து, புத்தகமாக வழங்கியிருப்பதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • மருதூர் கிராமத்திற்கு சென்ற பாரிவேந்தர், காவிரி நீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாடக்குடி கிராமத்தில் பொதுமக்களிடையே பேசிய டாக்டர் பாரிவேந்தர், ஆயிரத்து 200 ஏழை மாணவர்களுக்கு இலவச உயர் கல்வியும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை வழங்கப்படும் என உறுதி அளித்தார். பள்ளி விடை - பை பாஸ் சாலையில் சப்வே பாலம் கட்டி தரப்படும் என அவர் உறுதி அளித்தார்.

    இதனைத்தொடந்து, V. துறையூர் கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாரிவேநத்ர், தமிழ்நாட்டில் உள்ள 38 திமுக எம்பிகள் 75 சதவீதம் மத்திய அரசு வழங்கிய நிதியை செலவு செய்யாமல் மீண்டும் திருப்பி அனுப்பியதாகவும், ஆனால் MP நிதியை தொகுதி மக்களுக்கு, தாம் முழுமையாக செலவு செய்ததாகவும் தெரிவித்தார்.

    பின்னர் ரெத்தினங்குடி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து, மருதூர் கிராமத்திற்கு சென்ற பாரிவேந்தர், காவிரி நீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து, மேல பெருங்காவூர் கிராமத்திலும், கீழப்பெருங்காவூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர், பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    நகர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை, பரிவட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ் வழங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார், "ஜெயிக்கிறார் ஜெயிக்கிறார்" பாரிவேந்தர் ஜெயிக்கிறார்" என்று முழக்கமிட்டு வாக்கு சேகரித்தார்.

    இதனைத்தொடர்ந்து நகர் கிராமத்தில் பொதுமக்களிடையே பேசிய டாக்டர் பாரிவேந்தர், 2019 தேர்தல் வாக்குறுதியின்படி, 118 கோடி ரூபாய் செலவில், ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாகவும், அந்தத் திட்டம் மீண்டும் தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த பாரிவேந்தர், இப்பகுதி மக்களின் கோரிக்கையான தடுப்பணை மற்றும் மயானப் பாதை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து, நெய்க்குப்பை ஊரில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், நாடு உயர, வளர தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கடந்த தேர்தலில் MP-ஆக செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட்டதாகவும், மக்களுக்கு உதவி செய்யவே மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏழை மக்களுக்கு தேடி தேடி உதவ வேண்டும் என்பதே தனது நோக்கம் எனக் கூறிய பாரிவேந்தர், மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி,118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார். ஜனநாயகம் காக்க குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என்றும், அவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றும் தெரிவித்தார். ஆன்மீகத்திற்கு விவேகானந்தர். அரசியலுக்கு மோடி என புகழராம் சூட்டிய பாரிவேந்தர், உலக நாடுகள் மோடியை பார்த்து Boss என்று அழைக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

    • கல்வி, மருத்துவம், பாலம் கட்டி கொடுத்தல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார்.
    • பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள்.

    பெரம்பலூர் மக்களைவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, வேப்பந்தட்டை பகுதி பாண்டகபாடியில், IJK தலைவர் ரவி பச்சமுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் கல்வி, மருத்துவம், வேளாண்மை, ஆகியவற்றுக்கு முக்கியத்தும் அளித்து, பல்வேறு நலத் திட்டங்களை டாக்டர் பாரிவேந்தர் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார். தற்போது, ஆயிரத்து 200 பேருக்கு இலவச உயர் கல்வியும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர்தர சிகிச்சையும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருப்பதாக டாக்டர் ரவிபச்சமுத்து சுட்டிக்காட்டினார்.10 லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு திட்டத்தையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் எனவும் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்துள்ளார் என டாக்டர் ரவிபச்சமுத்து தெரிவித்தார். தொகுதி மக்களுக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தர, டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு டாக்டர் ரவிபச்சமுத்து கேட்டுக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து, வேப்பந்தட்டை பகுதியின் சிறு நிலா ஊராட்சியில், டாக்டர் பாரிவேந்தருக்காக வாக்கு சேகரித்த IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் பாரிவேந்தர் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார். கல்வி, மருத்துவம், பாலம் கட்டி கொடுத்தல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அமைச்சர்களுடன் நல்ல நட்புறவில் இருப்பதால், தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார் என டாக்டர் ரவிபச்சமுத்து தெரிவித்தார். மீண்டும் அவரை வெற்றிபெறச் செய்தால், தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருவார் என ரவிபச்சமுத்து உறுதி அளித்தார். இலவச உயர்கல்வி, இலவச உயர் சிகிச்சை, வேலைவாய்ப்பு முகாம் என பல்வேறு பொன்னான வாக்குறுதிகளை அளித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள் என பொதுமக்களிடம் டாக்டர் ரவிபச்சமுத்து கேட்டுக்கொண்டார்.

    • தொகுதி மக்களின் அனைத்து தேவைகளை நிறைவேற்றக் கூடிய நல்லவர்களை தேர்ந்தெடுத்து, டெல்லிக்கு அனுப்பி வைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
    • பொதுமக்கள் சிந்தித்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாமல் பொதுமக்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினரும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் ராஜா தியேட்டர் மற்றும் சங்கு பகுதியில் பரப்புரை மேற்கொள்ள சென்ற டாக்டர் பாரிவேந்தருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய பாரிவேந்தர், தொகுதி மக்களின் அனைத்து தேவைகளை நிறைவேற்றக் கூடிய நல்லவர்களை தேர்ந்தெடுத்து, டெல்லிக்கு அனுப்பி வைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் நகரம் வெங்கடேசபுரம் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களிடையே உரையாற்றிய பாரிவேந்தர், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கிய 17 கோடி ரூபாயை, மக்களின் தேவைகளுக்காக முழுமையாக செலவு செய்திருப்பதாக தெரிவித்தார். தன்னை மீண்டும் வெற்றிபெறச் செய்தால், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு உயர் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் என பாரிவேந்தர் உறுதி அளித்தார்.

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதி மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி யாக செய்த மக்கள் நற்பணிகள் குறித்த புத்தகத்தை வழங்கி, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

    இதனைத்தொடர்ந்து, துறைமங்கலம் பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது, பெரம்பலூரில் ரயில்வே திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். ஆயிரத்து 200 ஏழை மாணவர்களை இலவசமாக படிக்க வைத்து, பட்டதாரிகளாக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். மோடி நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து கொண்டிருக்கிறார் என தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், ஆனால், தமிழகத்தில் முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என விமர்சித்தார். அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதால்தான், அரசு அலுவலர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டினார். போதைப் பொருளால் தள்ளாடி கொண்டிருக்கும் தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், இந்தியாவை காக்க போகிறாரா? என கேள்வி எழுப்பிய பாரிவேந்தர், ஸ்டாலின் இந்தியாவை உடைக்கத்தான் உள்ளார் என சாடினார். தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பாதி பேருக்கு வரவில்லை என குற்றஞ்சாட்டிய பாரிவேந்தர், பொதுமக்கள் சிந்தித்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    • தமிழ்நாட்டி பெற்ற ஊழல் பணத்தை எல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்தார்கள். பேங்க் திறந்து இருக்கிறார்கள். இதுதான் இன்று தமிழ்நாட்டின் நிலைமை.
    • திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்து வீட்டு வரி, பால் விலை, மின்சார கட்டணம், பத்திர பதிவு ஆகிய அனைத்தையும் உயர்த்தி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தர் பேருந்து நிலையம், அரணாரை, சங்கு பேட்டை, துறைமங்கலம், பழைய பேருந்து நிலையம், ராஜா திரையரங்கம், வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    குறிப்பாக இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். அதேபோல் கழிவறைகள், சுற்றுசுவர் அமைத்து கொடுத்திருக்கேன். கடந்த முறை மத்திய அரசிடம் இருந்து என்ன நிதி பெறுகிறோம் என்றும் அதை எப்படி செலவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். சிறுகனூரில் மேம்பாலம், தரைப்பாலம், ரேஷன் கடை போன்றவற்றை அமைத்து கொடுத்திருக்கிறேன்.

    இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம். ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்தும், எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை அளித்துள்ளோம். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகாளாக ஆகியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 108 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மோடி தலைமையிலான 70 மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழங்கில் உள்ளார்கள் எப்படி தப்பிப்பார் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்து வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு 10 ஆண்டுகள் முதலமைச்சாராக இருந்தார். குஜராத்தில் நல்ல ஆட்சி கொடுத்திருக்கிறார். இந்த 23 வருடங்களில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் 1500 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் வீதம் மருத்துவ காப்பீடு வசதி செய்து தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். மருத்துவ உதவி என்றால் சாதாரண மருத்துவம் அல்ல உயர்தர சிகிச்சை செய்து தருகிறேன்.

    வருகிற வெள்ளிகிழமை யாருக்கு வாக்களிப்பது என்று குழப்பத்தில் இருப்பீர்கள். 50 ஆண்டுகலமாக தமிழ்நாட்டை ஆளவிட்டீர்கள், உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டுக் கொண்டே இருந்தீர்கள். அவர்களும் வாழ்ந்தார்கள் உயர்ந்தார்கள். குடும்பம் வாழ்ந்தது சொத்து சேர்த்தார்கள். தமிழ்நாட்டி பெற்ற ஊழல் பணத்தை எல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்தார்கள். பேங்க் திறந்து இருக்கிறார்கள். இதுதான் இன்று தமிழ்நாட்டின் நிலைமை.

    இங்கு உள்ள ஏழைகள், விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து இன்றைக்கு வரி கட்டுகிறார்கள். டாடா, பிர்லா மட்டும் வரி கட்டவில்லை. ஏழைகளான மக்களும் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம். பாவப்பட்ட மக்கள் அளிக்கும் இந்த வரி பணத்தை திராவிட முன்னேற்றகழக அரசும், முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்களும் ஊழல் செய்து கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். 50 ஆண்டுகள் இந்த திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்து வீட்டு வரி, பால் விலை, மின்சார கட்டணம், பத்திர பதிவு ஆகிய அனைத்தையும் உயர்த்தி உள்ளனர்.

    ஆகவே மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை ஆகவே தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

    • இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
    • தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

    இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள அரணாரை பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன். இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.

    குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. பெண்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள். அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 42 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.

    இதேபோல் நியாயவிலை கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.

    தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்திற்கு சென்ற 38 எம்.பிக்களின் 75% பேர் மத்திய அரசு கொடுத்த 17 கோடியை முழுமையாக செலவு செய்யவில்லை. அப்படியென்றால் அவர்களுக்கும் மக்களின் மீது அக்கறை இல்லை என்ற அர்த்தம். எம்.பி.க்கள் செலவு செய்யாத தொகை மீண்டும் மத்திய அரசுக்கே சென்று விடும். இதுதான் திமுக எம்.பி.க்களின் நிலைமை.

    நான் மட்டும் தான் மத்திய அரசு கொடுத்த ஒட்டுமொத்த நிதியையும் செலவு செய்துள்ளேன்.

    பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். அவர்களுக்கு வேலையும் வாங்கி கொடுத்துள்ளேன். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.

    ஒருகாலத்தில் சென்னை - திருச்சி செல்வதற்கு 5 மணிநேரம் ஆகும். இப்போது மூணரை மணிநேரத்தில் செல்வதற்கு சிறப்பான சாலைகள் போடப்பட்டதற்கு மோடி அரசு தான் காரணம். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர் மோடி.

    கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.

    மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.

    இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆகவே ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.

    மற்றவர்கள் சம்பாதிக்க வந்தவர்கள், ஊழல்வாதிகள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள். மக்களிடம் கொள்ளையடித்த அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது.

    என்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள். மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்களின் குடும்பம், அவர்கள் கொள்ளையடித்தது போதாது என்று அவர்களின் மகனை வேட்பளராக நிறுத்தியுள்ளார்கள். ஆகவே மக்கள் ஊழல் செய்யும் திமுகவை ஆதரிக்க கூடாது.

    யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு வாக்களியுங்கள் . ஆகவே தாமரையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

    • இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
    • இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள சிறுவயலூர், குரூர், செட்டிகுளம் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

     இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள சிறுவயலூர், குரூர், செட்டிகுளம் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், உங்கள் தொகுதிகளுக்கு என்னென்ன செய்தேன் என இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் பணிக்கு மதிப்பெண்கள் கொடுத்தால் எனக்கு நீங்கள் 100 மதிப்பெண்கள் கொடுப்பேர்கள். அந்த அளவிற்கு இந்த பகுதியில் நான் வேலை செய்துள்ளேன்.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.

    பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.

    செட்டிகுளம் பகுதியில் விளையும் சின்ன வெங்காயம் புகழ்பெற்றது. அத்தகைய செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு விரைவில் நான் பெற்று தருவேன்.

    கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.

    தேசபக்தி கொண்டவர். அவர் ஒரு மகான், புண்ணியவான், சந்நியாசி. இரவு பகல் பாராமல் மோடி நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியார் மோடி.

    மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.

    இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆகவே ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.

    என்னை எதிர்த்து போட்டியிடுவர் எவ்வளவு பெரிய மலைக்கோட்டை மன்னனின் மகனாக இருந்தாலும் சரி, அவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள், நமது எதிரி நாடான சீனாவில் உள்ள நிறுவனங்களுடன் வியாபாரம் செய்பவர்கள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்களின் குடும்பம், அவர்கள் கொள்ளையடித்தது போதாது என்று அவர்களின் மகனை வேட்பளராக நிறுத்தியுள்ளார்கள்.

    மற்றவர்கள் சம்பாதிக்க வந்தவர்கள், ஊழல்வாதிகள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள். மக்களிடம் கொள்ளையடித்த அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் சீன நாட்டு நிறுவனங்களிடம் வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் துரோகிகள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது.

    மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பர்களுக்கு தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்துக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று பாரிவேந்தர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.
    • பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர், அடைக்கம்பட்டியில் வாக்கு சேகரித்தார்.

    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பெரம்பலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர் கிராமத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தீர்கள். நான் பாராளுமன்றத்தில் பேசியது மற்றும் பிரதமரை சந்தித்தது தொடர்பாக ஒரு புத்தகம் உங்களுக்கு வழங்கியுள்ளேன். மத்திய அரசு எவ்வளவு பணம் கொடுத்தது, எதற்காக கொடுத்தது என்பதையும் இதில் விளக்கியுள்ளேன்.

    இதுபோன்ற புத்தகம் போடுவதற்கு துணிச்சல் வேண்டும். நான் ஏழைகளுக்காக உதவ வந்த எம்.பி. எனக்கு வழங்கப்பட்ட 17 கோடி ரூபாய் பணத்தில் 42 வகுப்பறைகள், நியாயவிலைக் கடைகள், சமூக நலக் கூடங்கள் மற்றும் கழிவறைகள் கட்டிக்கொடுத்துள்ளேன்.

    கடந்த முறை உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி 118 கோடி ரூபாய் செலவில் 1,200 ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளேன். இது இம்முறையும் தொடரும்.

    இந்த முறை 1,500 ஏழைக் குடும்பங்களை தேர்ந்தெடுத்து உயர் மருத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன்.

    வரும் தேர்தலில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடந்து வருகிறது. ரெயில் பாதை அமைக்கும் முயற்சியில் பாதியளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் அனைத்தும் ஊழல் கட்சிகள்தான். அவர்கள் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை.

    நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்படும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அதை செய்யவில்லை. நீட் என சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு கழித்து கொடுக்கின்றனர் என தெரிவித்தார்.

    இதேபோல், அடைக்கம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாரிவேந்தர் பேசியதாவது:

    ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு வீட்டு வரி, மின்சார வரி, நில வரி, பால் விலை ஆகியவற்றை உயர்த்தி விட்டது. இதனால் விலைவாசியும் உயர்ந்து விட்டது. எனவே நல்லவர்கள் யார் என தேர்வு செய்து வாக்களிக்க வேண்டுகிறேன்.

    தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள் என உலகமெல்லாம் பேசுகிறது. தி.மு.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் காலம் முழுவதும் கஷ்டத்தில் இருக்க வேண்டியதுதான். 1,000 ரூபாய் உரிமைத்தொகையை பாதி பெண்களுக்கு வழங்கவில்லை.

    நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என்பதால் தி.மு.க.வால் ஒன்றும் செய்யமுடியாது.

    இங்கு நான்கு வழிச்சாலை அமைக்கச் சொல்லி கேட்டு வருகிறீர்கள். ஆட்சிக்கு வந்ததும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

    நேரு மகனுக்கு வாக்களித்து மற்றொரு ராமஜெயத்தை உருவாக்கி விடாதீர்கள். நாடெல்லாம் எனது, மக்கள் எல்லாம் எனது அடிமைகள் என சென்னையில் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். சூரியன் எப்படி பகலில் சுட்டெரிக்கிறதோ, ரத்தத்தை உறிஞ்சுகிறதோ, அதுபோல் சூரியனுக்கு வாக்களித்தால் உங்கள் ரத்தம் உறிஞ்சப்படும்.

    எனவே கல்விக்கு தெய்வமான சரஸ்வதி தேவி அமர்ந்துள்ள தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • உங்களை தேடி வாக்குகளை கோரி வந்துள்ளேன்.
    • 1200 மாணவர்களை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆக்கியுள்ளதாக தெரிவித்தார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது அய்யர்மலை என்ற இடத்தில், டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க, அ.ம.மு.க, பா.ம.க, த.மா.கா, ஓ.பி.எஸ் அணி, தமிழர் தேசம் கட்சி, மக்கள் ராஜ்ஜியம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதில் பேசிய டாக்டர் பாரிவேந்தர், உங்களை தேடி வாக்குகளை கோரி வந்துள்ளேன் - தவறாமல் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார். முந்தைய தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி ஆயிரத்து 200 மாணவர்களை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆக்கியுள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் எம்பியாக தேர்வான பின்னர் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என்று டாக்டர் பாரிவேந்தர் பேசினார். வரும் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்காமல், நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார்.

    • தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது, குறும்பர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று பாரிவேந்தர் உறுதியளித்தார்.
    • அனைவரும் டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் எம்.பியாக வெற்றிபெறச் செய்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில், தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு, பொதுமக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. மேலும், டாக்டர் பாரிவேந்தருக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திருச்சி SRM ஹோட்டல் வளாகத்தில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மத்திய மண்டல தலைவர் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட தலைவர் நித்யா நடராஜன், செயலாளர் உமாபதி மற்றும் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் தொகுதியில் செய்த நற்பணிகள் அடங்கிய புத்தகத்தை, டாக்டர் பாரிவேந்தர், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    குறும்பர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து S.T. பிரிவுக்கு மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்துள்ளார்.

    இந்திய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் தொகுதியில் IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு திரட்டி வருகிறார். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் குல தெய்வமாக விளங்கும் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலுக்கு வருகை தந்தபோது, அவருக்கு, தமிழ்நாடு குறும்பர் முன்னேற்ற சங்கத்தின் செயல் தலைவர் உதகை செங்குட்டுவன் மற்றும் கோயில் நிர்வாக தலைவர் தர்மராஜ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து, கோயிலில் மகாலெட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகாலெட்சுமி அம்மனை டாக்டர் பாரிவேந்தர் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தார். டாக்டர் பாரிவேந்தருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் விருப்பத்தின் பேரில் அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். மிகவும் தொன்மையான இக்கோயிலில், பல பேருக்கு இலவசமாக திருமணம், அன்னதானம் வழங்கப்பட்டு வருவதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். குறும்பர் சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான MBC யிலிருந்து ST பழங்குடியினர் வகுப்புக்கு மாற்றுவதற்கான கோப்புகள், மத்திய அரசிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது, குறும்பர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று பாரிவேந்தர் உறுதியளித்தார்.

    டாக்டர் பாரிவேந்தரின் இலவச உயர் கல்வி திட்டத்தால் தன்னை போன்ற ஏழை எளிய மக்களின் கனவு நனவாகியதாக தெரிவித்துள்ள SRM பல்கலைக்கழகத்தில் பயிலும் துறையூரை சேர்ந்த மாணவி அகல்யா, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் எம்.பியாக வெற்றிபெறச் செய்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    2019 தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் பாரிவேந்தர், மகாலெட்சுமி திருக்கோயிலில் அஷ்டலட்சுமி பிரதிஷ்டை செய்தபோது நன்கொடை வழங்கியதாகவும், தங்கள் வாக்குகள் அனைத்தும் டாக்டர் பாரிவேந்தருக்குதான் என்றும் கலைச்செல்வி என்பவர் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து பேசிய ராகவி என்பவர், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் சமுதாய மக்கள் டாக்டர் பாரிவேந்தரின் வெற்றிக்கு பாடுபடுவதாகவும், தங்களுடைய ஆதரவு அவருக்குதான் எனவும் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், I J K முதன்மை அமைப்புச் செயலாளர் S.S.வெங்கடேசன், முதன்மைச் செயலாளர் சத்தியநாதன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுட்டெரிக்கும் சூரியனைப்போல், சூரியக் கட்சியும் அதிக அளவில் ஊழல் செய்கிறது என டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்தார்.
    • தொகுதி மக்கள் எதிர்பார்க்கிற அத்தனை தேவைகளும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    இந்திய ஜனநாயகக் கூட்டணியில், IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வண்ண பேப்பர்கள் மற்றும் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், 2019 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி, ரெங்கநாதபுரத்தில் இருந்து 2 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தில் பட்டதாரிகளாகினர் என தெரிவித்தார். தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற உடன், இப்பகுதிக்கு ரேசன் கடை கட்டித் தரப்படும் என்றும், நீர்த்தேக்க தொட்டி, அமைக்கப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். விவசாய களம் மற்றும் மயானபாதை சீர்படுத்தி தரப்படும் என்றும், கால்நடை மருந்தகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைத்து தரப்படும் என்றும் பாரிவேந்தர் உறுதி அளித்தார். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, இளைஞர்களை சீரழிப்பதாகவும் குற்றஞ்சாட்டிய பாரிவேந்தர், தமிழகத்தில் ஊழல், லஞ்சம் பெருகி விட்டதாக விமர்சித்தார். ஊழல் கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு ஊழல் மட்டும் தெரியும், அது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது எனச் சாடிய டாக்டர் பாரிவேந்தர், நல்லவர்களை சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து, வேங்கடத்தானூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வன்ண பேப்பர்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடையே பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு செய்த நற்பணிகள் குறித்து புத்தகமாக வழங்கியிருப்பதாக தெரிவித்தார். வேங்கடத்தானூருக்கு MP நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டி கொடுத்திருப்பதாக தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், மக்கள் தேவைகளை நிறைவேற்றியதில் மன நிறைவாக இருப்பதாக கூறினார். பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக ஊழல், லஞ்சம் இல்லாத சிறப்பான ஆட்சியை நடத்தினார் என்றும், தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் ஊழலில் பழக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார். ஒட்டுக்கு பணம் கொடுப்பதற்காக ஊழல் செய்யும் திராவிட திருவாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சுட்டெரிக்கும் சூரியனைப்போல், சூரியக் கட்சியும் அதிக அளவில் ஊழல் செய்கிறது என டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்தார்.

    துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்காட்டுப் பட்டி கிராமத்தில் வாக்கு சேகரித்த டாக்டர் பாரிவேந்தர், தனது சொந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து 118 கோடி ரூபாய் செலவு செய்து, ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக ஆக்கியதாகவும், இந்தியாவில் எந்த MP-யம் இதுபோல் செய்ததில்லை எனவும் குறிப்பிட்டார். மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா பெருமையடைவதாகப் பேசிய டாக்டர் பாரிவேந்தர், திமுக என்றாலே லஞ்சம், ஊழல்தான் என சாடினார். நல்லவர்களை தேர்ந்தெடுக்க தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.


    இதனைத்தொடர்ந்து, கீரம்பூர் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், பெரம்பலூர் தொகுதியில் ரயில்வே திட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரவித்தார். பிரதமர் மோடியை உலக நாடுகள் Boss என அழைப்பதாக பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார். கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றிவிட்டு, தற்போது மீண்டும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருப்பதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புத்தனாம்பட்டி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மாலை அணிவித்து. வாணவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், கடந்த முறை போன்று, இந்தத் தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஊழல் கட்சியிலிருந்து வரும் நபரை புறக்கணித்துவிட்டு, மக்கள் சேவையாற்றும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். தொகுதி மக்கள் எதிர்பார்க்கிற அத்தனை தேவைகளும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    ×