search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடி"

    • நகர்புறங்களில் 21ஆயிரத்து 595 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 37ஆயிரத்து 239 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
    • வேட்புமனு தாக்கல் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெங்களூரு வடக்கு தொகுதியில் அதிகபட்சமாக 31 லட்சத்து 74ஆயிரத்து 98 வாக்காளர்களும், உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 15லட்சத்து 72ஆயிரத்து 958 வாக்காளர்களும் உள்ளனர்.

    தேர்தலுக்காக 58ஆயிரத்து 834 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நகர்புறங்களில் 21ஆயிரத்து 595 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 37ஆயிரத்து 239 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் 3.51லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

    கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக உடுப்பி-சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடம், சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், பெங்களூரு கிராமப்புறம், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மையம், சிக்கபல்லாபூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 8-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூர், பிதார், கொப்பளா, பெல்லாரி, பாருங்கள், தார்வாட், உத்தரகன்னடம், தாவனகரே, சிமோகா ஆகிய தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக மே 7-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 20-ந் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற ஏப்ரல் 22-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது 3 எம்.பி. தொகுதிகளிலும் 59 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இந்த 3 தொகுதிகளிலும் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    இவர்கள் வாக்கு அளிப்பதற்காக 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை எந்தெந்த பள்ளிகளில் மற்றும் சமூக நலக்கூடங்களில் அமைப்பது என்பது பற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    அதுபோல இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 5 தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுவார்கள். அவர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் அமைக்கப்படும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகளையும் சென்னை மாநகர போலீசார் 3 பிரிவுகளாக பிரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். சுமூகமாக வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகள், பதட்டமான வாக்குச் சாவடிகள், மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று 3 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் போலீசார் நடத்திய ஆய்வில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டன. 157 வாக்குச் சாவடிகள் மிக மிக பதட்டமானவை என்று கண்டு பிடிக்கப்பட்டன. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது சென்னை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 550 ஆக உயர்ந்தது. என்றாலும் மிக பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தது.

    இது தொடர்பாக தற்போது சென்னை மாநகர போலீசார் தீவிர கணக்கெடுப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் எந்தெந்த வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பதட்டமான, மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என்பது தெரியவரும்.

    அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அடுக்கு பாதுகாப்பு செய்ய சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது 3 எம்.பி. தொகுதிகளிலும் 59 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. சட்டசபை தேர்தலின் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சற்று அதிகரித்து இருந்தது.

    இந்த தடவை வாக்கு பதிவை 70 சதவீதமாக அதிகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    • முகவரி மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பம் அளித்தனர்.
    • வாக்குச்சாவடி மையங்களை பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் ஆய்வு செய்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் தாலுகாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருந்தவர்கள் பெயர் சேர்த்தனர்.

    மேலும், இறந்தவ ர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. தொடாந்து, முகவரி மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பம் அளித்தனர்.

    அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றது.

    பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் வாக்குச்சாவடி நியமன அலுவலர் கார்த்திகேயன், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கலியமூர்த்தி, கவிதா, ரவிச்சந்திரன் ராவ், பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வாக்குச்சாவடி மையங்களை பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தேர்தல் துணை தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • சனி, ஞாயிறு நாட்களில் அருகில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
    • மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை அருகே உள்ள உக்கடை கிராமத்தில் பாபநாசம் விவேகானந்தா கல்வி சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம், திருத்தம், நீக்குதல் ஆகியவை சனி, ஞாயிறு நாட்களில் அருகில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று திருத்தம் செய்து கொள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் விஜயலெட்சுமி. கயல்விழி , மேரி உட்பட ஏராளமான மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டு கேட்க குறைந்தபட்சம் 21 பேர் முதல் அதிகபட்சம் 31 பேர் வரை தி.மு.க. நியமித்து வைத்துள்ளது.
    • வாக்குச்சாவடி முகவர்களை மண்டல வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அறிவுரை வழங்கி வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் அமர்ந்து பணியாற்ற தி.மு.க.வில் பூத் ஏஜெண்டுகள் (முகவர்கள்) இப்போதே தயாராக உள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தகுதியான நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து (பி.எல்.ஏ.2) வைத்துள்ளனர்.

    அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்க குறைந்தபட்சம் 21 பேர் முதல் அதிகபட்சம் 31 பேர் வரை தி.மு.க. நியமித்து வைத்துள்ளது.

    இந்த வாக்குச்சாவடி முகவர்களை மண்டல வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அறிவுரை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் ஏற்கனவே திருச்சி, ராமநாதபுரம், காங்கேயம், திருவண்ணாமலையில் கூட்டம் நடந்த நிலையில் இப்போது திரு வள்ளூரில் நவம்பர் 5-ந்தேதி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11 தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் 11,569 முகவர்களுடன் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க குன்றத்தூரில் நேற்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் காஞ்சி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்களில் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் திருவள்ளூரில் நடைபெறும் பயிற்சி பாசறை கூட்டத்திற்கு வாகனங்கள் மூலம் திருவள்ளூருக்கு அழைத்து சென்று பங்கேற்க செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • வாக்குச்சாவடி எண். 5 ஆனது பெயர் மாற்றத்துடன் அரசு நடுநிலைப்பள்ளி, கீரிப்பாறையில் செயல்படும்.
    • வாக்குச்சாவடி எண். 163 மற்றும் 164 ஆகியவை அம்மா மினி மருத்துவமனை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்ட ரும், மாவட்ட தேர்தல் அலுவலமான ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 6 சட்டமன்ற தொகுதி களுக்கான வாக்குச்சாவடி களின் பகுப்பாய்வு பணியின் போது 229- கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சா வடி எண் 4 தற்போது அரசு மேல்நிலைப்பள்ளி (ஆதி திராவிடர் நலத்துறை), வாழையத்துவயல், வாக்குச்சாவடி எண், 184, தற்போது பள்ளம்துறை பஞ்சாயத்து சேவை மையம், அன்னை நகர், வாக்குச்சாவடி எண் 190, தற்போது தெங்கம்புதூர் அரசு தொடக்கப்பள்ளி, வடக்கு கட்டிடம், மேற்கு பகுதியிலும் செயல்படும். மேலும், வாக்குச்சாவடி எண். 5 ஆனது பெயர் மாற்றத்துடன் அரசு நடுநிலைப்பள்ளி, கீரிப்பாறையில் செயல்படும்.

    230-நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 78 அரசு நடுநிலைப்பள்ளி களியங்காடு பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 88.89 ஆகியவை இரட்சண்ய சேனை மேல்நிலைப்பள்ளி வெட்டூர்ணிமடத்திலும், வாக்குச்சாவடி எண். 255 அங்கன்வாடி மையம், கீழமறவன் குடியிருப்பு பகுதியிலும் செயல்படும். மேலும், வாக்குச்சாவடி எண் 18, 19, 20 மற்றும் 21 ஆகியவை பெயர் மாற்றத்துடன் காமராஜர் மண்டபம், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் மற்றும் வாக்குச்சாவடி எண். 152 மற்றும் 153 ஆகியவை பெயர் மாற்றத்துடன் பழைய மாநகராட்சி அலுவலக கட்டிடம், பால மோர் சாலை பகுதியிலும் செயல்படும்.

    231-குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண், 43, 44 இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. தாணிக்கோட்டவிளை பகுதியிலும், வாக்குச்சாவடி எண்.207 அங்கன்வாடி மையம், இலந்தன்விளை பகுதியிலும் செயல்படும்.

    232-பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 62, 63 கல்வாரி மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி, கொல்வேல் பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 94, 95, 96 மற்றும் 98 மரியா பாலிடெக்னிக் கல்லூரி, குமரன்குடி பகுதியிலும், வாக்குச்சாவடி எண், 134 அரசு நடுநி லைப்பள்ளி, கண்ணனூர், வாக்குச்சாவடி எண். 185 மற்றும் 186 சி.எஸ்.ஐ நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, ஈத்தவிளை பகுதியிலும் வாக்குச்சாவடி எண். 194 சி.எஸ்.ஐ மெட்ரிக் பள்ளி. அழகியமண்டபம் பகுதியிலும் செயல்படும்.

    233-விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 64 மற்றும் 66 அரசு தொடக் கப்பள்ளி, காங்கோடு பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 65 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி. மொட்டக்காலை பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 69 மற்றும் 77 அரசு தொடக்கப்பள்ளி, பளுகல் (இருப்பு) மத்தம்பாலையிலும் செயல்படும். மேலும், வாக்குச்சாவடி எண். 34. 35. 36 ஆகியவை அரசு பி.எப்.எம். தொடக்கப்பள்ளி தேவிகோடு (இருப்பு) புன்னாக்கரையிலும், வாக்குச்சாவடி எண்: 59 அரசு தொடக்கப்பள்ளி அண்டுகோடு (இருப்பு) உத்திரங்கோடு பகுதியிலும் செயல்படும்.

    234-கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 163 மற்றும் 164 ஆகியவை அம்மா மினி மருத்துவமனை, முள்ளங்கினாவிளையில் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொறுப்பாளா்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
    • 14 ஆயிரத்து 411 வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா்.

    காங்கயம்:

    காங்கயம் அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதையொட்டி தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தாா்.அப்போது அவா் கூறியதாவது:-

    திருப்பூா் தி.மு.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கயம் அருகே உள்ள படியூாில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறாா். கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள், வாகன நிறுத்தங்கள் தயாா் செய்யும் பணிகள், உணவு கூடம் அமைத்தல் என அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

    நாட்டின் பன்முக தன்மை சிதைக்கப்பட்டு, ஜனநாயகம் சீா்குலைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதை எதிா் கொண்டு எவ்வாறு நாம் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆலோசனை கூட்டமாக இந்த கூட்டம் இருக்கும்.

    கூட்டத்தில் 14 கழக மாவட்டங்களில் இருந்து 14 ஆயிரத்து 411 வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா். அதாவது 50 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் இதில் கலந்துகொள்கின்றனா்.

    அவா்களோடு அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், தலைமை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொள்ள உள்ளனா்.மாலை 4 மணிக்கு தி.மு.க தலைவா் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறாா். இவ்வாறு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

    • ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடந்தது
    • அகஸ்தீஸ்வரம் பேரூர் வாக்குச்சாவடி பாக முகவர்கள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு சாலையில் உள்ள சமூகநலக்கூடத்தில் நேற்று இரவு நடந்தது.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, பேரூர் கழக அவைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரு மான நம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி னர். முடிவில் மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராதா கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பிரேம்ஆனந்த், ஒன்றிய பிரதிநிதிகள் அகஸ்தியலிங்கம், நாகமணி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் உள்பட தி.மு.க. நிர்வா கிகள், அகஸ்தீஸ்வரம் பேரூர் வாக்குச்சாவடி பாக முகவர்கள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    • மாவட்ட செயலாளர் மகேஷ் பங்கேற்பு
    • ஆய்வு கூட்டத்திற்கு வராதவர்களை மாற்றி கழகத்திற்கு பாடுபடுபவர்களை போட வேண்டும்

    குளச்சல் :

    குளச்சல் நகர தி.மு.க.வாக்குச்சாவடி பாகமுகவர் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை குளச்சலில் நடந்தது. நகர செயலாளர் நாகூர் கான் தலைமை வகித்தார். குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    குளச்சலில் முதலில் பாக முகவர் ஆய்வை தொடங்கி இருக்கிறோம். ஆய்வு கூட்டத்திற்கு வராதவர்களை மாற்றி கழகத்திற்கு பாடுபடுபவர்களை போட வேண்டும். இந்தியா கூட்டணியை பார்த்து ஒன்றிய அரசு பயப்படுகிறது. எதையும் செய்ய பாரதிய ஜனதா அரசு தயாராக உள்ளது. இந்தியா கூட்டணிக்கு வலு சேர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து நாட்டின் பெயரை மாற்ற துடிக்கிறார்கள். இந்தியாவை எல்லா விதத்திலேயும் வளர்ச்சியில் மாற்றி காட்டுவேன் என கூறிய பிரதமர் பெயரை மாற்றிவிட்டார். 39 எம்.பி.க்களைக் கொண்டு இந்தியாவில் 3-வது கட்சியாக தி.மு.க உள்ளது. அந்தக் கட்சிக்கு கவர்னர் பல இன்னல்களை தந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் புரிந்து கொண்டு கழக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வுக் கூட்டத்தில் குளச்சல் நகர் மன்ற துணைத் தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள், மாவட்ட மீனவரணி தலைவர் ஆன்றனிராஜ், ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் சரவணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து தொகுதிகளிலும் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
    • ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் திமுக., வடக்கு மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    பல்லடம்:

    பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக., வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய திமுக., அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் திமுக., வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் குமார், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொருளாளர் அம்மாபாளையம் குமார் வரவேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் திமுக., வடக்கு மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், திமுக., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்ய வேண்டும்,கோவை பாராளுமன்ற தொகுதியில் பல்லடம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திமுக .,கூட்டணி வேட்பாளருக்கு அதிக வாக்குகள் பெற பாடுபட வேண்டும்.

    அனைத்து தொகுதிகளிலும் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு ஒன்றிய திமுக., நிர்வாகிகள் சாமிநாதன், துரை முருகன், ராஜேஸ்வரன், ரங்கசாமி, பிரகாஷ், சுரேஷ், பானுமதி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க.மாவட்ட செயலாளர் மகேஷ் அறிக்கை
    • 27-ந்தேதி சுசீந்திரம் பேரூர், தென்தாமரைகுளம் 28-ந்தேதி கணபதிபுரம் வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி கிழக்கு மாவட்டத்தில் 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குளச்சல் நகராட்சி மற்றும் 28 பேரூராட்சி வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினர்களுக்கான ஆய்வு கூட்டம் வருகிற 10-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது.

    10-ந்தேதி மாலை 5 மணிக்கு குளச்சல் நகரத்திற்கான கூட்டம் குளச்சல் எஸ்.பி.எம். மஹாலில் நடைபெறுகிறது.

    11-ந்தேதி மாலை 5 மணிக்கு புத்தளம் பேரூர் உட்பட்ட வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினர் கூட்டம் புத்தளம் சமுதாய நலக்கூடத்திலும், 12-ந்தேதி பூதப்பாண்டி பேரூருக்கான கூட்டம் மாலை 4 மணிக்கு திட்டவிளை சாலோம் திருமண மண்டபத்திலும், மாலை 6 மணிக்கு அழகியபாண்டியபுரம் பேரூருக்கான கூட்டம் அழகியபாண்டியபுரம் வி.ஆர்.மினி மஹாலிலும் நடக்கிறது.

    13-ந்தேதி மாலை 4 மணிக்கு அகஸ்தீஸ்வரம் பேரூர் கூட்டம் அகஸ்தீஸ்வரம் சமுதாய கூடத்திலும், மாலை 6 மணிக்கு கொட்டாரம் பேரூருக்கான கூட்டம் கொட்டாரம் என்.என்.சி.ஆர்.திருமண மண்டபத்திலும் நடக்கிறது.

    14-ந்தேதி மாலை 4 மணிக்கு ரீத்தாபுரம் பேரூர் கூட்டம் சாஜன் மஹாலிலும், மாலை 6 மணிக்கு கல்லுக்கூட்டம் பேரூருக்கான கூட்டம் ஜேக்கப்பத் பள்ளி வளாகத்திலும் நடக்கிறது.

    இதேபோல் 15-ந்தேதி நெய்யூர், திங்கள்நகர் பேரூர் முகவர் குழு உறுப்பினர் கூட்டமும், 19-ந்தேதி வில்லுக்குறி, வெள்ளிமலை பேரூர் முகவருக்கான கூட்டமும், 20-ந்தேதி மணவாளக்குறிச்சி மண்டைக்காடு வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டமும், 21-ந்தேதி கப்பியறை, இரணியல் வாக்குச்சாவடி முகவர் குழு கூட்டமும் நடக்கிறது.

    22-ந்தேதி வாழ்வச்சகோஷ்டம், முளகுமூடு பேரூர், 23-ந்தேதி அஞ்சுகிராமம் அழகப்பபுரம், 24-ந்தேதி தேரூர், மருங்கூர் மயிலாடி 25-ந்தேதி தாழக்குடி, ஆரல்வாய்மொழி வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டமும் நடக்கிறது.

    26-ந்தேதி கன்னியாகுமரி பேரூர், 27-ந்தேதி சுசீந்திரம் பேரூர், தென்தாமரைகுளம் 28-ந்தேதி கணபதிபுரம் வாக்குச்சாவடி முகவர் குழு உறுப்பினருக்கான கூட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
    • மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 334 வாக்குச் சாவடிகள், சிவகங்கை தொகுதியில் 351 வாக்குச் சாவடிகள், மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதி யில் 323 வாக்குச்சாவடிகள் ஆக மொத்தம் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை மற்றும் தேவகோட்டை, சிவகங்கை மாவட்ட அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வட்டாட்சியர்கள் வாக்குச்சாவடி சீரமைப்பு தொடர்பாக பரிந்து ரைகளை தெரிவித்தனர்.

    மேலும் வாக்குச்சாவடி திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆட்சே பனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்குப்பதிவு அலுவலருக்கு எழுத்துப் பூர்வமாக மனு அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மறுசீரமைப்பு செய்யும் முன் வாக்குச்சாவடி மையங்களை தணிக்கை செய்து வருகிற 29-ந் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சி யர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச் சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), சோ.பால்துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×