search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுயானை"

    • மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
    • அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    மேட்டுப்பாளையம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள், மான், சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஒற்றை காட்டு யானை அதிகாலை நேரத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மாங்கரையில் சிறிது நேரம் அட்டகாசம் செய்த காட்டு யானை மீண்டும் வனத்துக்குள் சென்று மறைந்து விட்டது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள தடாகம், வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. எனவே இங்கு காட்டு விலங்குகள் அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி, ஊருக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் ஒரு காட்டு யானை அதிகாலை நேரத்தில் வனத்தில் இருந்து வெளியே வந்தது. அப்போது அது ஆக்ரோஷமாக காட்சியளித்தது.மாங்கரை குடியிருப்பு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காட்டு யானை, அங்கு உள்ள சோதனைச்சாவடியை உடைத்து சேதப்படுத்தியது.

    அதன்பிறகு டாஸ்மாக் கடை சுவரையும் தாக்கி இடிக்க முயன்றது. மாங்கரையில் சிறிது நேரம் அட்டகாசம் செய்த காட்டு யானை மீண்டும் வனத்துக்குள் சென்று மறைந்து விட்டது.

    கோவை தடாகம் பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் ஊருககுள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஒற்றை காட்டு யானை அதிகாலை நேரத்தில் ஊருக்குள் வலம் வந்து அட்டகாசம் செய்து விட்டு திரும்பி சென்று உள்ளது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே கோவை தடாகம் மாங்கரை பகுதியில் தனியாக வலம் வரும் ஒற்றை காட்டு யானையை வனத்துறை பிடித்து நடுக்காட்டில் கொண்டு சென்று விட வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கரியசோலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.
    • ரேஷன் கடை வளாகத்தின் இரும்பு நுழைவு வாயிலை உடைத்தது.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே நெலாக்கோட்டை, விலங்கூர், கூவச்சோலை, விலங்கூர், 9-வது மைல், மேபீல்டு, கரியசோலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நெலாக்கோட்டை பஜாருக்குள் ஒற்றை யானை புகுந்தது. தொடர்ந்து வீடுகளையும், கடைகளையும் முற்றுகையிட்டது.

    இதையடுத்து நெலாக்கோட்டையில் இருந்து கரியசோலை செல்லும் சாலையில் உள்ள ரேஷன் கடை வளாகத்தின் இரும்பு நுழைவு வாயிலை உடைத்தது. பின்னர் உள்ளே சென்று ரேஷன் கடையை உடைக்க முயன்றது.

    அதற்குள் தகவல் அறிந்து வந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் மற்றும் வனத்துறையினர் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் மீண்டும் வராமல் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சேதம் அடைந்த நுழைவு வாயிலை பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரகுமார் மற்றும் வருவாய்துறையினர் பார்வையிட்டனர்.

    • தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர்
    • வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்

    ஊட்டி

    நீலகிரி பந்தலூர் தாலுகா அத்திகுன்னா அருகே கே.கே.நகர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த மரங்களை காட்டுயானைகள் அவ்வப்போது புகுந்து நாசம் செய்து வருகின்றன. மேலும் பொதுமக்களின் குடியிருப்புகளையும் உடைத்து அட்டகாசம் செய்கின்றன. இது தவிர சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், மாணவ-மாணவிகளையும் துரத்தி வருகின்றன. இந்தநிலையில் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. முன்னாள் கவுன்சிலர் மூர்த்தியின் தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தியது. இதை அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.

    • வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக அமராவதி அணையை நோக்கி வருவது வழக்கம்.
    • வனவிலங்குகளிடம் அத்துமீறும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக அமராவதி அணையை நோக்கி வருவது வழக்கம். இந்த நிலையில் உடுமலை-மூணாறு சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் 2 பேர் சாலையை கடக்க முயன்ற யானையை செல்போனில் புகைப்படம்-வீடியோ எடுக்க முயன்றனர்.

    அப்போது ஆக்ரோஷமடைந்த யானை அவர்களை விரட்டியது. இதில் அதிர்ஷ்டவசமாக 2 பேரும் யானையிடம் இருந்து உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    உடுமலை-மூணாறு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக் கடக்கும் வரையில் பொறுமை காத்து செல்ல வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்துவது அவை மிரட்சி அடையும் வகையில் கற்களை வீசி தாக்குவது, ஒலி எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. வனவிலங்குகளிடம் அத்துமீறும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீரோட்டம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் வாழைகள் பயிரிட்டு வருகின்றனர்.
    • வாழைத்தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருந்த கொட்டகையை காட்டுயானை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது

    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூரா–ட்சி–க்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி அடந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதாலும், பவானிசாகர் நீர் தேக்க பகுதியாக உள்ளதாலும் அதிகளவில் யானைகள் நடமாட்டம் உள்ளது.

    மேலும் இப்பகுதியில் நீரோட்டம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் வாழைகள் பயிரிட்டு வருகின்றனர். இதனிடையே லிங்காபுரம் வனத்துறை சோதனை சாவடிக்கு அருகே உள்ள செந்தில், புஷ்பா ஆகியோருக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்குள் அதிகாலை நேரத்தில் ஒற்றை காட்டுயானை நுழைந்தது.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் இருவரையும் காட்டு யானை தாக்க முயன்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் 2 பேரும் தப்பித்து ஓட முயற்சித்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இருப்பினும் எழுந்து சென்று ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையே யானை அங்கு வாழைத்தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருந்த கொட்டகையை காட்டுயானை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அந்தியூர் பர்கூர் மலையில் உணவு தேடி வந்த காட்டுயானை 2வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.
    • இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி மாதம்மாள் (65). இவர்களது மகன் முனியப்பன். மாதம்மாள் தனது மகளுடன் அருகாமையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் அதிகாலை இவர்களின் வசிப்பி டத்துக்கு காட்டுயானை உணவு தேடி வந்துள்ளது. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு இவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது தெரியவந்தது. உணவு தேடி வந்த காட்டுயானை இவர்களின் வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.

    இதுகுறித்த தகவலின்பேரில் பர்கூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உணவு தேடி காட்டுயானை குடியிருப்புக்கு வந்து செல்வது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர். இதேபோல் அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×