search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Friday"

    • இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது.
    • இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கேரளாவில் 26-ந்தேதியும் நடக்கிறது. இந்த 2 நாட்களும் வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க சிரமத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது.

    இது தொடர்பாக இந்திய முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.எம்.ஏ.சலாம் கூறியதாவது:-

    கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆகும். இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் முஸ்லிம்கள், நமாஸ் (பிரார்த்தனை) செய்ய மசூதிகளுக்கு செல்வார்கள். அந்த நாளில் வாக்குப்பதிவு வைத்திருப்பது இஸ்லாமிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    இந்த நாள் இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றும் வாக்காளர்கள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இடையூறாக இருக்கும். இதுகுறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனை மறுபரிசீலனை செய்ய அவர்கள் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீர்காழி முழுவதும் பகல் நேரங்களில் சுற்றித்திரிந்து பூட்டி இருக்கும் இடங்களை நோட்டமிட்டனர்.
    • 4 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சேந்தங்குடி, பாதரக்குடி, சம்பா கட்டளை, சட்டநாதபுரம் உள் ளிட்ட பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை- வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது சீர்காழி அருகே உள்ள தாண் டவன்குளத்தைச் சேர்ந்த மருது என்ற விஜயபாஸ்கர் (வயது 28), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள தெம்மூர் கிராமத்தைச்சேர்ந்த மணிமாறன் ( 32) ஆகிய இருவரும் சேர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.திருட்டில் ஈடுபட்ட விஜயபாஸ்கரன், மணிமாறன் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்று தற்பொழுது இருவரும் வெளியே வந்து சீர்காழி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி சீர்காழி முழுவதும் பகல் நேரங்களில் சுற்றி திரிந்து பூட்டி இருக்கும் இடங்களை நோட்டமிட்டு இரவு நேரங்களில் நகை வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து விஜய பாஸ்கர், மணிமாறன் ஆகிய இருவரையும் எஸ். பி. தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா, எஸ். எஸ். ஐ .க்கள் ரமேஷ், நரசிம்ம பாரதி அசோக் குமார், செந்தில் ஆகியோர் கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சீர்காழி போலீசார் அவர்களிடமிருந்து 4 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ஒருஇருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து விஜயபாஸ்கள், மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிசேக ஆராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம்,பிரசாதம் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையொட்டி பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவிலில்,சிறப்பு பூஜை மற்றும், அபிசேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்லடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும், அபிசேக ஆராதனை நடைபெற்றது .இதில்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம்,பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பெரியகாண்டியம்மன் கோவிலில், திருக்கல்யாணம், யாகபூஜை, உள்ளிட்டவை நடைபெற்றது .தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல பல்லடம் அங்காளம்மன் கோவில், பொங்காளியம்மன் கோவில், பனப் பாளையம் மாரியம்மன் கோவில், தெற்கு பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
    • கேழ்வரகு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில் அன்னதானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

    அனைத்து அம்மன் கோவில்களும் வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டிருந்தன. பல்லடம், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

    மஞ்சள் காப்பு அலங்காரத்தில் திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன். வனபத்ரகாளியம்மன் அலங்காரத்தில் வாலிபாளையம் ஸ்ரீமாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

    • கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
    • ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில் அன்னதானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

    அனைத்து அம்மன் கோவில்களும் வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டிருந்தன. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள முனீஸ்வரன் மற்றும் அண்ணமார் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அபிேஷகம் மற்றும் அபிேஷக பூஜையும் நடந்தது. பல்லடம், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன.

    திருப்பூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் குழந்தை வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் புற்றுக்கண் நாகம்மாள் வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    ×