என் மலர்
நீங்கள் தேடியது "Guru Bhagavan Worship"
- வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.
- தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை உள்ளது. சிலருக்கு தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. இப்படி தங்கம் பற்றி பலவாறாக யோசித்து கவலைப்படாமல் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்தாலே போதும். தங்கத்தையும் வாங்கலாம், உங்களிடம் உள்ள தங்கமும் நிலைத்து நிற்கும்.
* தங்கம் சேர, வெள்ளிக்கிழமை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமியை வழிபாடு செய்வது மிகவும் முக்கியம்.
* வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினம் காலை எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் மகாலட்சுமிக்கு விளக்கேற்ற வேண்டும்.
* மகாலட்சுமியை மனதாரப் பிரார்த்தித்து, தாமரை மலர்கள் அல்லது செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
* காலை அல்லது மாலை வேளையில் மகாலட்சுமிக்கு உரிய சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் அல்லது பாயாசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து, விளக்கேற்றி, மந்திரங்கள் சொல்லி வழிபடலாம்.

* மகாலட்சுமி பூஜையின் போது நம் மனதை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்க வேண்டும்.
* வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.
* தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும். ஆதலால், வெள்ளிக்கிழமை வழிபாட்டோடு சுக்கிர பகவானையும் குரு பகவானையும் சேர்த்து வழிபட வேண்டும்.
* மகாலட்சுமிக்கு உரிய கிரகம் சுக்கிரன். அதனால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வெட்டிவேரை திரியாகத் திரித்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
* தொடர்ந்து மூன்று வாரம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த விளக்கேற்றி வழிபட்டால் தங்கம் சேரும், செல்வ வளம் அதிகரிக்கும்.
மேலும் மஞ்சள், குங்குமம், பூக்கள் போன்ற மங்கலப் பொருட்களைப் பயன்படுத்தி வழிபாடு செய்வது நன்மை தரும். மகாலட்சுமியின் அருளைப் பெற வழிபாட்டின் போது கிராம்பு பயன்படுத்தலாம். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை செல்வ செழிப்பிற்காக தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
- கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு.
- குருவின் ஆசிர்வாதத்தை தான் குரு பலன் என்கிறோம்.
கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு. குருவின் ஆசிர்வாதத்தை தான் குரு பலன் என்கிறோம். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். அத்தகைய குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.
* குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.
* குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு வேலை கிடைக்கும்.
* குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனுகூலம் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.
* குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு வாகன யோகம் கிடைக்கும்.
* குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
* குரு பகவான் 6-ல் இருந்தால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.
* குரு பகவான் 7-ல் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
* குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.
* குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.
* குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.
* குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.
* குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.
- வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார்.
- குரு பெயர்ச்சி வரும் மே 1ம் தேதி நடக்கிறது.
ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார். குரு பகவானின் பார்வை பட்டால் செல்வ ரீதியாகவும், செல்வாக்கு ரீதியாகவும் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இதன் காரணமாகவே, குரு பெயர்ச்சி அன்று மக்கள் கோவில்களில் தட்சிணாமூர்த்தியை வழிபட குவிந்து வருகின்றனர்.
நடப்பாண்டிற்கான குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடக்கிறது. இதனால் தான் ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள கதை என்னவென்று பார்க்கலாம்?
குருவிடம் ஜோதிடம் கற்ற சந்திரன்:
ஜோதிட சாஸ்திரத்தின் குருவான பிரகஸ்பதியிடம் சந்திர பகவான் தெய்வீக தன்மைகள், சாஸ்திரங்கள் பற்றி கற்றுக்கொள்வதற்காக மாணவனாக சேர்ந்துள்ளார். குரு பகவானும் தனக்கு தெரிந்த அனைத்து ஜோதிட கலைகளையும் சந்திரனுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.
தனது குருவான குரு பகவானிடம் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுக்கொண்ட சந்திரனுக்கு தான் என்ற ஆணவம் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. இதையறிந்த குரு பகவான் அவரது ஆவணத்தை அடக்க முடிவு செய்தார்.
இதனால், பூமியில் புதியதாக பிறந்த குழந்தைக்கு ஜாதகம் ஒன்றை கணிக்கும்படி சந்திர பகவானுக்கு கூறியுள்ளார். சந்திர பகவானும் தான் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்துள்ளார். அதில், அந்த குழந்தை ஒரு வயது வரை மட்டுமே உயிருடன் இருக்கும் என்றும், ஒரு வயது பூர்த்தியடையும் போது பாம்பு கடித்து உயிரை விடும் என்றும் கணித்து எழுதியுள்ளார்.
இதையடுத்து, சரியாக அந்த குழந்தையின் முதல் வயது பூர்த்தியடையும் போது என்ன நடக்கிறது? என்பதை பார்க்க குரு பகவானும், சந்திரனும் விண்ணுலகில் இருந்து பார்த்தனர். அப்போது, சந்திரன் கணித்தது போலவே அந்த குழந்தையின் ஒரு வயது பூர்த்தியடைய சில நிமிடங்களே இருந்த சூழலில், அந்த குழந்தை படுத்திருந்த தொட்டியின் மீது பாம்பு ஒன்று வந்தது.
இதைக்கண்ட சந்திரனுக்கு தான் கணித்தது போலவே நடக்கிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. குரு பகவானும் இதை பார்த்துக் கொண்டிருந்தார். தொட்டிலில் இருந்த குழந்தை தன்னை நோக்கி வரும் பாம்பை ஒரு விளையாட்டு பொருளாக நினைத்து துள்ளிக்குதித்தது. இதனால், தொட்டில் ஆடியது.
அப்போது பாம்பின் தலை தொட்டிலின் சங்கிலியில் சிக்கிக் கொண்டது. சங்கிலியில் சிக்கிக் கொண்ட பாம்பு அதில் இருந்து தப்பிக்க தனது உடலை முன்னும், பின்னும் அசைத்தது.
இதைப்பார்த்த குழந்தை இன்னும் உற்சாகமாக தொட்டிலில் துள்ளிக்குதித்தது. இதனால், பாம்பின் வால் உள்பட பின்பகுதியும் தொட்டிலில் மறுமுனை சங்கிலியில் சிக்கிக்கொண்டது. குழந்தை துள்ளிக்குதிக்கவும், தொட்டில் சங்கிலி இறுகவும் பாம்பு உடல் நசுங்கி உயிரிழந்தது.
இதைக்கண்ட சந்திரன் அதிர்ச்சியில் உறைந்தான். சந்திரனின் கணிப்புப்படி, பாம்பு கடித்து குழந்தையே உயிரிழக்க வேண்டும். ஆனால், சங்கிலியில் சிக்கி பாம்பு உயிரிழந்தது. இதனால், தன்னுடைய கணிப்பை சந்திரன் சரிபார்க்கத் தொடங்கினான். சந்திரனின் கணிப்பு மிகச்சரியாகவே இருந்தது.
இதையடுத்து, குரு பகவானிடம் தனது கணிப்பில் எந்த தவறும் இல்லையே? பின் எப்படி குழந்தை உயிர் பிழைத்தது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த குரு பகவான் உனது கணிப்பில் தவறு இல்லை. ஆனால், குரு பகவானாகிய எனது பார்வை இருந்ததால் குழந்தை உயிர் பிழைத்தது என்று விளக்கம் அளித்தார்.
மேலும், சந்திரனிடம் உனது ஜாதக கணிப்பு தவறு இல்லை என்றும், அதனால் உனக்கு வந்த ஆணவமே தவறு என்று கூறியுள்ளார்.
தலைக்கணம் நீங்கிய சந்திரன், குரு பார்வையின் மகிமையையும் புரிந்து கொண்டார். இதன் காரணமாகவே குரு பார்க்க கோடி நன்மை என்று உண்டாகியதாக புராணங்கள் கூறுகிறது.






