என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spirituality. Worship"

    • குலதெய்வம் என்பது அந்தக் குடும்பத்துக்கே உரியது என்பதால், திருமணமான பெண் புதிய வீட்டில் கணவரின் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
    • உப்பும் புளியும் சேர்த்து தயாரிப்பதனால் ஊறுகாயைக் கூட எடுத்து செல்லக் கூடாதாம்.

    திருமணமான பெண்கள் பிறந்த வீட்டிற்கு சென்று வரும்போதெல்லாம் நிச்சயமாக ஏதாவது ஒன்றை எடுத்து செல்வார்கள். அது மளிகை பொருட்களாகவும் இருக்கலாம் அல்லது அவர்களது மனதிற்கு பிடித்த பொருளாகவும் இருக்கலாம் அல்லது அவர்கள் புழங்கிய பொருளாகவும் இருக்கலாம். என்ன காரணமாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட பொருட்களை மட்டும் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு செல்லக் கூடாதாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.

    * உப்பு மற்றும் புளி : எந்த காரணம் கொண்டும் நிச்சயமாக கொண்டு செல்லக் கூடாதாம். அப்படி கொண்டு சென்றால் பிறந்த வீட்டில் உள்ள மகாலட்சுமி அங்கிருந்து வெளியேறி விடுவாள் என்பது நம்பிக்கை.

    * உப்பும் புளியும் சேர்த்து தயாரிப்பதனால் ஊறுகாயைக் கூட எடுத்துச் செல்லக் கூடாதாம்.

    * நல்லெண்ணெய்: பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் சிறு மனக்கசப்பு இருந்தாலும் அது பெரிதாகிவிடும்.

    * கசப்பு தன்மையுள்ள காய்கறிகள், கீரைகள் : அகத்திக்கீரை, பாகற்காய் போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாது என்கின்றனர். இதனால் தேவையில்லாத மனக்கசப்புகள் உண்டாகும் என்பது சாஸ்திர நியதி.

    * பூஜை பொருட்கள் : பிறந்த வீட்டின் குலதெய்வப் படங்கள் அல்லது சிலைகள், பூஜை பொருட்கள், விளக்கு முதலானவற்றை கொண்டு செல்லக் கூடாது. பயன்படுத்தாத பொருட்களாக இருந்தால் எடுத்துச் செல்லலாம். ஒரு வீட்டில் ஏற்றிய விளக்கை எப்போதும் மற்றொரு வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. அப்படி செய்தால் லட்சுமி கடாட்சம் மங்கிவிடும்.



    * குலதெய்வம் என்பது அந்தக் குடும்பத்துக்கே உரியது என்பதால், அதற்கான வழிபாடு அங்கேயே தொடர வேண்டும். திருமணமான பெண் புதிய வீட்டில் கணவரின் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

    * இரும்பு மற்றும் கூர்மையான பொருட்கள்: கத்தி, அரிவாள் உள்ளிட்ட இரும்பு பொருட்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி எடுத்துச் சென்றால் பிறந்த வீட்டாருக்கும் புகுந்த வீட்டாருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.

    * துடைப்பம், முறம்: வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம், மாப் மற்றும் அரிசி அளக்க பயன்படுத்தும் படி , புடைக்க முறம் போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. இதனால் இரு வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்படக்கூடும்.

    * கோல மாவு : இப்போதெல்லாம் கோலம் போடுவதே குறைந்துவிட்டது எனினும் சிலர் அவ்வழக்கத்தை விடாமல் தொடர்ந்து வருகின்றனர். பிறந்த வீட்டில் இருந்து கோலமாவை இலவசமாக எடுத்து வருதல் என்பது கூடாது. வேண்டுமென்றால் இதற்கான தொகையை தாயிடம் கொடுத்துவிட்டு எடுத்து வரலாம்.

    • வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.
    • தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும்.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை உள்ளது. சிலருக்கு தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. இப்படி தங்கம் பற்றி பலவாறாக யோசித்து கவலைப்படாமல் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்தாலே போதும். தங்கத்தையும் வாங்கலாம், உங்களிடம் உள்ள தங்கமும் நிலைத்து நிற்கும்.

    * தங்கம் சேர, வெள்ளிக்கிழமை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமியை வழிபாடு செய்வது மிகவும் முக்கியம்.

    * வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினம் காலை எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் மகாலட்சுமிக்கு விளக்கேற்ற வேண்டும்.

    * மகாலட்சுமியை மனதாரப் பிரார்த்தித்து, தாமரை மலர்கள் அல்லது செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    * காலை அல்லது மாலை வேளையில் மகாலட்சுமிக்கு உரிய சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் அல்லது பாயாசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து, விளக்கேற்றி, மந்திரங்கள் சொல்லி வழிபடலாம்.




    * மகாலட்சுமி பூஜையின் போது நம் மனதை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்க வேண்டும்.

    * வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.

    * தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும். ஆதலால், வெள்ளிக்கிழமை வழிபாட்டோடு சுக்கிர பகவானையும் குரு பகவானையும் சேர்த்து வழிபட வேண்டும்.

    * மகாலட்சுமிக்கு உரிய கிரகம் சுக்கிரன். அதனால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வெட்டிவேரை திரியாகத் திரித்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    * தொடர்ந்து மூன்று வாரம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த விளக்கேற்றி வழிபட்டால் தங்கம் சேரும், செல்வ வளம் அதிகரிக்கும்.

    மேலும் மஞ்சள், குங்குமம், பூக்கள் போன்ற மங்கலப் பொருட்களைப் பயன்படுத்தி வழிபாடு செய்வது நன்மை தரும். மகாலட்சுமியின் அருளைப் பெற வழிபாட்டின் போது கிராம்பு பயன்படுத்தலாம். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை செல்வ செழிப்பிற்காக தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    • 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.
    • லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார்.

    சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், பள்ளஈகை. இந்த கிராமத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயமானது, 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.

    ஒரு கட்டத்தில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி கிடந்த இந்த ஆலயத்தை, அந்தப் பகுதி மக்கள் ஒத்துழைப்போடு, புனரமைத்ததோடு, ராஜகோபுரம் மற்றும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் கடந்த 2013-ம் ஆண்டு ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பச்சை பசேலென்று இயற்கை படர்ந்த பள்ளஈகை கிராமத்தில் இத்தலம் அழகுற அமைந்திருக்கிறது. கோவிலுக்கு வெளியே விளக்குத் தூணும், பலிபீடமும் அமைந்துள்ளன. ஒரு நிலை ராஜகோபுரத்தோடு காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்தால், நான்கு கால் மண்டபம் காணப்படுகிறது.

    இந்த ஆலயமானது, அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழ்கிறது. ஆலயத்தின் உள்பகுதியில் இடது புறத்தில் ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகியோர் எழுந்தருளியுள்ள சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் சன்னிதி இருக்கிறது.

    மேலும் ஆலயத்திற்குள் ஆதிசேஷன் (நாகர்) திருமேனியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர், ஸ்ரீதேசிகன் ஆகியோர் சிலை ரூபத்தில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

    இவ்வாலய மூலவரான லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார். அவர் தனது இடது பக்க மடி மீது மகாலட்சுமி தாயாரை அமர வைத்து, தனது இடது கரத்தால் தாயாரை அணைத்தவாறு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு முன்பாக ஸ்ரீதேவி- பூதேவி சமேத லட்சுமி நாராயணரின் உற்சவத் திருமேனியும் உள்ளது.

    அருகிலேயே சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேசிகர் ஆகியோருக்கும் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெருமாள் ஆலயங்கள் அனைத்திலும் வீற்றிருக்கும் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு இல்லை. மாறாக ஆலயத்தின் தீபத் தூணில் சிற்பமாக அவர் காணப்படுகிறார்.

    தாயாருடன் அருளும் இத்தல பெருமாளை வணங்கி வழிபட்டால், திருமணத் தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை பிரார்த்திப்பதால், கணவன் - மனைவி ஒன்றுமை ஓங்கும் என்பதும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பதும் இத்தலத்திற்கே உரிய பெரும் சிறப்பாகும். இதுதவிர குழந்தை பாக்கியம் கிடைக்கவும், சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகவும், இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.

    ஆண்டுதோறும் இத்தலத்தில் பலவிதமான விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை வருடப்பிறப்பு, ஆனித் திருவோணம் (கும்பாபிஷேக தினம்), ஆவணி மாதத்தில் திருபவித்ரோத்சவம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், அனுமன் ஜெயந்தி, தைப்பொங்கல் (சங்கராந்தி), ராமநவமி, பங்குனி உத்திரம் முதலான உற்சவங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்வாலயத்தில் பாஞ்சராத்ர ஆகமப்படி, காலை 7 மணி முதல் 9 மணி வரை, ஒரு கால நித்திய பூஜை தவறாமல் நடைபெறுகிறது.

    அமைவிடம்

    திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கொத்திமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பள்ளஈகை கிராமம் அமைந்துள்ளது.

    ×