என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளிக்கிழமை"
- வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.
- தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை உள்ளது. சிலருக்கு தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. இப்படி தங்கம் பற்றி பலவாறாக யோசித்து கவலைப்படாமல் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்தாலே போதும். தங்கத்தையும் வாங்கலாம், உங்களிடம் உள்ள தங்கமும் நிலைத்து நிற்கும்.
* தங்கம் சேர, வெள்ளிக்கிழமை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமியை வழிபாடு செய்வது மிகவும் முக்கியம்.
* வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினம் காலை எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் மகாலட்சுமிக்கு விளக்கேற்ற வேண்டும்.
* மகாலட்சுமியை மனதாரப் பிரார்த்தித்து, தாமரை மலர்கள் அல்லது செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
* காலை அல்லது மாலை வேளையில் மகாலட்சுமிக்கு உரிய சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் அல்லது பாயாசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து, விளக்கேற்றி, மந்திரங்கள் சொல்லி வழிபடலாம்.

* மகாலட்சுமி பூஜையின் போது நம் மனதை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்க வேண்டும்.
* வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபடுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் பெருகச் செய்யும்.
* தங்கம் சேர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அருளும் வேண்டும். ஆதலால், வெள்ளிக்கிழமை வழிபாட்டோடு சுக்கிர பகவானையும் குரு பகவானையும் சேர்த்து வழிபட வேண்டும்.
* மகாலட்சுமிக்கு உரிய கிரகம் சுக்கிரன். அதனால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வெட்டிவேரை திரியாகத் திரித்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
* தொடர்ந்து மூன்று வாரம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த விளக்கேற்றி வழிபட்டால் தங்கம் சேரும், செல்வ வளம் அதிகரிக்கும்.
மேலும் மஞ்சள், குங்குமம், பூக்கள் போன்ற மங்கலப் பொருட்களைப் பயன்படுத்தி வழிபாடு செய்வது நன்மை தரும். மகாலட்சுமியின் அருளைப் பெற வழிபாட்டின் போது கிராம்பு பயன்படுத்தலாம். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை செல்வ செழிப்பிற்காக தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
- ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம்.
- ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் நடைபெறும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வ வழிபாட்டிற்கும் இந்த மாதம் ஏற்றதாகும்.
ஆடி மாதத்தில்தான் தட்சணாயனம் தொடங்குகிறது. தட்சணாயனம் என்பது சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென் திசை நோக்கி பயணம் செய்யும் காலமாகும். இது ஆடி மாதம் தொடங்கி மார்கழி வரை ஆறு மாதங்களை கொண்டதாகும். இந்தக் காலம் முழுவதும் தேவர்களுக்கு இரவு பொழுதாக கருதப்படுகிறது. இந்த புண்ணிய காலத்தில் நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை போன்ற சிறப்பு வாய்ந்த நாட்கள் வருகின்றன.
ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். அன்றைய தினம் திருவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் நந்தவனத்துக்கு எழுந்தருள்வார். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாடி வழிபட வேண்டும். இதனால் நாம் வேண்டிய அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும். அதுபோல ஆடி பவுர்ணமி தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே அன்றைய தினம் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.
சிலர் ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று சொல்வார்கள். இது அவர்களது அறியாமையால் கூறுவதாகும். உண்மையில் 'பீட மாதம்' என்றுதான் அதற்குப் பெயர். அதாவது இறைவனை நமது மனமாகிய பீடத்தில் வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே இதன் உண்மையான பொருள்.
பொதுவாக வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த தினமாகும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். அம்மனை வழிபடும்போது லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை அள்ளித் தரும்.
'ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி. அதாவது பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம் மற்றும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிய வேண்டும். பின்பு சூரிய உதயத்துக்கு முன்பாக சாணத்தைப் பிள்ளையாராக பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அருகம்புல் கொண்டு பிள்ளையாரை பூஜிக்க வேண்டும். வாழை இலையில் நெல் பரப்பி, அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.
ஆடி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, கருப்பு ஊமத்தம் பூமாலை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எத்தகைய பகைமையும் விலகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.
- இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது.
- இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கேரளாவில் 26-ந்தேதியும் நடக்கிறது. இந்த 2 நாட்களும் வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க சிரமத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது.
இது தொடர்பாக இந்திய முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.எம்.ஏ.சலாம் கூறியதாவது:-
கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆகும். இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் முஸ்லிம்கள், நமாஸ் (பிரார்த்தனை) செய்ய மசூதிகளுக்கு செல்வார்கள். அந்த நாளில் வாக்குப்பதிவு வைத்திருப்பது இஸ்லாமிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.
இந்த நாள் இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றும் வாக்காளர்கள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இடையூறாக இருக்கும். இதுகுறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனை மறுபரிசீலனை செய்ய அவர்கள் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும்.
- அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.
கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்கள் மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்க கூடாது அப்படி கொடுத்தால் வீட்டில் உள்ள லட்சுமி போய் விடுவாள் என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாகும். தங்க நகை ஆபரணங்களையும் யாருக்கும் வெள்ளிக்கிழமை கடனாகத் தரக்கூடாது. சுக்கிரனுக்கும் மகாலட்சுமிக்கும் உகந்த வெள்ளிக்கிழமை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும். வாரத்தின் ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமையே பெரும்பாலும் தெய்வத்திற்கு உகந்த நாளாக அனைவரும் கடைபிடிக்கின்றனர். வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தப்படுத்தி விரதமிருந்து தெய்வ வழிபாடுகள் செய்வார்கள்.

எல்லாக் கிழமையிலும் எல்லாவற்றையும் நாம் செய்துவிடக் கூடாது. குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவற்றை செய்வதால் வீட்டில் கடன் பிரச்சினை ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது.
வெள்ளிக்கிழமை அன்று அடுப்புகளை துடைக்கக் கூடாது வியாழக்கிழமை இரவே துடைத்து வைத்துவிடுவது நல்லது. வெள்ளிக்கிழமை என்றால் அனைத்து பெண்களும் வாசலில் கோலம் போடுவர் அவ்வாறு போடும் கோலம் புள்ளி வைத்து போடக்கூடாது ரங்கோலி கோலம் போட்டாலே போதுமானது.
வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழட்டுவதோ அல்லது கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது. தங்க ஆபரணங்களை பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது. பணத்தையோ, தயிர், உப்பு, ஊறுகாய், இட்லி, தோசைக்கு அரைத்து வைத்த மாவை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று பூஜை பொருட்களை விளக்கவும் அல்லது தொடைக்கவும் கூடாது பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கு உகந்த நாள் வியாழக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. அதே போல் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அழுக்கு துணிகளை சேர்த்து வைத்திருப்பது கூடவே கூடாது. வெள்ளிக்கிழமை அன்று துவைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகள் வீட்டில் இருக்கக்கூடாது. இதனால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும்.
பாத்ரூம், கழிவறையையும் இந்த நாளில் சுத்தம் செய்யக்கூடாது. அதே போல் சமையலறையில் அலமாரிகளில் போடப்பட்டிருக்கும் பேப்பர்களை புதிதாக மாற்ற கூடாது. மளிகை பொருட்களை எதுவாக இருந்தாலும் அதனை துடைத்து எடுக்க கூடாது. அதை எல்லாம் மறுநாள் தாராளமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வது கூடாது.
வெள்ளிக் கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. அதேபோல் முடி வெட்டுவதும் முகசவரம் செய்வதும் கூடாது. வெள்ளி கிழமை அன்று தேவையற்ற செலவுகளை செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும். முடி, நகம் இரண்டையும் வெள்ளிக்கிழமை வெட்டக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இந்த இரண்டுமே நம் உடலில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது . இதனால் வெள்ளிக்கிழமை நம் உடலில் உள்ள இந்த அங்கத்தை நான் இழக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் தவிர்ப்பதன் மூலம் இருக்கின்ற கடன் பிரச்சனையையும் சுலபமாக குறைக்க முடியும்.

வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவிக்கு விரதம் இருந்து சிறப்பு பூஜை செய்வதால், மகா லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைகிறாள். அன்னை லட்சுமி தேவியை மகிழ்விக்க வெள்ளிக்கிழமை செய்யப்படும் சில பரிகாரங்கள் மற்றும் பூஜைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி நிரப்பி வைக்கலாம். இதனால் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பார்கள். மேலும் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் சுமை குறையும். உங்கள் வீட்டில் அன்னை மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்ய வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமையன்று, 5 சிவப்பு மலர்களை கையில் எடுத்து, அன்னை லட்சுமியை தியானித்து, அந்த மலர்களை பெட்டகத்திலோ அல்லது பணப்பெட்டியிலோ வைக்க பண வரவு அதிகரிக்கும்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிசேக ஆராதனை நடைபெற்றது.
- பக்தர்களுக்கு அன்னதானம்,பிரசாதம் வழங்கப்பட்டது.
பல்லடம் :
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையொட்டி பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவிலில்,சிறப்பு பூஜை மற்றும், அபிசேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்லடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும், அபிசேக ஆராதனை நடைபெற்றது .இதில்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம்,பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பெரியகாண்டியம்மன் கோவிலில், திருக்கல்யாணம், யாகபூஜை, உள்ளிட்டவை நடைபெற்றது .தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல பல்லடம் அங்காளம்மன் கோவில், பொங்காளியம்மன் கோவில், பனப் பாளையம் மாரியம்மன் கோவில், தெற்கு பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
- கேழ்வரகு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருப்பூர் :
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில் அன்னதானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
அனைத்து அம்மன் கோவில்களும் வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டிருந்தன. பல்லடம், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.
மஞ்சள் காப்பு அலங்காரத்தில் திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன். வனபத்ரகாளியம்மன் அலங்காரத்தில் வாலிபாளையம் ஸ்ரீமாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
- ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில் அன்னதானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
அனைத்து அம்மன் கோவில்களும் வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டிருந்தன. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள முனீஸ்வரன் மற்றும் அண்ணமார் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அபிேஷகம் மற்றும் அபிேஷக பூஜையும் நடந்தது. பல்லடம், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன.
திருப்பூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் குழந்தை வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் புற்றுக்கண் நாகம்மாள் வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.






