search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது
    X

    கைது செய்யப்பட்டவர்கள்.

    சீர்காழி பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

    • சீர்காழி முழுவதும் பகல் நேரங்களில் சுற்றித்திரிந்து பூட்டி இருக்கும் இடங்களை நோட்டமிட்டனர்.
    • 4 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சேந்தங்குடி, பாதரக்குடி, சம்பா கட்டளை, சட்டநாதபுரம் உள் ளிட்ட பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை- வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது சீர்காழி அருகே உள்ள தாண் டவன்குளத்தைச் சேர்ந்த மருது என்ற விஜயபாஸ்கர் (வயது 28), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள தெம்மூர் கிராமத்தைச்சேர்ந்த மணிமாறன் ( 32) ஆகிய இருவரும் சேர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.திருட்டில் ஈடுபட்ட விஜயபாஸ்கரன், மணிமாறன் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்று தற்பொழுது இருவரும் வெளியே வந்து சீர்காழி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி சீர்காழி முழுவதும் பகல் நேரங்களில் சுற்றி திரிந்து பூட்டி இருக்கும் இடங்களை நோட்டமிட்டு இரவு நேரங்களில் நகை வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து விஜய பாஸ்கர், மணிமாறன் ஆகிய இருவரையும் எஸ். பி. தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா, எஸ். எஸ். ஐ .க்கள் ரமேஷ், நரசிம்ம பாரதி அசோக் குமார், செந்தில் ஆகியோர் கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சீர்காழி போலீசார் அவர்களிடமிருந்து 4 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ஒருஇருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து விஜயபாஸ்கள், மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×