என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police investigation"
- மனைவியை அபகரித்துக் கொண்டு கவுதம் குடும்பம் நடத்தி வருவதை ஜீரணிக்க முடியாமல் இருந்த அவர் இதுபற்றி தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.
- வழக்கில் 3 பேர் சரண் அடைந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பிரியாவின் கணவர் ராஜ்கிரண் அவரது நண்பர்கள் சுகுமார், மணி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்தவர் கவுதம். 27 வயதான இவர் மீது தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் காவல் நிலைய சரித்திர பதிவேட்டிலும் கவுதமின் பெயர் இடம்பெற்று உள்ளது. கொலை முயற்சி வழக்கு ஒன்றும் இவர் மீது உள்ளது. இதனால் போலீசார் கவுதமை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் மனைவி பிரியா மற்றும் 2 குழந்தைகளோடு கவுதம் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் வீட்டின் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. இதனால் கவுதமும், பிரியாவும் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே கும்பலாக ஆட்கள் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தனர். இதனால் பயந்து போன கவுதம் கதவை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார். நீண்ட நேரமாகவே தட்டியும் திறக்காததால் வெளியில் நின்றிருந்த 6 பேரும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப்பார்த்ததும் கவுதமும் பிரியாவும் கலங்கிப் போனார்கள். குழந்தைகளும் கதறி துடித்தன. உயிர் பிழைக்க வழி தெரியாமல் கவுதம் வீட்டுக்குள்ளேயே தவித்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கவுதமை சரமாரியாக வெட்டியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் மனைவி, குழந்தைகள் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து துடிதுடித்து பலியானார்.
பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தனது கண் எதிரே கவுதம் கொலை செய்யப்பட்டதை பார்த்து பிரியா கதறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். இதனால் சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவுடி கவுதமின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவுதமை வெட்டிக்கொன்ற 6 பேரில் பிரதீப், சுரேஷ், ராஜா பாய் ஆகிய 3 பேர் தேனாம்பேட்டை போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை தேனாம்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை போலீசாரிடமும் ஒப்படைத்தனர். 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
சைதாப்பேட்டை வீட்டில் கவுதமின் மனைவியாக வாழ்ந்து வந்த பிரியா அவரது முன்னாள் காதலி என்பதும் திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பிறகும் பிரியாவை மறக்க முடியாமல் முதல் கணவரிடம் இருந்து கவுதம் அபகரித்துக் கொண்டு குடும்பம் நடத்தியதும் அம்பலமானது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாகவே பிரியாவின் முதல் கணவரான ராஜ்கிரண், தனது நண்பர்களோடு சேர்ந்து கவுதமை வீடு புகுந்து வெட்டிக் கொன்றதும் தெரிய வந்துள்ளது.
ரவுடி கவுதமும், பிரியாவும் ஒருவரையொருவர் விரும்பி காதலித்து வந்துள்ளனர். ஆனால் பிரியாவின் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கிரணை திருமணம் செய்து வைத்துள்ளனர். ராஜ்கிரண்- பிரியா தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். இருப்பினும் கவுதமால் பிரியாவை மறக்க முடியவில்லை. அவரோடு சேர்ந்து வாழ விரும்பினார். இதற்கு தடையாக இருந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் கவுதம், பிரியா இருவரும் சேர்ந்து ராஜ்கிரணை கொலை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பாக கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வெளியில் வந்து கவுதம் மற்றும் பிரியா இருவரும் சைதாப்பேட்டையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து ராஜ்கிரண் கவுதமை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். மனைவியை அபகரித்துக் கொண்டு கவுதம் குடும்பம் நடத்தி வருவதை ஜீரணிக்க முடியாமல் இருந்த அவர் இதுபற்றி தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அப்போதுதான் வீட்டில் தூங்கும் போது கவுதமை கொலை செய்வது என அவர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி நேற்று இரவு வீட்டுக்கு சென்று சரமாரியாக வெட்டிக் கொன்று உள்ளனர். இந்த வழக்கில் 3 பேர் சரண் அடைந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பிரியாவின் கணவர் ராஜ்கிரண் அவரது நண்பர்கள் சுகுமார், மணி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சி.சிடி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்.
- ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது.
நெல்லை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தினந்தோறும் நெல்லைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி படுக்கை வசதி கொண்ட அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று மதியம் நெல்லைக்கு வந்தது.
நெல்லை புதிய பஸ்நிலை யத்தில் பயணிகளை இறக்கிவிட்டு வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனைக்கு பஸ் வந்தது. அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வழக்கம் போல் பஸ்சை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அந்த பஸ்சில் 9-வது எண் படுக்கைக்கு கீழ் ஒரு துப்பாக்கியும், சுமார் 2½ அடி நீளம் கொண்ட ஒரு அரிவாளும் கிடந்தது.
இதுகுறித்து பணிமனை மேலாளர் கண்ணன் பாளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜூலியட், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பணிமனைக்கு விரைந்து வந்து அரிவாள் மற்றும் துப்பாக்கியை கைப்பற்றினர்.
மேலும் அந்த பஸ்சில் வேறு ஏதும் ஆயுதங்கள் இருக்கிறதா? என்று பஸ் முழுவதையும் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அரிவாள், துப்பாக்கியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பணிமனை மேலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 102 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பஸ்சில் வந்தவர்கள், அந்த இருக்கையில் பயணித்த நபர் யார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்தனர்.
அப்போது அந்த இருக்கையில் பயணித்தவர் கோவில்பட்டியில் இறங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் பெயர் மட்டுமே இருந்தது. அவரது முகவரி இல்லை.
இதையடுத்து தனிப்படை போலீசார் கோவில்பட்டிக்கு விரைந்தனர். அங்கு வழக்கமாக அரசு விரைவு பஸ்கள் நின்று செல்லும் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சி.சிடி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் அந்த நபர் கோவில்பட்டியை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தனது பாட்டியின் இறப்பு நிகழ்விற்கு சென்னையில் இருந்து விடுப்பு எடுத்து வந்ததாகவும், படுக்கைக்கு கீழ் ஆயுதங்கள் இருந்த விஷயமே போலீசார் தன்னை விசாரிக்கும்போது தான் தெரியும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை இன்று பாளை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீசார் உத்தர விட்டுள்ளனர். அங்கு வைத்து துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
அந்த வாலிபர் கூறுவது உண்மையெனில், இந்த ஆயுதங்களை வேறு யார் பதுக்கி வைத்திருந்தார்கள்? என்பதை அறியும் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெங்கடேசலு வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனது தாயாரை தாக்கினார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் வைசிபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுங்கம்மா (வயது 52). இவருடைய மகன் வெங்கடேசலு.
நேற்று முன்தினம் ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் எந்த காரணத்தைக் கொண்டும் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என வெங்கடேசலு அவரது தாயாரிடம் கூறினார்.
ஆனால் சுங்கம்மா இதனை கண்டு கொள்ளவில்லை. தேர்தல் அன்று சுங்கம்மா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த வாகனத்தில் ஏறி வாக்களிக்க சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனால் தாயின் மீது வெங்கடேசலு கடும் கோபத்தில் இருந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த வெங்கடேசலு அவரது தாயிடம் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள் என கேட்டார்.
அப்போது அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மக்கள் நலத் திட்டங்களை நன்றாக செய்துள்ளது. இதனால் அந்த கட்சிக்கு ஓட்டு போட்டேன் என்றார்.
இதனால் ஆத்திரம் உச்சத்திற்கு ஏறிய வெங்கடேசலு வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனது தாயாரை தாக்கினார்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சுங்கம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை கண்டதும் வெங்கடேசலு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் .
தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் தூண்டுதலின் பேரில் வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்தனர்.
கம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
இதேபோல ஏலூர் மாவட்டம் விஜயாரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வம்சி. தெலுங்கு தேசம் கட்சி தொண்டரான இவர் தேர்தலில் அந்தக் கட்சிக்காக கடுமையாக வேலை பார்த்தார். தேர்தல் முடிந்த நிலையில் நேற்று அவருடைய குடும்பத்தினரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டார்.
அப்போது அவருடைய தந்தை பென்டையா மற்றும் தாய், சகோதரி ஆகியோர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வாக்களித்தோம் என பதில் அளித்தனர். இதனால் வெறிபிடித்த வம்சி இரும்பு கம்பியால் தந்தை தாய் மற்றும் தங்கையை தாக்கினார்.
அப்போது அவருடைய தந்தை நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். அதனால் அந்த கட்சிக்கு வாக்களித்தேன் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
ஆனாலும் தந்தை என்று கூட பார்க்காமல் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கினார். அக்கம் பக்கத்தினர் சென்று இதனை தடுத்து நிறுத்தினர். காயம் அடைந்த பென்டையா மற்றும் அவருடைய மனைவி மகள் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
- வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பல பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புகாரளித்த சில வாரங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்தேவார் மருத்துவமனை, தீப்சந்தூர் மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவத்தால் டெல்லி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைகள், விமான நிலையம், டெல்லி வடக்கு ரெயில்வேயின் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அலுவலகம் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
- 8 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்:
ஐதராபாத் மாநிலத்தில் சாலையோரத்தில் பைக் ஒன்று தீபற்றி எரிந்தது. தீப்பற்றி எரிந்த பைக்கை தண்ணீர் ஊற்றி அணைக்க அருகில் இருந்தவர்கள் போராடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பெட்ரோல் டேங்க் வெடித்ததால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த 8 பேரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல் டேங்க் வெடித்து 8 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோன் மற்றும் மர பர்னிச்சர் தயாரிக்கு கிடங்கில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்பும் ஏற்படவில்லை. அப்பகுதி முழுவதும் கரும்புகையாக சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
?LIVE : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் பயங்கர தீ விபத்து https://t.co/AkE1ejLio3
— Thanthi TV (@ThanthiTV) May 12, 2024
- அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
- பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளம் டாக்டர் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் தனது 2 ஆண் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த அந்த பெண்ணின் கணவரான டாக்டர் நேராக அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, தனது மனைவி தங்கி இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது மனைவி இரண்டு ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை கண்ட அவர் ஆவேசம் அடைந்து மனைவியை கடுமையாக அடித்து உதைத்து தாக்கி உள்ளார். இதைப்பார்த்த அந்த பெண், ஆண் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டாக்டர் மற்றும் பெண் டாக்டர், அவரது ஆண் நண்பர்கள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பெண் டாக்டருடன் நெருக்கமாக இருந்தது காஜியாபாத் மற்றும் புலந்த் சாகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே பெண் டாக்டரை அவரது கணவர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Extra-Marital affair Kalesh (Doctor (Husband caught his Doctor Wife doing three some in a Hotel in Kasganj, UP. The wife is a Govt Doctor and she was staying separate after having dispute with her husband since last one year)
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 10, 2024
pic.twitter.com/fBeMbQD8PF
- கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்களிடம் முதல் கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
- சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை தடயங்கள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டை உடைத்து 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை அள்ளி சென்ற மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த துணிகர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சிநகரை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 46). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதுரை பாசிங்காபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்ற ஷர்மிளா நேற்று இரவு வீடு திரும்பி உள்ளார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் ரொக்கம் மதிப்பு ரூ.1.30 கோடி ஆகும். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்களிடம் முதல் கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை தடயங்கள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சிமெண்ட் ஆலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பற்றியது. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் ஆலையை சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டனர். தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
- சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார்.
திருப்பூர்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவன்-மகனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
அப்போது யூ டியூப்பில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜூன் கிருஷ்ணன் என்ற சாமியார் மாந்திரீகம் மூலம் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வீடியோ க்களை பார்த்துள்ளார். இதையடுத்து கணவரை தன்னுடன் சேர்த்து வைப்பதற்காக சாமியார் அர்ஜூன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமியாரிடம் நடந்த விவரத்தை கூறியதுடன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அப்போது கணவன் மற்றும் மகனை சேர்த்து வைப்பதற்கான பரிகாரங்கள் செய்ய முன்பணமாக ரூ.10 ஆயிரம் கட்டுமாறு அர்ஜூன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் ரூ.10ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார். கட்டிய சிறிது நாட்களுக்கு பின் பரிகாரம் செய்ய அதிக செலவாகும். ரூ.1.50 லட்சம் கொடுத்தால்தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் என சாமியார் தெரிவித்துள்ளார்.
கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி பணத்தை சாமியாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு சாமியார் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அர்ஜூன் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற நிலையில் அந்த பெண்ணை , சாமியார் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் மேற்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி 50 பெண்களிடம் பணம் பெற்று சாமியார் ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாமியாரை கைது செய்து விசாரித்தால் இந்த சம்பவத்தில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
- செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.
இந்த மலையின் உச்சியில் சிவன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இந்த மலை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், பல வகையான உயிரினங்கள் உள்ளன. தினந்தோறும் மூலிகைகளை பறித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் மலை மீது தீ வைத்தனர். இதனால் மலையை சுற்றி காட்டுத்தீ மளமளவென எரிய தொடங்கியது. மலையில் இருந்த அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் தீயில் எரிந்து நாசமானது. சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டு இருந்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.
இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர்.
- குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன.
கேரள மாநிலம் வெங்கரையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷேர்மார்க்கெட் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் ரூ. 1 கோடியே 8 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கர்நாடக மாநிலம் ஹரனபள்ளியில் வசிக்கும் ஒருவர் தான் ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் 6 பயோ மெட்ரிக் ரீடர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரோஷன் (வயது 46) என்பதும், டெல்லியைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மடிக்கேரியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. தனியார் மொபைல் நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரான இவர், வாடிக்கையாளர் புதிய சிம் கேட்டு வரும்போது, அவர்களது கைரேகைகளை, 2 அல்லது 3 முறை பதிவு செய்து அவர்களுக்கு தெரியாமல் அதனை சேகரித்து விடு வாராம். பின்னர் அதனை வைத்து புதிய சிம்கார்டுகள் ஒவ்வொன்றும் ரூ.50-க்கு வாங்கி ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கும் விற்றுள்ளார்.
இந்த சைபர் குற்றம் குறித்து கைதான ரோஷனிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதாக மலப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்