search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
    • ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேர் கைது.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்படைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களை மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

    குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.

    முன்னதாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார்.

    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ இதுவரை 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர்.
    • ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, பாக்ரா பேட்டை உள்ளிட்ட ஷேஷாசலம் வனப்பகுதியில் விலையுயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன. இந்த செம்மரங்கள் வெளிநாடுகளில் அதிக அளவு விலைபோவதால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செம்மர வியாபாரிகள் தமிழக பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களை கொண்டு செம்மரங்களை வெட்டி எடுத்து கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டம் குண்ட்ரவாரி பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர். அப்போது அந்த கார் நிற்காமல் வழிமறித்த போலீஸ்காரர் மீது மோதி சென்றுவிட்டது. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக செம்மர கடத்தல் கும்பல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கீழ்நிலவூர் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 31) உள்ளிட்ட 8 பேர் மீது ஆந்திர மாநிலம் கே.வி.பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள 6 பேரை தனிப்படை அமைத்து ஆந்திர மாநில போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2 தினங்களாக கல்வராயன்மலையில் முகாமிட்டு ஆந்திர மாநில போலீசார் தேடி வரும் நிலையில், முக்கிய குற்றவாளியான ராமன், விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக இன்று சரணடைந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    திருச்சி:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் இவர்கள் சிறப்பு முகாமில் காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தங்களை உடனடியாக சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்

    'ராபர்ட் பயஸ் மயக்கமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக' கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை காணச் சென்ற வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் முருகன் மனைவி எஸ். நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    நானும் எனது கணவர் முருகனும் கடந்த 11-11-2022 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். அதன் பின்னர் எனது கணவரை அவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர்.

    சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டது முதல் எனது கணவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.

    எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும் இதுவரை அவரை இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சிறையில் இருந்து எனது கணவர் விடுதலை ஆனாலும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். சிறப்பு முகாமிற்குள் எனது கணவர் நடைபயிற்சி கூட செய்ய அனுமதிப்பதில்லை.

    எந்தவித விளையாட்டும் விளையாட அனுமதிப்பதில்லை. மேலும் எனது கணவர் மட்டும் மற்ற முகாம் வாசிகளை பார்க்கவோ, பேசவோ, முடியாத அளவில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    அவர் முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    இந்த சிறப்பு முகாமில் முறையான உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறப்பு முகாமில் இறந்துவிட்டார்.

    அவர் தனக்கு மாத்திரை வேண்டும் என்று கேட்ட போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி எனது கணவர் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.

    எனது கணவரை கடந்த 5-ம் தேதி நான் முகாமில் சந்தித்தபோது அவர் உடல் மெலிந்து 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார்.

    எனது கணவர் இன்றுடன் 12 நாட்கள் உணவு உட்கொள்ளாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    மேலும் தற்போது எனது கணவர் சிறப்பு முகாமில் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் அவருக்கு முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சுகிறேன் எனவே இந்த கடிதத்தை கருணையுடன் பரிசீலனை செய்து எனது கணவர் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வழிப்பறி, கஞ்சா விற்பனை, பண மோசடி, ரேசன் அரிசி கடத்தல்,மதுபாட்டில் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த லதா (53), அடையாறை சேர்ந்த மெர்சிதீபிகா, துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ், தரமணி மிதுன்சக்கரவர்த்தி, திருவொற்றியூர் அகில் அகமது உள்ளிட்ட மொத்தம் 19 பேர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான உத்தரவை போலீஸ்கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்து உள்ளார். இந்த ஆண்டில் மொத்தம் 667 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கட்டப்பஞ்சா யத்து, மிரட்டி பணம்பறித்தல், போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    • வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 40 வழக்குகள் உள்ளது.
    • கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.

    அவிநாசி:

    சேவூா் அருகே புதுச்சந்தை வரப்பளத்தான் தோட்டத்தைச் சோ்ந்த கருப்புசாமி மகன் புக்கான் (எ) மூா்த்தி (வயது 39). அவிநாசி, குன்னத்தூா், பெருமாநல்லூா், சேவூா், புன்செய்புளியம்பட்டி, வரப்பாளையம் ஆகிய காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இவா் மீது 40 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த இவரை சேவூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சா்வேஸ்வரன், சேகா், தலைமைக் காவலா் ஆகியோா் கொண்ட தனிப்படை போலீசார் தேடி வந்தனா்.

    இந்த நிலையில் ரகசிய தகவலின்படி, ராயா்பாளையம் அருகே வண்ணாம்பாறை பகுதியில் தலைமறைவாக இருந்த புக்கான் (எ) மூா்த்தியை தனிப்படை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா். 

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
    • சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டார். மேலும், வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்வதால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு தகவலும் தெரிவித்திருந்தார்.

    அதன்படி, ரோந்து பணி செல்லும் போலீசார் தினமும் காலை, இரவு நேரங்களில் அவரது வீட்டை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 4 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த மற்றொரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து சோழபுரம் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சற்குணன் தலைமையில், தலைமை காவலர்கள் ஜம்புலிங்கம், சரவணன் மற்றும் காவலர் காளீஸ்வரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும், அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஓகை குமார் என்பது தெரியவந்தது.

    மேலும், இவர் கும்பகோணம் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு, பல்வேறு போலீஸ் நிலையங்களில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.திருட்டு சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில்:-பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றால் அது தொடர்பான தகவல்களை 81222 51764 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றார்.

    • மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அருண்ராஜ் (வயது 24). இவர் நேற்று இரவு சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கம்பியால் தாக்கியும் தப்பித்து சென்றுள்ளனர்.

    தலை மற்றும் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் கீழே சரிந்த அருள்ராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இது குறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவத்திற்கான காரணம் தெரிய வில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளைஞரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்சினை எழுந்தது.
    • 10 பேரும் தினேஷ்குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 30), பெயிண்டர். இவர் மீது கொலை முயற்சி, அடி தடி, வழிப்பறி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கும், ராஜேஷ் என்பவருக்குமிடையே 'யார் பெரிய ரவுடி' என்ற முன்விரோத மோதல் உள்ளன. இதன் காரணமாக தினேஷ்குமாரை கொல்ல ராஜேஷ் திட்டமிட்டார்.

    நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், தினேஷ்குமார் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினர். அப்போது ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்சினை எழுந்தது. உடன் வந்த நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து முன்விரோதம் தொடர்பாக சமாதானப் பேச்சு நடத்தலாம் என கூறி தினேஷ்குமாரை கே.என்.பி., சுப்ரமணியம் நகருக்கு அழைத்து சென்றனர். காட்டுப்பகுதிக்குள் சென்ற போது மீண்டும் இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. இதில் ராஜேஷ் உட்பட, 10 பேரும் தினேஷ்குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், (28), கண்ணன் (25), தினேஷ் (26), பாலாஜி சரவணன் (28), தமிழரசன், (25), பாலகிருஷ்ணன், (25) என 6 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3 ேமாட்டார் சைக்கிள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ், ராம்குமார் உட்பட 4 பேரை போலீசார் தேடி வந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து வெளியூர் தப்பி செல்ல முயன்ற முக்கிய குற்றவாளி ராஜேஷை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து நள்ளிரவு கைது செய்தனர்.அவரிடம் நல்லூர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ராஜேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் 6பேர் மீது கஞ்சா, கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்கு உள்ளன. ஜாமீனில் எடுக்க உதவி செய்யாதது தொடர்பாக தினேஷ்குமார், ராஜேஷிடம் முன்விரோதம் இருந்தது. 'யார் பெரிய ரவுடி' என்ற பிரச்னை முற்றி போய், தற்போது கொலையில் முடிந்தது.

    6 பேரில் பாலாஜி சரவணன், மணிகண்டன் மற்றும் தலைமறைவாக உள்ள ராம்குமார் ஆகியோர் மீது கடந்த, 2022 திருப்பூர் எம்.பி., நகர் காட்டு பகுதியில் சதீஷ் என்ற வாலிபரை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டித்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரணை
    • துப்பாக்கியை காட்டி 20 பவுன் நகையை கொள்ளையடித்து காரில் சென்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்த வர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளி நாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்போது இங்கேயே வசித்து வருகிறார்.

    இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின், மகள் மற்றும் மாமியாருடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் முகமது உமர் சாகிப் மட்டும் இருந் தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முகமது உமர் சாகிப்பிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு காரில் சென்றனர்.

    இதுகுறித்து முகமது உமர்சாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். ெகாள்ளை தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியைச் சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்த கவுரி, இருளப்புரத்தைச் சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன்புகாரி, மேல சரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ்மீரான் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டது.

    கொள்ளைக்கு பயன்ப டுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது. தனி படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.

    இந்த நிலையில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் ஜெயிலில் அடைக் கப்பட்டனர். தலைமறை வாகி இருந்த 4 பேரை தேடி வந்த நிலையில் ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரண டைந்தனர். இவர்களை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோட்டார் போலீசார் 3 பேரையும் காவலில் எடுத்தனர். அவர் களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமறைவாகி இருந்த முக்கிய குற்றவாளி சார்லசை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கோவில்பட்டியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சார்லஸை போலீ சார் சுற்றி வளைத்து பிடித்த னர். பிடிபட்ட சார்லஸை நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து விசாரித்து வரு கிறார்கள். கைது செய் யப்பட்ட சார்லசுக்கு குமரி மாவட்டத்தில் வேறு திருட்டு வழக்கு களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    • 15 நாள் நீதிமன்ற காவலில் தேவேந்திரனை வைக்க உத்தரவிட்டார்.
    • முக்கிய குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் பழனியப்பன் (81) .

    இவர் தஞ்சை அருகே சாலியமங்கலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அடகு கடை வைத்து நடத்தி வந்தார்.

    கடையில் வேலை பார்க்க துணையாக தனது மகன் தேவேந்திரனை (51) நியமித்தார்.

    தந்தையும், மகனும் சேர்ந்து அடகு கடை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த அடகு கடையில்

    அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை முதலீடாக சிறுசேமிப்பு மூலம் பெற்றனர் . ஆனால் குறிப்பிட்ட காலம் கழித்து பொதுமக்களுக்கு முதிர்வு தொகை ஏதும் தரவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தேவேந்திரனிடம் பணத்தைக் கேட்டு நெருக்கடி செய்தனர்.

    இந்த நிலையில் திடீரென அடகு கடையை பூட்டிவிட்டு 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

    இது தொடர்பான வழக்கு மாவட்ட குற்றப்பிரிவில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இதில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுமார் ரூ.5 கோடி வரை பணம் கட்டி ஏமாந்தனர்.

    இந் நிலையில் இந்த வழக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீஸ்காரர்கள் சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் பழனியப்பன், தேவேந்திரனை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர்.

    ஆனால் பழனியப்பன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் என போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து தேவேந்திரனை தேடி வந்தனர்.

    அப்போது அவர் சென்னையில் மாத சம்பளத்திற்கு லாரி ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    இந்த நிலையில் அவரை தொடர்ந்து கண்காணித்த போது அவர் தஞ்சாவூர் மாதாக்கோட்டை பகுதிக்கு ரகசியமாக வந்து சென்றதை போலீசார் அறிந்தனர்.

    இதை தொடர்ந்து தேவேந்திரனை சுற்றி வளைத்து பிடித்து மதுரையில் உள்ள தமிழ்நாடு பாதுகாப்பு முதலீட்டாளர்கள் நல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் தேவேந்திரனை வைக்க உத்தரவிட்டார்.

    அதன் பேரில் தேவேந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
    • ஜேப்படி ஆசாமிகள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் மத்திய பஸ் நிலையம், கோவில் வழி, புதிய பஸ் நிலையம் இயங்கி வருகின்றன. கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புது பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மத்திய பஸ் நிலையத்திலருந்து டவுன்பஸ்கள் மற்றும் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் செல்கின்றன. தினந்தோறும பல ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தவும் பழைய குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் எப்.ஆர்.எஸ் என்னும் சாப்ட்வேர் மூலம் போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்:-

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பனியன் கம்பெனிகளில் லட்சக்க ணக்கான தொழிலா ளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வாரத்தில் சனி ஞாயிறுகளில் சம்பளம் அளித்து விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் சிலர் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பஸ் மூலம் திருப்பூர் நகரத்துக்கு வருகிறார்கள். இது போன்ற நேரத்தில் ஜேப்படி ஆசாமிகள், செல்போன்கள் திருட்டு, நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர். மேலும் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம்நகை பறிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனைகளில் ஈடுபடுகிறோம். குற்றங்களை தடுக்கும் வகையில் சோதனையில் சிக்கக்கூடிய சந்தேக நபர்கள் ஏதாவது வேறு வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ள பழைய குற்றவாளி களை உடனே கண்டறியும் வகையில் எப்.ஆர்.எஸ். என்னும் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் துணையுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் போட்டோ எடுத்தால் அவர்கள் பழைய குற்றவாளியாக இருந்தால் முழுமையான விவரமும் வந்துவிடும் . இதனால் எளிதாக குற்றவாளிகளை கைது செய்ய முடிகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

    • ஆட்டோவை திருட முயன்ற வழக்கில் யுவராஜ் என்ற டேனியை போலீசார் கைது செய்தனர்.
    • திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(வயது36). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்பொழுது நாய் கத்தியதால் வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த ஆட்டோவை தள்ளிக் கொண்டு சென்றதைப் பார்த்து திருடன்! திருடன்! என்று கூச்சலிட்டார். இதனால் அந்த மர்ம நபர் ஆட்டோவை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து குறித்து வினோத் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில், ஆட்டோவை திருட வந்தவர் மாகரல் கிராமம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்ற டேனி(வயது28) என்பது தெரியவந்தது. எனவே, போலீசார் அந்த வாலிபரை கைது செய்து வெங்கல் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் யுவராஜ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. எனவே,அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    நேற்று இரவு மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலை அருகே சென்றபோது யுவராஜ் தான் இரண்டு உடைந்த பிளேடுகளை விழுங்கி விட்டதாக போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×