search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் ஊழியர்"

    • மனவேதனை அடைந்த பெண் அதிகாரி கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்தபோது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ராயபுரம்:

    ராயபுரம், கல்லறை சாலை அருகே குடிநீர் வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு திருமணமான 33 வயது இளம்பெண் அதிகாரியாக உள்ளார்.

    இவர் கருத்து வேறுபாட்டால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    அதே அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் ஜமீன்பல்லாவரத்தை சேர்ந்தவர் பாலியல் ரீதியாக பெண் அதிகாரிக்கு தொல்லை கொடுத்தார். இதுபற்றி கண்டித்தும் அதிகாரியின் தொல்லை எல்லை மீறியது.

    இதனால் மனவேதனை அடைந்த பெண் அதிகாரி கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்தபோது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நலமாக உள்ளது.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த, பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியின் மனைவி, தற்கொலைக்கு முயன்ற பெண் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்கும், அவரது மகள் மற்றும் தாய்க்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அதிகாரி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அதிகாரியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

    குடிநீர் வாரிய அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணிசெய்யும் பெண் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முக்காடு பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
    • ஒரு துணிக்கடையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.

    நாகர்கோவில் :  திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவர் கடந்த சில வருடங்களாக குமரி மாவட்டம் குளச்சல் அருகே முக்காடு பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதுபாலா (24). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மதுபாலா கடந்த 2 மாத மாக குளச்சலில் ஒரு துணிக்கடையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு துணிக்கடை யில் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பிய மதுபாலா வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மாடசாமி நெல்லை மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் சென்று தேடினார். ஆனால் மதுபாலா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து மாடசாமி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மதுபாலாவை தேடி வந்தனர். இந்நிலை யில் மதுபாலா நேற்று முன்தினம் இரவு குளச்சல் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது அவர் பெள்ளாச்சியில் தோழியை பார்க்க சென்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனே மதுபாலாவின் வீட்டினருக்கும், மாடசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் போலீஸ் நிலை யம் வர ழைக்கப் பட்டனர். கணவரை பார்த்ததும் மதுபாலா மாடசாமியுடன் செல்ல மாட்டேன் என மறுப்பு தெரிவித்தார். கணவர் வேண்டாம் என்றால் முறைப்படி விவாகரத்து பெற வேண்டும் என மதுபாலாவுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். பின்னர் மதுபாலாவை அவரது அம்மாவுடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இரவு அம்மாவுடன் படுத்து தூங்கிய மதுபாலா நேற்று முன்தினம் இரவு மீண்டும் மாயமானார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் 404 ரேஷன் கடைகள் உள்ளன.
    • நீலகிரியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் உள்ளன.

    இந்த கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்றவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்தநிலையில் ஊட்டி மேல் தலையாட்டு மந்து பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 19-ந் தேதி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சந்தியா, ஊட்டி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர்.

    அப்போது பதிவேடுகளில் இருந்ததை விட, ரேஷன் கடையில் 3,500 கிலோ அரிசி பற்றாக்குறையாக இருந்தது. இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர் அமுதாவிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அரிசி கெட்டுப்போய் விட்டதால் கோரிசோலா பகுதியில் கொட்டி விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ஊட்டி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் நீலகிரி கூட்டுறவு சங்க இணை பதிவாளர் வாஞ்சிநாதன் ஆய்வு நடத்தி, ரேஷன் கடை விற்பனையாளரான அமுதா என்பவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்தார்.

    இதற்கிடையே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், அமுதா ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்.
    • காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேருநகர் அருகே, வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏராள மான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில், வட்டார வளர்ச்சி அளவிலான கூட்ட மைப்பு பெண் ஊழி யர்களிடம், அவர்களின் மேல் அதிகாரியாக, வட்டார வளர்ச்சி அலு வலக இணைப்பு அதிகாரி மகேஸ் குமார் (வயது36) வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு கீழ் வேலை செய்யும் பெண் ஊழியரு குளை, தனது வீட்டு வேலை களை செய்யச் சொல்வது, ஆபச மாக பேசுவது போன்ற வேலைகளை செய்யச் சொல்வதாக கூறப்படு கிறது. மேலும், முடியாது என மறுக்கும் பெண்கள் குறித்து, மேல் அதிகாரி களிடம் தவறான புகார் களை அளித்து, வேலையை விட்டு நீக்கிவிடு வேன் என மிரட்டியதாக கூறப்படு கிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல், 40 வயது திருமணம் ஆன பெண் ஊழியர் ஒருவரை சொந்த வேலைகளை செய்ய சொன்னபோது, அவர் முடியாது என மறுத்தால், அந்த பெண் ஊழியரை கடுமையாக பேசி, உன்னை உடனே வேலையை விட்டு நீக்கு கிறேன் என மிரட்டியதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அப்பெண் ஊழியர், அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த ஊழியர்கள், அவரை காரைக் கால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    மேலும் காரைக்கால் மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், காரைக்கால் வட்டார வளர்ச்சி அவலு வக இணைப்பு அதிகாரி மகேஸ்குமார், பெண் ஊழி யர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, சொந்தவேலை செய்ய சொல்லி மிரட்டுவது, ஆபச மாக பேசுவது, கை, கால் களை அமுக்க சொல்வது என தொடர்ந்து இன்னல் கொடுத்து வருகிறார். இது குறித்து அந்த அதிகாரியின் அத்துமீறல் பேச்சு பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி யுள்ளனர். இது காரைக்கா லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆட்டோவில் சென்ற ஐ.டி. பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    • அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவின் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சுப்பிரமணியன் தெருவை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகள் ரபீனா பாத்திமா (வயது24). இவர் மதுரை இலந்தைகுளத்தில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து மேலூர் பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோவில் சீருடை அணியாமல் மேலும் 2 பேர் பயணம் செய்தனர்.

    சிறிதுதூரம் சென்றதும் அவர்கள், ரபீனாபாத்திமா விடம் இருந்த 2 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, அவரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ரபீனாபாத்திமா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? என்று போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கவிதா (43) சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், வீட்டில் வைத்திருந்த 5¾பவுன் நகைகளை திருடி சென்று விட்டார்.

    இதுகுறித்து கவிதா கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். மேலூர் வெள்ளாளபட்டியைச் சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தனது புகாரில் தெரிவித்திருந் தார். அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவின் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிளஸ்சி (வயது 33) தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்
    • மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு அருகே தமிழக கேரளா எல்லை பகுதியான பழைய உச்சக்கடை பகுதியை சேர்ந்தவர் சிபு. இவரது மனைவி பிளஸ்சி (வயது 33) தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் கொல்லங்கோடு நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை வீடு கொல்லங்கோடு ஒழுவாறத்தலை பகுதியில் உள்ளது.இவர் நேற்று மாலை வேலை முடித்துவிட்டு தந்தை வீட்டிற்கு செல்வதற்காக கச்சேரிநடை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 7 பவன் தாலி செயினை பறித்தனர். உடனே அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இது குறித்து பிளஸ்சி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகிறார்கள்.

    • நிதி நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கலங்காபேரி புதூரை சேர்ந்தவர் பாண்டி.இவரது மனைவி ராமேஸ்வரி(வயது 25) இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதே நிதி நிறுவனத்தில் சங்கர பாண்டியா புரத்தைச் சேர்ந்த ரவி (35) என்பவரும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனத்தில் இருந்து தனிநபருக்கு ரூ.46ஆயிரம் கடன் வழங்கியது போல் ஆவணம் தயார் செய்து பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ராமேஸ்வரி மற்றும் ரவிக்கு இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரவி, ராமேஸ்வரியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர் பொன் குமார் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இதுபற்றி அறிந்த ராமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவி மற்றும் ராமேஸ்வரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நிதி நிறுவனத்தில் இருந்து முறைகேடு செய்த பணத்தை செலுத்தி விட வேண்டும் என்றும் ,ரவி அனுப்பிய ஆபாச படத்தை அழித்துவிட வேண்டும் என்றும் உறுதி வாங்கினர்.

    இதைத் தொடர்ந்து சம்சிகாபுரம் பகுதியில் உறவினருடன் சென்ற ரமேஸ்வரியை, ரவி வழிமறித்து ரூ.46 ஆயிரம் தர முடியாது என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் .

    இது குறித்து ராமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தா.ர் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை தேடி வருகின்றனர்.

    • ஜோஸ்வின் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டாரா?

    கடலூர்:

    கடலூர் சாவடியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ஜோஸ்வின் (வயது 42). இவர் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயக்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஜோஸ்வின் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஜோஸ்வினுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக விடுமுறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 18-ந் தேதி முதல் மீண்டும் மருத்துவ விடுப்பு நீடிக்க வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள் விடுப்பு தரவில்லை என கூறப்படு கிறது. இதன் காரணமாக ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஆஸ்பத்திரி பெண் ஊழியர் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள மறவர் பெருங்குடியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது சகோதரி ராதா (வயது 21). இவர் மதுரையில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று பணிக்கு சென்ற ராதா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அருண்குமார் விசாரித்தபோது ராதா, அவரது தோழியான கம்பிக்குடியை சேர்ந்த வைத்தீஸ்வரி வீட்டில் இருந்ததாக தெரிந்தது. இதையடுத்து அருண்குமார் அங்கு சென்று விசாரித்தார். ஆனால் ராதா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில், தனது சகோதரி மாயம் தொடர்பாக வைத்தீஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக அருண்குமார் புகார் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 27), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    திருத்தங்கல் அருகே உள்ள வடமலாபுரம் அண்ணா காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). தனியார் வங்கியில் பணம் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சதீஷ்குமார் பின்னர் வீடு திரும்பாமல் மாயமானார். அவரது மனைவி சகுந்தலா தேவி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மனைவி முனியம்மாள் (31). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் முனியம்மாள் சில நாட்களுக்கு முன்பு விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டில் சென்று தங்கினார். சம்பவத்தன்று அங்கிருந்த முனியம்மாள் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர் வைத்திருந்த கைப்பையில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன.

    மதுரை

    மதுரை அய்யர் பங்களா ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது66). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். அதில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன. இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    உதவி கமிஷனர் ஜெகன்நாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது கேசவசாமி தெருவை சேர்ந்த துரைபாண்டி மகன் விஜி என்ற சுப்பு (24), அவரது நண்பர் வேலூர் மாவட்டம் கோணவட்டத்தை சேர்ந்த முதார்சீர் (38) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அகில இந்திய பி.எஸ்.என்.எல். உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம்
    • லூதியானா பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    அகில இந்திய பி.எஸ்.என்.எல். உழைக்கும் பெண்கள் 2-வது தேசிய மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது. மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு தேசிய செயலாளர் ஏ.ஆர். சிந்து தலைமை வகித்து மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அபிமன்யு, ஒருங்கிணைப்பாளர் இந்திரா, உதவிப் பொதுச் செயலாளர்செல்லப்பா, டெல்லி பி.எஸ்.என்.எல். கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகள் அனிதா ஜோஹ்ரி, ஜெகதீஷ் பிரசாத் உள்படபலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    பி.எஸ்.என்.எல் புத்தாக்கம், 4 ஜி, 5 ஜி சேவை வழங்க அனுமதித்தல், ஊதிய உயர்வு, அனைத்து அம்சங்களிலும் பாலின சமத்துவத்தை அமுல் படுத்தும் வகையிலான பாலினக்கொள்கை வகுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களை நிறுத்து வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    லூதியானா பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்புகார் குழுக்களை சுதந்திரமாகவும் பயனுள்ள வகையிலும் செயல்படுத்துதல், புகார்களின் மீது உட னடி நடவடிக்கை, பணி யிடங்களில் பெண் ஊழி யர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, சிறப்பு மருத்துவ விடுப்பு, ஒப்பந்த பெண் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு, பணி யிடங்களில் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை வலி யுத்துவது உள்பட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டின் இறுதியில் அகில இந்திய அளவில் புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

    மாநாட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பாபு, ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, பா.ராஜு, பெர்லின் ஆலிஸ்மேரி, சுயம்புலிங்கம், ஜார்ஜ், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகை பறித்த கொள்ளையரை அரசு பெண் ஊழியர் துரத்தி சென்றார்.
    • அப்போது தவறி விழுந்து அவர் சுயநினைவை இழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அடுத்த கவர்பனை பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவர் சென்னையில் ஜி.எஸ்.டி. வரித்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தேவி (வயது 32). இவர் ஊராட்சியில் களப்பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர், சம்பவத்தன்று லத்துவாடி சோதனை சாவடி பகுதியில் மொபட்டில் சென்று கொண்டி ருந்தபோது, பின்னல் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், அக்கா என கூப்பிட்டனர். இதனால் தேவி, தனது மொபட்டை நிறுத்தியபோது, அருகில் வந்த வாலிபர்கள் , தேவி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்தனர். சுதாரித்துக்கொண்ட தேவி தாலியை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.

    ஆனால், அந்த வாலிபர்கள் இழுத்ததில் 3 பவுன் செயின் மட்டும் துண்டானது. அந்த செயினுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதை கண்ட தேவி, தனது மொபட்டில், அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார்.

    இதை கண்ட அக்கம், பக்கத்தினர், அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சையில் குணமடைந்த தேவி, தனக்கு நடந்த சம்பவம் குறித்து வீரகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுதார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×