search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை
    X

    காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை

    • ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்.
    • காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேருநகர் அருகே, வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏராள மான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில், வட்டார வளர்ச்சி அளவிலான கூட்ட மைப்பு பெண் ஊழி யர்களிடம், அவர்களின் மேல் அதிகாரியாக, வட்டார வளர்ச்சி அலு வலக இணைப்பு அதிகாரி மகேஸ் குமார் (வயது36) வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு கீழ் வேலை செய்யும் பெண் ஊழியரு குளை, தனது வீட்டு வேலை களை செய்யச் சொல்வது, ஆபச மாக பேசுவது போன்ற வேலைகளை செய்யச் சொல்வதாக கூறப்படு கிறது. மேலும், முடியாது என மறுக்கும் பெண்கள் குறித்து, மேல் அதிகாரி களிடம் தவறான புகார் களை அளித்து, வேலையை விட்டு நீக்கிவிடு வேன் என மிரட்டியதாக கூறப்படு கிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல், 40 வயது திருமணம் ஆன பெண் ஊழியர் ஒருவரை சொந்த வேலைகளை செய்ய சொன்னபோது, அவர் முடியாது என மறுத்தால், அந்த பெண் ஊழியரை கடுமையாக பேசி, உன்னை உடனே வேலையை விட்டு நீக்கு கிறேன் என மிரட்டியதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அப்பெண் ஊழியர், அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த ஊழியர்கள், அவரை காரைக் கால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    மேலும் காரைக்கால் மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், காரைக்கால் வட்டார வளர்ச்சி அவலு வக இணைப்பு அதிகாரி மகேஸ்குமார், பெண் ஊழி யர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, சொந்தவேலை செய்ய சொல்லி மிரட்டுவது, ஆபச மாக பேசுவது, கை, கால் களை அமுக்க சொல்வது என தொடர்ந்து இன்னல் கொடுத்து வருகிறார். இது குறித்து அந்த அதிகாரியின் அத்துமீறல் பேச்சு பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி யுள்ளனர். இது காரைக்கா லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×