search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணியிடங்களில் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்
    X

    அகில இந்திய பி.எஸ்.என்.எல். உழைக்கும் பெண்கள் மாநாடு நடந்தபோது எடுத்த படம்

    பணியிடங்களில் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்

    • அகில இந்திய பி.எஸ்.என்.எல். உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம்
    • லூதியானா பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    அகில இந்திய பி.எஸ்.என்.எல். உழைக்கும் பெண்கள் 2-வது தேசிய மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது. மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு தேசிய செயலாளர் ஏ.ஆர். சிந்து தலைமை வகித்து மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அபிமன்யு, ஒருங்கிணைப்பாளர் இந்திரா, உதவிப் பொதுச் செயலாளர்செல்லப்பா, டெல்லி பி.எஸ்.என்.எல். கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகள் அனிதா ஜோஹ்ரி, ஜெகதீஷ் பிரசாத் உள்படபலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    பி.எஸ்.என்.எல் புத்தாக்கம், 4 ஜி, 5 ஜி சேவை வழங்க அனுமதித்தல், ஊதிய உயர்வு, அனைத்து அம்சங்களிலும் பாலின சமத்துவத்தை அமுல் படுத்தும் வகையிலான பாலினக்கொள்கை வகுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களை நிறுத்து வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    லூதியானா பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்புகார் குழுக்களை சுதந்திரமாகவும் பயனுள்ள வகையிலும் செயல்படுத்துதல், புகார்களின் மீது உட னடி நடவடிக்கை, பணி யிடங்களில் பெண் ஊழி யர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, சிறப்பு மருத்துவ விடுப்பு, ஒப்பந்த பெண் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு, பணி யிடங்களில் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை வலி யுத்துவது உள்பட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டின் இறுதியில் அகில இந்திய அளவில் புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

    மாநாட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பாபு, ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, பா.ராஜு, பெர்லின் ஆலிஸ்மேரி, சுயம்புலிங்கம், ஜார்ஜ், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×