search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உல்லாசம்"

    • சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
    • தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம்களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி தீபா (வயது 42) மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    பெரம்பலூர் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை. மேலும் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காரும் மாயமானது. அதைத்தொடர்ந்து மனைவியை காணவில்லை என தீபாவின் கணவர் பாலமுருகன் வி. களத்தூர் போலீஸ் நிலையத்திலும், கணவரை காணவில்லை என வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவை பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் மாயமான ஆசிரியை தீபாவின் கார் 2 நாட்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் போலீசார் விரைந்து சென்று காரைத்திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் ரத்தக் கறை படிந்த சுத்தியல், தீபா அணிந்திருந்த தாலி, கொலுசு, அவரின் ஏ.டி.எம். கார்டு வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இதனிடையே ஆசிரியர் வெங்கடேசன் செல்போனில் இருந்து பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபா கதி என்ன என்பது குறித்து தனிப்படை கோவை, தேனி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளது.

    தனிப்படை போலீசார் விசாரணையில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தீபா என்ன ஆனார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இதனிடையே கோவை, மதுரை, தேனி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்க.ளில் வெங்கடேசன் பணம் எடுத்த போது அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

    வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசுபவர்களின் செல்போன் எண்களை விசாரிக்கும் போது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரிய வந்தது.

    தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம் களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    மாயமான ஆசிரியர் வெங்கடேசன், தனது இருப்பிடத்தை போலீசர் அறிந்துவிடுவார்கள் என அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றி மாற்றி வருகிறார். இதனால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தீபாவை வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணையில் பரபரப்புதகவல்கள்
    • தமிழகம்-கேரளாவில் வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு வெட்டுக்காட்டுவிளையைச் சேர்ந்தவர் மெர்லின் ராஜ் (வயது 39). முன்னாள் ராணுவ வீரர். இவர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக, 2016-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

    அதன்பிறகு மெர்லின் ராஜ், தனது வாழ்க்கை செலவுகளுக்காக திருட்டு மற்றும் வழிப்பறி சம்ப வங்களில் ஈடுபட்டுள்ளார். 2019-ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் ெரயில்வே ஸ்டேஷனில் முதல்முறையாக நகை திருட்டில் ஈடுபட்டார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த் தாண்டம், திருவட்டார், ஆசாரிப்பள்ளம், நேசமணி நகர், மண்டைக்காடு, இரணியல், கொல்லங்கோடு பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் இறங்கினார்.

    இதனால் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொலை, மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கிலும் சிக்கினார். மேலும் 13 அடிதடி வழக்குகளும் அவர் மீது உள்ளன. இதனை தொடர்ந்து மெர்லின் ராஜை, தமிழகம் மற்றும் கேரள போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதற்கிடையில் அவருடன் மேக்காமண்டபம் பூந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவனும் கூட்டாளியாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. ஒரு சில இடங்களில் போலீசாரின் வாகன சோதனையின் போது சிக்கிய போதும், ராணுவத்தில் பணியாற்றிய அடையாள அட்டையை காண்பித்து மெர்லின் ராஜ் தப்பி சென்றுள்ளார்.

    இந்த நிலையில் மார்த் தாண்டம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் தலைமையில் போலீசார் திக்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் மெர்லின் ராஜ், மணிகண்டன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் தேடப்படும் கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இருந்து 20 பவுன் நகைகள், கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, மெர்லின்ராஜ் போலீ சாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு வருமானம் எதுவும் இல்லை. இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் வழிப்பறி கொள்ளையில் இறங்கினேன். இந்த வருமானம் மூலம் தேவைக்கு ஏற்ப மதுபானங்கள் தாராள மாக வாங்கினேன்.

    கேரள மாநிலம் விழிஞ்சத்தில் போலீசார் வாகன சோதனையில் குடிபோதையில் இருந்த நான் சிக்கினேன். எனது மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இந்த மோட்டார் சைக்கிள், விழிஞ்சம் போலீஸ் நிலைய வளா கத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை அதிகாலை வேளை யில் சென்று திருடி வந்தேன். இது தொடர்பாக விழிஞ்ஞம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.

    கோவில்பட்டியில் குடிபோதையில் சென்ற போது வாகன சோதனையில் சிக்கினேன். அப்போது ராணுவ அடையாள அட்டை காண்பித்து தப் பித்து விட்டேன். கொள்ளை யடித்த நகை-பணத்தை வைத்து ஏராளமான பெண்கள் மற்றும் துணை நடிகைகளு டன் குற்றாலம் மற்றும் பல்வேறு இடங்க ளுக்கு சென்று உல்லாசம் அனுபவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நட்பு காதலாக மாறியது. 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய சதீஷ்குமார்.
    • உல்லாசமாக இருந்தது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). சேல்ஸ்மேன் வேலை செய்து வருகிறார். இவர் புதுவையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்தார். அப்போது அதே கடையில் பணியாற்றிய புதுவையை சேர்ந்த 21 வயது பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி, நட்பு காதலாக மாறியது. 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய சதீஷ்குமார், அவருடன் தனிமையில் உல்லாசமாக பலமுறை இருந்துள்ளார். சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை பார்ப்பதையும், பேசுவதையும் சதீஷ்குமார் நிறுத்திக் கொண்டார்.

    அதிர்ச்சியடைந்த இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ள சதீஷ்குமாரிடம் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து துணிக்கடைக்கு வேலைக்கு செல்வதையே சதீஷ்குமார் நிறுத்திவிட்டார். மேலும், அதிர்ச்சியடைந்த இளம்பெண், சதீஷ்குமாரை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார். தனக்கு நடந்த விஷயங்களை புகார் மனுவாக போலீசாரிடம் கொடுத்தார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றிய சதீஷ்குமாருடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

    புகாரைப் பெற்ற போலீசார், மரக்காணம் சதீஷ்குமாரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர் புகார் கொடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. மேலும், அவருடன் பழகவே இல்லை என்றும் கூறினார். இதையடுத்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுடன், சதீஷ்குமார் பலமுறை உல்லாசமாக இருந்தது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.
    • கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    வீரேநகர்:

    நெதர்லாந்த் வீரேநகரில் புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. காதலர்களின் சொர்க்கபுரியாக திகழும் இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஏராளமான காதல் ஜோடிகள் இங்கு திரளுவார்கள்.

    காதலர்கள் தனிமையில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுவது உண்டு. சில காதலர்கள் மெய்மறந்து அத்துமீறுவதும் உண்டு. பக்கத்தில் யார்? இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர்கள் நிர்வாணமாக உல்லாசத்திலும் ஈடுபடுவார்கள், கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிறு குன்றுகளை கூட காதலர்கள் விடுவது இல்லை. அங்கும் அவர்கள் ஜாலியாக இருப்பார்கள்.

    இதனால் அந்த கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.

    கடற்கரையை படுக்கை அறைகாக மாற்றும் இளசுகளின் இந்த அத்துமீறல் குறித்து வீரேநகர் மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தது. இதையடுத்து வீரேநகர் கடற்கரையில் காதல் ஜோடியினர் உல்லாசமாக இருக்க தற்போது நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி யாராவது கடற்கரையில் உல்லாசமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது.

    இந்த தடையால் கடற்கரையில் நிர்வாணமாக சன்பாத் எடுக்க வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் நாங்கள் உல்லாசமாக இருப்பதில்லை என்றும் உடல் ஆரோக்கியத்துக்காக சன்பாத் எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • காதலிகளுக்கு விதவிதமான நகைகளும், ஊட்டியில் நிலமும் வாங்கி கொடுத்து அசத்தினார்
    • யாரையும் கூட்டு சேர்ப்பதில்லை, தனியாக சென்று நோட்டமிட்டு கொள்ளை

    நாகர்கோவில் :

    தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை அடிப்பது போன்ற சம்பவங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பார்கள்.

    இதில் கொள்ளை அல்லது நகை பறிப்பில் ஈடுபடும் பெரும்பாலான குற்றவாளிகள் போலீசாரின் கைகளில் சிக்கி விடுவார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தும் போது, திருடியதற்கான காரணம் குறித்து அவர்கள் கூறும்தகவல்கள் போலீசாரை சிலநேரம் வியப்பில் ஆழ்த்தும்.

    பல நேரங்களில் அவர்கள் கூறும் காரணத்தை கேட்டு, இதற்காகவா? திருடினே என்று கேட்டு அவனை உண்டு, இல்லையென ஆக்கிவிடுவதுமுண்டு. அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று குமரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்தது.

    நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் மகேஷ் கார்த்திக் என்பவர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 பவுன் நகை கொள்ளை போனது.

    வடசேரி போலீசார் இந்த நகை திருட்டு பற்றி விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும் ஒரு நபரின் உருவம் ஒன்றை கைப்பற்றினர்.

    அந்த உருவ படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஆனந்த் (வயது 24) என்ற வாலிபர் பிடிப்பட்டார். பார்க்க டிப்-டாப் உடையுடன் காட்சி அளித்த அந்த வாலிபர் மீது முதலில் போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை.

    பின்னர் அவரிடம் விசாரித்த போது அவரது பேச்சும், நடை, உைட, பாவனையும் சந்தேகத்தை ஏற்படுத்த அவரை தனி இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் மகேஷ் கார்த்திக் வீட்டில் திருடியது, ஆனந்த் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், திருடியதற்கான காரணத்தை கேட்டனர். அதோடு எப்படி திருடினாய்? திருடிய நகையை என்ன செய்தாய்? கூட்டாளிகள் யார்? என்றும் போலீசார் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர்.

    அனைத்து கேள்விகளுக்கும் எந்த சலனமும் இன்றி ஆனந்த் சிரித்து கொண்டே பதில் அளித்தார். அதன்விபரம்:-

    குமரி மாவட்டத்தில் தான் திருட்டு தொழிலை தொடங்கினேன். இதற்காக யாருடனும் கூட்டு சேரவில்லை. முதலில் ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று அங்கு பூட்டிய வீடுகளை நோட்டமிடுவேன்.

    அந்த வீடுகளில் யார் வசிக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வேன். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளையும் பார்த்து கொள்வேன். பின்னர் அந்த வீட்டுக்கு இரவு நேரத்தில் கையுறை மற்றும் காலில் ஷூ அணிந்து செல்வேன். அங்கு கிடைக்கும் பணம் மற்றும் நகையை கொள்ளை அடித்துவிட்டு கம்பி நீட்டிவிடுவேன்.

    கொள்ளை அடித்த பணத்தை பெண்களுடன் உல்லாசமாக இருக்க செலவு செய்வேன். ஒரு பெண்ணிடம் மட்டும் இல்லை பல பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது.

    குறிப்பாக பணத்தேவையில் இருக்கும் பெண்களிடம் மட்டுமே தொடர்பு கொள்வேன். முதலில் அவர்களுக்கு முதலில் தேவையான பணத்தை கொடுப்பேன். அதன்பின்பு என் ஆசையை தெரிவிப்பேன். பணம் வாங்கியதால் அவர்களும் நான் கேட்பதை தருவார்கள். அப்போது அவர்களுக்கு நகைகளையும் வாங்கி கொடுப்பேன். இதில் அவர்கள் என்னிடம் மயங்கி விடுவார்கள்.

    இப்படி குமரி மாவட்டத்தில் மட்டும் 6 பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. இவர்களுக்கு திருடிய பணத்தில் விதவிதமான நகைகள் வாங்கி கொடுத்துள்ளேன்.

    பெண்களை சந்திக்க செல்வதற்கு ஒருபோதும் கூட்டு சேர்க்க மாட்டேன். அவ்வாறு சேர்த்தால் மாட்டி கொள்வோம். இதனால் நான் இந்த இடங்களுக்கு தனியாகத்தான் செல்வேன்.

    அவர்களிடம் நான் என்ன செய்கிறேன், எப்படி நகை வாங்கி வந்தேன் என்பது பற்றி கூறமாட்டேன், என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவரது அனுபவங்கள் போலீசாருக்கு புதிதாக இருந்தாலும் அவர் திருடிய பணத்தில் ஊட்டியில் நிலம் வாங்கியிருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆனந்த் எங்கெங்கு திருடியுள்ளார்? மொத்தம் எத்தனை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு உள்ளது? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • 45 பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல்

    கன்னியாகுமரி:

    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்த லத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தையும் திருடி சென்றனர்.

    இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் தனிப்படை போலீசார் கொள்ளையரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ஆலயத்தின் வடக்கு ஜன்னல் வழியாக பர்தா அணிந்த ஒரு பெண் சர்ச்சுக்குள் புகும் காட்சி பதிவாகியிருந்தது.

    இந்தநிலையில் குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் நேற்று குளச்சல் வெட்டுமடை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கருங்கல் அருகே கப்பியறை பகுதியை சேர்ந்த சாபுமோன் (வயது 37) என்பதும், மோட்டார் சைக்கிளில் வந்த பெண் நூர்ஜகான் (43) என்பதும் தெரியவந்தது. தற்போது சாபுமோன் நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் சாபுமோன் வள்ளியூரில் 8 வருடங்களாக கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இந்த பண்ணையில் நூர்ஜகான் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பண்ணையருகே பிள்ளைகளுடன் தனி வீட்டில் வசித்தார். சாபுமோனுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இவர் மனைவியுடன் பண்ணையருகே வேறு தனி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நூர்ஜகான் - சாபுமோன் இடையே கடந்த சில வருடங்களாக தகாத உறவு உள்ளது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், சாபுமோன் கடந்த பிப்ரவரி மாதம் குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலம் மற்றும் பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதும் தெரியவந்தது.

    இதுபோல் இரணியல் போலீஸ் சரகத்தில் 7 திருட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 16 சர்ச், வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து குளச்சல் போலீசார் சாபுமோன் மற்றும் நூர்ஜகான் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் சாபுமோன் கள்ளக்காதலியுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    • இளம் பெண்ணை கடத்தி உல்லாசமாக இருந்த கிராம நிர்வாக அலுவலரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    • பட்டா வாங்க வந்தபோது இளையராஜாவிற்கும் அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் பேசிக் கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் சேடப்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக இளையராஜா பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய அலுவலகத்திற்கு பட்டா பெயர் மாறுதல் கேட்டு திருமணமான இளம்பெண் வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் பட்டா வாங்க வந்தபோது இளையராஜாவிற்கும் அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் இளம்பெண்ணை இளையராஜா படம் எடுத்து உள்ளார்.

    அந்த படத்தை காட்டி தன்னிடம் உல்லாசமாக இருக்க இளையராஜா இளம்பெண்ணை மிரட்டி உள்ளார். ஆனால் இளம்பெண் இதற்கு ஒத்து வராத நிலையில் மகாபலிபுரம் உல்லாச விடுதிக்கு அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பலமுறை அவரை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் இளம் பெண்ணை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிய நிலையில் அவர் மகாபலிபுரம் விடுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையெடுத்து காவல் துறையில் புகார் அளித்து இளம்பெண்ணை மீட்டு வந்தனர். அந்த இளம்பெண் தன்னை இளையராஜா பலமுறை பலாத்காரம் செய்ததாக கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து தற்போது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை தேடிவருகின்றனர்.

    • தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், கல்லூரி மாணவரான தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து இளம்பெண்ணின் கணவரை தாக்கினார்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு தனது தாயுடன் சென்றார். பின்னர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் சதீஸ்குமார் (47) என்பவர் இளம்பெண்ணை உல்லாசமாக இருக்கலாம் வா என அழைத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றார்.

    அங்கு நின்று கொண்டு இருந்த சதீஸ்குமாரிடம் தனது மனைவியை உல்லாசத்துக்கு அழைத்து குறித்து தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், கல்லூரி மாணவரான தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து இளம்பெண்ணின் கணவரை தாக்கினார். இதனை பார்த்த இளம்பெண் தடுக்க சென்றார். அவரையும் 2 பேரும் சேர்ந்து தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணின் கணவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து இளம்பெண் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை உல்லாசத்துக்கும் அழைத்த சதீஸ்குமாரை கைதுசெய்தனர்.

    அவர் மீது பெண்கள் வன்ெகாடுமை தடுப்பு சட்டம், தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர் பிரவீன்குமாரை தேடி வருகிறார்கள். 

    ×