search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public complaint"

    • தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    • அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமாராபுரம் கிராமத்தில், காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சுமார் 150 மீட்டர் சாலை முற்றிலும் பெயர்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் தூத்துக்குடி, விளாத்திகுளம் செல்வதற்கு பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்வதாகவும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியாத மோசமான சூழ்நிலை இருப்பதால் தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி, காட்டாற்று வெள்ளத்தினால் சாலை அடித்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் ஆகியும் தற்போது வரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    எனவே சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அவரச மருத்துவத் தேவைக்குக்கூட தூத்துக்குடி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் முத்துக்குமாரபுரம் மக்களின் நலன் கருதி உடனடியாக சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் அதிகாரிகள் உறுதி

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர்குப்பம் - சோலூர் இடையே அமைந்துள்ள 2 தடுப்பணைகளில் மண்ணை கொட்டி, மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, நீர்வழிப்பாதையை மூடி, அப்பகுதி வழியாக கல்குவாரிக்கு வாகனங்கள் செல்வதற்காக மண் சாலை அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் மண்சாலை அமைத்த தனிநபரை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாசில்தார் குமாரி நீர்வழிப்பாதை யையும், 2 தடுப்பணை களையும் மண் போட்டு மூடி சாலை அமைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தடுப்பணைகளில் கொட்ட ப்பட்ட மண்ணையும், நீர்வழி ப்பாதையை மூடி சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் அகற்ற உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா்க்கும் கூட்ட முகாம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூா் மாநகராட்சி 16 -வது வாா்டு மாமன்ற உறுப்பினா் தமிழ்செல்வி கனகராஜ் தலைமையில் சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -திருப்பூா் மாநகராட்சி 16 வது வாா்டு சொா்ணபுரி காா்டன் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீா் எடுக்கும்போது சாயக்கழிவு கலந்து முற்றிலும் மாசுபட்ட தண்ணீா் வருகிறது.

    இதைப் பயன்படுத்தும்போது தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.ஆககே எங்களது பகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.
    • கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    வீரேநகர்:

    நெதர்லாந்த் வீரேநகரில் புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. காதலர்களின் சொர்க்கபுரியாக திகழும் இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஏராளமான காதல் ஜோடிகள் இங்கு திரளுவார்கள்.

    காதலர்கள் தனிமையில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுவது உண்டு. சில காதலர்கள் மெய்மறந்து அத்துமீறுவதும் உண்டு. பக்கத்தில் யார்? இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர்கள் நிர்வாணமாக உல்லாசத்திலும் ஈடுபடுவார்கள், கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிறு குன்றுகளை கூட காதலர்கள் விடுவது இல்லை. அங்கும் அவர்கள் ஜாலியாக இருப்பார்கள்.

    இதனால் அந்த கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.

    கடற்கரையை படுக்கை அறைகாக மாற்றும் இளசுகளின் இந்த அத்துமீறல் குறித்து வீரேநகர் மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தது. இதையடுத்து வீரேநகர் கடற்கரையில் காதல் ஜோடியினர் உல்லாசமாக இருக்க தற்போது நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி யாராவது கடற்கரையில் உல்லாசமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது.

    இந்த தடையால் கடற்கரையில் நிர்வாணமாக சன்பாத் எடுக்க வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் நாங்கள் உல்லாசமாக இருப்பதில்லை என்றும் உடல் ஆரோக்கியத்துக்காக சன்பாத் எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • சுமார் 120 ஆண்டுகளுக்கும் மேலாக பெருமாள்குளம் அருகில் உள்ள கழுத்தறுத்தான் பொத்தை அருகில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம்.
    • நாராயணன் தலைமையில் வந்த 20-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நாங்குநேரி வட்டம் கல்லடி சிதம்பரபுரம் அருகே உள்ள வேதநாயகபுரத்தை சேர்ந்த ஆதிதிராவிட சமுதாய பொதுமக்கள் ஊர் தலைவர் நாராயணன் தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சுடுகாட்டு நிலம்

    எங்கள் கிராமத்தில் ஆதி திராவிட சமுதாயத்தை சேர்ந்த சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சுமார் 120 ஆண்டுகளுக்கும் மேலாக பெருமாள்குளம் அருகில் உள்ள கழுத்தறுத்தான் பொத்தை அருகில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம்.

    தற்போது இந்த நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே அந்த செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.

    தர்ணா போராட்டம்

    தொடர்ந்து நாராயணன் தலைமையில் வந்த 20-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • 2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக பைப்புகளை உடைத்து விட்டனர்.
    • சங்கர் நகர் மதுரை ரோடு இ.பி. அலுவலகம் முதல் கணபதி காலனி வரை கடந்த 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    பொதுமக்கள் மனு

    இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில் துணை மேயர் ராஜு, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தச்சநல்லூர் மண்டலம் 2-வது வார்டை சேர்ந்த சடாமுனி என்பவர் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    குடிநீர் குழாய்கள்

    2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு அனைத்து தெருக்களிலும் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு பாதாள சாக்கடை பணிக்காக அந்த பைப்புகளை உடைத்து விட்டனர்.

    தற்போது சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது. அந்த பணியும் இப்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது. தெரு விளக்குகளும் சரியாக எரியவில்லை.

    சங்கர் நகர் மதுரை ரோடு இ.பி. அலுவலகம் முதல் கணபதி காலனி வரை கடந்த 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்துள்ளார்.எந்த நடவடிக்கையும் இல்லை என கூறி இருந்தார்.

    குடிநீர் பிரச்சனை

    மேலப்பாளையம் மண்டலம் 40-வது வார்டுக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நல சங்கத்தினர் தலைவர் கந்தையா தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இப்பொழுது மக்கள் அனைவரும் மாநகராட்சி குடிநீரை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். தற்போது வரும் குடிநீர் இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே தினமும் 1½ மணி நேரம் எங்கள் பகுதியில் தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
    • குற்ற சம்பவங்கள் தலை தூக்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

    இங்கு போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக சமூக குற்ற சம்பவங்களுக்கு எதிராக போலீசாரின் பணிகள் மக்கள் மத்தியில் வெகுவான பாராட்டுகளை பெற்று தந்தது.

    இந்நிலையில் சுமார் 6 மாத காலமாக புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

    சம்பவங்கள் தலை தூக்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பொதுமக்களின் புகார் குறித்து நடவடிக்கை எடுத்து புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆண்டுகளுக்கு ஒருமுறை கியாஸ் சிலிண்டர் பரிசோதிக்கப்படுகிறது.
    • சிலிண்டர் சப்ளை செய்யும் ஏஜென்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    உடுமலை :

    இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், என வர்த்தக நிறுவனங்களுக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்து வருகின்றன.அவ்வகையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் இணைப்புகள் சரியாக உள்ளதா என, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படுகிறது.

    இப்பணியை, சிலிண்டர் சப்ளை செய்யும் ஏஜென்சிகள் மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏஜென்சி ஊழியர்கள், நுகர்வோர்களின் வீடுகளுக்குச்சென்று சிலிண்டர்களில் உள்ள வாஷர், ரெகுலேட்டர், ரப்பர் குழாய் இணைப்பை பரிசோதிக்கின்றனர். அப்போது ஏதேனும் பிரச்னை கண்டறியப்பட்டால் அவற்றை சீரமைக்கின்றனர்.சிலிண்டர் அகற்றும் போதும் பொருத்தும் போதும் கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, சரியான முறையில் ரெகுலேட்டரை எவ்வாறு பொருத்துவது, அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நுகர்வோரிடம் விளக்கிக்கூறுகின்றனர்.அவ்வகையில், உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பரிசோதனை, உபகரணம் மாற்றுதல் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து நுகர்வோர்கள் கூறியதாவது:-பரிசோதனைக்கு, ஜிஎஸ்டி சேர்த்து 236 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீட்டுக்கு வரும் ஊழியர்கள் சிலிண்டர் இணைப்பு முறையாக உள்ளதா, ரப்பர் குழாய்கள் சரியாக உள்ளதா என முறையாக ஆய்வு நடத்துவதும் கிடையாது.சிலர் ரப்பர் குழாய் சேதமடைந்துள்ளதாகக்கூறி மாற்ற முற்படுகின்றனர். இதனால் பெண்களிடையே பீதி கிளம்புவதால் அதனை மாற்ற முற்படுகின்றனர்.அதற்கு 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்துள்ளது. ஊழியர்கள் பெரும்பாலும் பணத்தை மட்டும் வாங்கிச்செல்ல முற்படுகின்றனர். எனவே நுகர்வோர் விருப்பத்தின்பேரில் மட்டுமே ஏஜென்சிகள், கியாஸ் சிலிண்டரை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மாறாக கட்டாயப்படுத்தக் கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் உதவி கமிஷனர் (நிர்வாகம்) வெங்கட்ராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • பாளை வேன் நிறுத்தம் அருகே உள்ள ஆலமரத்தில் வேர்கள் குடிநீர் குழாயை அடைத்து விடுவதால் தண்ணீர் விநியோகம் அடிக்கடி தடை படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் உதவி கமிஷனர் (நிர்வாகம்) ெவங்கட்ராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.

    அப்போது 32-வது வார்டுக்கு உட்பட்ட பாளை நந்தனார்தெரு பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாளை வேன் நிறுத்தம் அருகே உள்ள ஆலமரத்தில் வேர்கள் குடிநீர் குழாயை அடைத்து விடுவதால் தண்ணீர் விநியோகம் அடிக்கடி தடை படுகிறது. எனவே தனி பைப்லைன் அமைத்து சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சுப்பிரமணி தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    23-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் சன்னதி தெருவில் ஏராளமான ஆலயங்கள், பள்ளிகள் உள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பைகளை ஆலயங்கள், பள்ளி அருகே கொட்டுகின்றனர். எனவே அப்பகுதி பொதுமக்களுக்கு சட்டரீதியாக அறிவுரைகள் வழங்க வேண்டும். அதை மீறுவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    ஓய்வுபெற்ற ராணுவவீரர்கள் சார்பில் ெகாடுக்கப்பட்ட மனுவில், கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஓய்வுபெற்ற ராணுவவீரர்களுக்கு வீட்டு தீர்வை, குடிநீர் வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நெல்லை மாநகராட்சியிலும் அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    தியாகராஜநகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கொடுத்த மனுவில், டி.வி.எஸ்.நகர், தாமிரபதி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்களில் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், விளம்பர போஸ்டர்கள் ஒட்டி விடுகின்றனர்.

    இதனால் அதில் எழுதப்பட்டிருக்கும் மின்வாரிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    • கிராம மக்கள் சிகிச்சை பெற பல்லடம் அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர்.
    • பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 800க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரத்திலுள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற பல்லடம் அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர். கிராமங்களில் போதிய மருத்துவ வசதி கிடைக்காததால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அந்த வகையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 800க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில்மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    அரசு மருத்துவமனையில் சுகாதார வளாகத்தை சுத்தம் செய்ய பணியாளர்கள் இல்லை என்றும், நோயாளிகளே சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறுவதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- சுகாதார வளாகத்தில் உள்ள குழாயில் தண்ணீர் வருவதில்லை. வெளியே இருந்து கொண்டு வந்துதான் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் பணியாளர்கள் இல்லாததால், சுகாதார வளாகம் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனாலேயே நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்களை நியமித்து சுகாதார வளாகத்தை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தேர்தல் தொடர்பான முறைகேடுகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்து பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வசதியாக 94441 23456 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. #ParliamentElection #EC
    சென்னை:

    தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குதல், தடையை மீறி சுவர் விளம்பரங்கள் செய்தல், கட்டுப்பாடுகள் மற்றும் நேரம் கடந்து பிரசாரம் செய்தல், அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துதல் போன்ற தேர்தல் விதிமுறை மீறல்கள், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.

    எனவே தேர்தல் தொடர்பான முறைகேடுகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்து பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வசதியாக 94441 23456 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த செல்போன் எண்ணில் பொதுமக்கள் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.  #ParliamentElection #EC
    சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மகளிர் காவல் நிலையம் இரவில் பூட்டி கிடப்பதால் புகார் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்டத்திற்கு துணை கண்காணிப்பாளருக்கு உட்பட்டு ஓமலூர் தாலுக்கா காவல் நிலையமாக ஓமலூர் காவல் நிலையம், காடையாம்பட்டி தாலுக்கா காவல் நிலையமாக தீவட்டிப்பட்டி காவல் நிலையம் மற்றும் தாரமங்கலம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, தொளசம்பட்டி, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், குப்பூர் பகுதியில் இயங்கி வரும் போக்குவரத்து காவல் நிலையம், காமலாபுரம் பகுதியில் இயங்கி வரும் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் என மொத்தம் ஒன்பது காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது.

    இதில் ஓமலூர் தாலுகா காவல் நிலையமாக ஓமலூர் காவல் நிலையம் செயல்பட்டு வருவதால் முக்கியமான காவல் நிலையமாக பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு பல்வேறு வழக்கு மற்றும் விபத்து காரணமாக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று எந்த நேரமும் காவல் நிலையத்திற்கு வந்து முறையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக ஓமலூர் காவல் நிலையம் இரவு பத்து மணிக்கு சாத்தப்படுவதால் பொதுமக்கள் அவசர தேவைக்காக புகார் கொடுக்க வந்து விட்டு சாத்தியுள்ள காவல் நிலையத்தை பார்த்து விட்டு திரும்பி சென்று விடுகின்றனர்.

    இதேபோன்று ஓமலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 காவல் நிலைய எல்லைப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த பகுதி பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரவு பத்து மணிக்குமேல் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையமும் மூடப்படுவதால் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றங்களை புகாராக கொடுக்க வரும் பொதுமக்கள் புகார் கொடுக்க முடியாமல் திரும்பி விடுகின்றனர்.

    இதன் காரணமாக ஓமலூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக இந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து 24 மணி நேரமும் பொதுமக்கள் பயன் கருதி காவல் நிலையங்களை மூடக்கூடாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
    ×