search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Outpost Police Station"

    • 2 போலீசாரை பணியில் அமர்த்தி முழுநேரமும் திறக்க வேண்டும்.
    • வின்சென்ட் ரோட்டில் புறக் காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.

    குனியமுத்தூர்,

    கோவை உக்கடம் போலீஸ் சரகத்தில் உள்ள கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புறக்காவல் திறக்கப்பட்டது. அங்கு 2 போலீசார் சுழற்சி முறையில் வேலை பார்த்து வந்தனர். இது வின்சென்ட் ரோடு, சின்ன பள்ளி வீதி, சாமியார் புதூர் வீதி , பி.கே.செட்டி வீதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது.

    ஆனால் இங்கு தற்போது புறக்காவல் நிலையம் முழுமையாக திறக்கப்படுவது இல்லை. கோட்டைமேடு பகுதியில் ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. எனவே அங்கு எந்த நேரமும் பொதுமக்களின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.ஆனால் வின்சென்ட் ரோட்டில் புறக் காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. ஜனநடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தால், அங்கு தகராறு செய்பவர்கள் தானாகவே ஒதுங்கி சென்று விடுவர். ஆனால் இங்கு தற்போது அதற்கு உரிய சூழ்நிலை இல்லை.

    வின்சென்ட் ரோடு புறக்காவல் நிலையத்திற்கு போலீசார் எப்போது வருவார்கள்? எப்போது போவார்கள்? என்று தெரியாது. திடீரென்று வந்து நிற்பார்கள். அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போய்விடுவர். இந்த நிலை மாற வேண்டும்.

    புற காவல் நிலையத்தில் 2 போலீசாரை பணியில் அமர்த்தி முழுநேரமும் திறக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

    வீண் பிரச்சனைகள், தேவையற்ற கூச்சல் குழப்பங்களை தவிர்க்க முடியும்.

    எனவே உக்கடம் வின்சென்ட் ரோட்டில் புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பட செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது

    பல்லடம் : 

    பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், திருட்டு, உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் திறப்பு விழா தாமதமாகி வந்தது.

    இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட புறக் காவல் நிலையத்தை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தில் பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத்தின் ரூ.3.5 லட்சம் பங்களிப்புடன், ரூ.12 லட்சம் மதிப்பில் 40 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் செயல்பாட்டை போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் பொத்தானை அமுக்கி துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    நகரப் பகுதிகளில் தன்னார்வலர்கள் மற்றும் தொழில் துறையினர் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு உள்ளது. இதற்கிடையே கிராமப்புறங்களில் பொதுமக்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டும்போது, வீடுகளுக்கு முன்பு உள்ள தெருக்களை கண்காணிக்கும்படி ஒரு கேமராவை அமைத்தால் அது பயனுள்ளதாக இருக்கும். மேலும் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அதிக வழக்குகள் வருவதால், அருகேயுள்ள சில கிராமங்களை பிரித்து புதிய போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உதவ வேண்டும். இதனால் குற்றச்செயல்களை போலீசாரால் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா, நகராட்சி தலைவர் கவிதாமணி, நகராட்சி பொறியாளர் சுகுமார், பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி, நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார், தமிழ் சங்க தலைவர் ராம் கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன்,குற்றப்பிரிவு சரஸ்வதி, மகளிர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராஜா, சுந்தரமூர்த்தி, மற்றும் போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
    • குற்ற சம்பவங்கள் தலை தூக்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

    இங்கு போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக சமூக குற்ற சம்பவங்களுக்கு எதிராக போலீசாரின் பணிகள் மக்கள் மத்தியில் வெகுவான பாராட்டுகளை பெற்று தந்தது.

    இந்நிலையில் சுமார் 6 மாத காலமாக புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

    சம்பவங்கள் தலை தூக்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பொதுமக்களின் புகார் குறித்து நடவடிக்கை எடுத்து புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×