search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கரை அருகே இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த ரியல் எஸ்டேட் புரோக்கர்
    X

    மதுக்கரை அருகே இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த ரியல் எஸ்டேட் புரோக்கர்

    • தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், கல்லூரி மாணவரான தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து இளம்பெண்ணின் கணவரை தாக்கினார்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு தனது தாயுடன் சென்றார். பின்னர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் சதீஸ்குமார் (47) என்பவர் இளம்பெண்ணை உல்லாசமாக இருக்கலாம் வா என அழைத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றார்.

    அங்கு நின்று கொண்டு இருந்த சதீஸ்குமாரிடம் தனது மனைவியை உல்லாசத்துக்கு அழைத்து குறித்து தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், கல்லூரி மாணவரான தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து இளம்பெண்ணின் கணவரை தாக்கினார். இதனை பார்த்த இளம்பெண் தடுக்க சென்றார். அவரையும் 2 பேரும் சேர்ந்து தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணின் கணவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து இளம்பெண் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை உல்லாசத்துக்கும் அழைத்த சதீஸ்குமாரை கைதுசெய்தனர்.

    அவர் மீது பெண்கள் வன்ெகாடுமை தடுப்பு சட்டம், தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர் பிரவீன்குமாரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×