என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்க்கை"

    • குடும்பத்தை ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள குடும்பமாக உருவாக்க வேண்டிய பெரும்பொறுப்பு, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு.
    • பிரதிபலன் கருதாமல் செய்கிற உதவியே ஆகச் சிறந்த உதவி.

    உபத்திரவங்கள் வந்து சேர்ந்தாலும் உதவுவதற்கு எப்போதும் தயாராக இருக்கின்ற அன்பின் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    ஒவ்வொரு மனிதனின் உயிர் வாழ்க்கையும் சக மனிதனோடு ஒத்துப் போவதையும், சக மனிதனுக்கு உதவிசெய்து வாழ்வதைப் பொறுத்துமே அமைவு பெறுகிறது. தமிழில் 'உதவி' என்பதற்கும் 'நன்றி' என்பதற்கும் 'நன்மை செய்தல்' என்று ஒரே பொருள்தான். திருவள்ளுவர் தமது திருக்குறளில் இவ்விரண்டு சொற்களையும் ஒரே பொருண்மையில் பயன்படுத்தியுள்ளார்.

    "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

    முந்தி யிருப்பச் செயல்"

    "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

    என்நோற்றான்கொல் எனும் சொல்"

    ஆகிய குறள்களில் மகன் தந்தைக்கும், தந்தை மகனுக்கும் செய்ய வேண்டிய உதவிகளைக் குறித்து வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு குடும்பத்து உறவுகளுக்குள்ளேயே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோருக்கும் நன்மைகள் செய்துகொள்வது சமூகக் கடமையாகும்.

    கல்வி கேள்விகளில், ஒழுக்க நடத்தைகளில் தாம் பெற்றெடுத்த பிள்ளைகள், மற்ற எல்லாரையும்விட முந்தியிருக்கும்படி செய்வது ஒவ்வொரு பெற்றோரின் சமூகக் கடமையாகும். அதேபோல, இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளை உருவாக்க இவர்களது பெற்றோர்கள் என்ன தவம் இயற்றினார்களோ என்று பார்ப்பவர்கள் வியக்கும்படிப், பிள்ளைகள் சாதனைகளில் சாதித்துக் காட்ட வேண்டும். இந்தச் சமூகத்தை நல்ல சமூகமாகக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு, சமூகத்தின் அங்கமாகத் திகழுகிற ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு.

    அதேபோலக், குடும்பத்தை ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள குடும்பமாக உருவாக்க வேண்டிய பெரும்பொறுப்பு, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு. அந்த வகையில் தனிமனிதர் தொடங்கி, சமூக மனிதர் வரை ஒருவருக்கொருவர் நன்மை செய்து கொள்வதும், உதவி செய்துகொள்வதும் அவசியமான சமுதாயக் கடமையாகும்.

    'இந்தச் சமூகமும் மனிதர்களும் எனக்கு என்ன உதவிகள் செய்தார்கள்? நான் எதற்காக அவர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும்?' என்று சிலர் கேட்கக்கூடும்; அவர்களது கேள்வியிலும் சில நியாயங்கள் இருக்கவும் கூடும். ஆனாலும் பிரதிபலன் கருதாமல் செய்கிற உதவியே ஆகச் சிறந்த உதவி. நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள் சூழ்ந்துள்ள இந்த உலகத்தில் நாம் இயல்பாகப் பெறக்கூடிய உதவிகள் எண்ணற்றவை.

    நாம் இயற்கையிடமிருந்து பெறும் உதவிகளுக்குச், செய்நன்றியறிதலாய் வேறு எவற்றைத் திருப்பிச் செய்ய இருக்கிறோம்?. இயற்கைச் சூழலை அதன் இயல்புகெடாமல் பாதுகாத்தாலே போதும்; வேறு எதையும் நம் சக்திக்குமீறிச் செய்ய வேண்டாம். அதேபோல 'வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபாகிய' இந்த மானுட சுழற்சிப் போக்கிலே, எத்தனையோ ஆயிரமாயிரம் உதவிகளை நமது முன்னோர்கள், தங்களது அறிவின் துணைகொண்ட கண்டுபிடிப்புகளின் வாயிலாக நமக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு, இந்தச் சமூகத்திற்கு, எதிர்காலச் சந்ததிக்கு யாதானும் உதவிகளைச் செய்துவிட்டுச் செல்ல வேண்டாமா?.

    உதவிகளில் சிறந்த உதவி, செய்யாமல் செய்த உதவி என்கிறார் திருவள்ளுவர்.

    "செய்யாமற் செய்த உதவிக்கு வானகமும்

    வையமும் ஆற்றல் அரிது"

    சுந்தர ஆவுடையப்பன்


     

    அடுத்தவர் எந்த உதவியும் செய்யாமல், அவர்களுக்கு நாம் செய்கிற நன்மைக்கு ஈடாக இந்த மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் தந்தால்கூட ஈடாகாது என்கிறது திருக்குறள். அதே போலப், பிரதிபலன் கருதாமல் அடுத்தவர்க்கு யார் உதவுகிறார்களோ அந்த நன்மை கடலைவிடப் பெரியது என்று மற்றொரு குறள் இயம்புகிறது. அடுத்தவர்க்கு உதவும் குணத்தை மனிதன் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    என்ன பிரதிபலன் கருதி சூரியன் அன்றாடம் உதிக்கிறது? எதை அனுபவிப்பதற்காகக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது? எந்தப் பலனை எதிர்பார்த்து மழை பெய்து பயிர் விளைந்து கொண்டிருக்கிறது?. இவையெல்லாம் இயற்கை; இவற்றிற்கு யோசிக்கும் மனமில்லை; ஆனால் மனமுள்ள மனிதன், தனக்கு அடுத்தவர் உதவினாலும் அதற்குப் பிரதியாக உபத்திரவத்தையே பரிசாக வழங்குகிறானே அது ஏன்? என்று அனுபவசாலியான சிலர் கேட்கலாம். ஏன் இப்படி நமக்கு நன்மை செய்பவர்க்கும் இடையூறு செய்யும் மனோபாவம்?. சிலபேருக்கு அது பிறவிக்குணமாகவும் அமைந்து விடுகிறது.

    ஓர் ஆப்பிரிக்க நாட்டு நாட்டுப்புறக் கதை. மலைகளால் சூழ்ந்த ஒரு பெரிய காடு. அந்தக் காட்டில் திடீரென்று தீப்பிடித்துக் கொள்கிறது. காட்டுத் தீயில் அகப்பட்டு ஏகப்பட்ட விலங்குகள் வெந்து சாம்பலாயின. விலங்குகள், பறவைகள் பாதுகாப்பாக ஒளிவதற்கு ஒரு மரமுமில்லை; ஒரு புதருமில்லை. எல்லாம் மளமளவென்று தீப்பிடித்துச் சாம்பலாகிக் கொண்டிருந்தன. இந்தக் களேபரத்தில் ஒரு நல்லபாம்பும் சிக்கி கொண்டது. காட்டின் நிலப்பரப்பில் ஊர்ந்துகொண்டிருந்தால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த பாம்பு, நிலத்தில் தெரிந்த ஒரு துவாரத்திற்குள் நுழைந்து விட்டது; அது பெரிய ஆழமான ஓட்டை என்பதால் பத்திரமாக அடியாழம்வரை சென்றுவிட்டது.

    அந்த நேரத்தில், காட்டின்மீது ஒரு கடும்மழை பெய்தது; நெருப்பு அணைந்து, காட்டின் வெப்பம் தணிந்தது. ஓட்டை வழியே பூமிக்குள் சென்றிருந்த நல்ல பாம்பு இப்போது, தரையின் மேலடுக்குக்கு வந்தது; ஆனால், வனப்பகுதியின் சமவெளிப் பகுதிக்கு வருவதற்கான ஓட்டை அடைபட்டிருந்தது. எப்படி வெளியே வருவது?. தீவிபத்தில் தப்பித்திருந்த சில விலங்குகள், பாம்பு சிக்கியிருந்த தரைக்கு மேல்பகுதியில் செல்வதும் திரும்புவதுமாக இருந்தன. அப்போது அந்த வழியில் வேடன் ஒருவனும் வந்தான். தரைக்குள்ளிருந்த பாம்பு, " நான் நல்லபாம்பு!, பூமியின் ஓட்டைக்குள் சிக்கிக் கொண்டுள்ளேன்! யாராவது ஓட்டைத் துவாரம் பார்த்து என்னை வெளியே எடுத்துக் காப்பாற்றி விடுங்கள்!" என்று மன்றாடியது.

    " நீ இப்படித்தான் சொல்வாய்!. உன்னைக் காப்பாற்றி வெளியேற்றினால், உடனே உதவி செய்த எங்களையே கடித்து வைத்துவிடுவாய்!. பெயர்தான் நல்ல பாம்பு; ஆனால் பாம்பின் குணம் கடித்து வைப்பதுதானே!" என்று கூறி எந்த விலங்கும் பாம்பைக் காப்பாற்றுவதாய் இல்லை. பார்த்துக்கொண்டிருந்த வேடன், " அவையெல்லாம் விலங்குகள்!; நான் ஆறறிவு உள்ள மனிதன்; நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்; ஆனால் கடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துகொடு!" என்று பாம்பிடம் பேசினான்.

    "கட்டாயம் கடிக்க மாட்டேன்!; காப்பாற்று!" என்றது நல்லபாம்பு. பூமிக்குக் கீழே பாம்பு சிக்கியிருக்கும் அடுக்குக்கு அருகிலிருக்கும் ஒரு துவாரத்தின் வழியே விரலைவிட்டுப் பாம்பைப் பிடித்து இழுத்து, பூமிக்கு வெளியே கொண்டுவந்து விட்டான் வேடன். வெளியே வந்ததுதான் தாமதம், அடுத்த நொடியே வேடனைக் கொத்துவதற்கு நல்லபாம்பு ஒரு சீறு சீறியது. சுதாரித்து விலகிக்கொண்ட வேடன்," பார்த்தாயா! சொன்ன சொல்லைத் தவறுவதற்கு முயற்சிக்கிறாயே!, உதவி செய்ததற்கு உபத்திரவம் கொடுப்பதுதான் நீதியா?.

    எங்காவது நன்மை செய்தவர்களுக்குத் தீமையை யாராவது பரிசளிப்பார்களா?" என்று பாம்பிடம் கேட்டான். " அதெல்லாம் எனக்குத் தெரியாது . சீறுவதும் கொத்துவதும்தான் என்னுடைய குணம்!. அதைத்தான் நான் இப்போது செய்தேன்!" என்றது நல்ல பாம்பு. " சரி வா!. நகரத்திலிருக்கும் நீதிமான் அவர்களிடம் சென்று வழக்கை வைப்போம்! அவர் தீர்ப்பு வழங்கட்டும்!". என்று நீதிமானிடம் அழைத்தான் வேடன்; சரியெனப் பாம்பும் அவனுடன் கிளம்பியது.

    நகரத்திற்குச் செல்லுகிற வழியில் இருவரும் ஒரு குதிரையைச் சந்தித்தார்கள்; நடந்ததை விவரித்து, இது குறித்து உன்னுடைய தீர்ப்பு என்ன? என்று குதிரையிடம் கேட்டனர். "என்னைப் பொறுத்த வரை, என்மீது ஏறிச் சவாரி செய்பவருக்குத் தொந்தரவில்லாமல் சொகுசாகத்தான் சுமந்து செல்வேன்!; ஆனால் அதற்குப் பரிசாக நாலைந்து சவுக்கடி கொடுத்து இன்னும் விரைவாகப் போகச்சொல்லித் துன்புறுத்தவே செய்வார்கள்!" என்றது குதிரை. நல்ல பாம்பு வேடனைப் பார்த்துச் சிரித்தது.

    அடுத்து, செல்லும் வழியில் ஒரு கழுதையை இருவரும் பார்த்தார்கள்; இருவருக்கும் இடையேயுள்ள வழக்கைப்பற்றிக் கழுதையிடம் சொல்லி, அதனுடைய தீர்ப்பு என்ன? என்று கேட்டார்கள். "எவ்வளவு பொதி சுமந்தாலும் சாட்டைக்கம்பு அடியைத் தவிர வேறு எதனையும் நான் பரிசாகப் பெற்றதில்லை" என்று சோகமாக சொன்னது கழுதை.

    அடுத்து ஒரு பசுமாட்டை வழியில் பார்த்த வேடனும் நல்ல பாம்பும், உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் தருபவர்கள் பற்றி உன்னுடைய அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார்கள். " அதை ஏன் கேட்கிறீர்கள்; நாங்கள் எங்கள் எஜமானர்களுக்கு மாடாய் உழைக்கிறோம்; ஆனாலும் கடைசியில் எங்களை அடிமாடாய்த்தானே விற்றுவிடுகிறது இந்த உலகம்!" என்று புலம்பித் தள்ளிவிட்டது பசுமாடு.

    "குதிரை, கழுதை, பசுமாடு ஆகியவை கூறிய நடைமுறைத் தீர்ப்புகளைக் கேட்டோம்.

    எல்லாமே எனக்குச் சாதகமானவை. இனிமேலுமா நகரத்திற்குச் சென்று நீதிமானைப் பார்க்க வேண்டும்?" கேட்டது நல்ல பாம்பு. "இதோ நகரம் வரப்போகிறது. அவரும் என்ன தீர்ப்புச் சொல்கிறார் என்று பார்ப்போம்" என்று விடாமல் பாம்பை அழைத்துக்கொண்டு நடந்தான் வேடன்.

    வழக்கை விசாரித்த நீதிமான், சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்தபின் தீர்ப்புச் சொல்கிறேன் என்றார். மூவரும் தீப்பிடித்த வனப்பகுதிக்குள் சென்றனர். சம்பவம் எப்படி நடந்தது என்பதை நிகழ்த்திக் காட்டச் சொன்னார் நீதிமான்.

    பாம்பு சிக்கியிருந்த பொந்துக்குள் சிரமப்பட்டு உள்ளே நுழைந்தது; என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கத்தியது. காப்பாற்றினால் கடிக்க மாட்டேன் எனச் சத்தியம் பண்ணச் சொல்லி வேட்டுவன் கேட்டான். சரி என்றது பாம்பு. காப்பாற்ற பொந்துக்குள் வேடன் கையை விட்டான். இப்போது அவனது கையை நீதிமான் பிடித்து இழுத்துத் தடுத்துவிட்டார். உதவி பெறுகிறவர் அந்த உதவியின் மதிப்பைத் தெரிந்தவராக இருந்தால் தான் நன்றியோடு இருப்பார்; இல்லையென்றால் உபத்திரவங்களையே செய்வார்.

    இன்று முழுவதும் பாம்பு பொந்துக்குள்ளேயே கிடக்கட்டும்; பசியில் வாடட்டும்; பிறகு காப்பாற்று; நிச்சயம் அதன்பின் உன்னிடம் அன்போடு நடந்து கொள்ளும்!" என்றார் நீதிமான். ஆம் திருவள்ளுவர் குறிப்பிடுவதைப்போல,

    "உதவி வரைத்தன்று உதவி உதவி

    செயப்பட்டார் சால்பின் வரைத்து"

    உதவியைப் பெறுகிறவரின் சான்றாண்மைக் குணத்தைப் பொறுத்தே, சிறிய உதவிகூடப் பெரும் உபகாரமாய் மாறும். தகுதியில்லாதவர்க்குச் செய்யும் உதவி, திரும்பவும் நமக்கு உபத்திரவமாகவே வந்து சேரும்.

    தொடர்புக்கு 94431 90098

    • செய்வன திருந்த செய்வதோடு, சிறப்பாகவும் செய்ய வேண்டும்.
    • உணவில் பாம்பின் விஷம் கலந்து அந்த ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.

    காய்கறி என்றாலே பலருக்கும் அவ்வளவு பிடித்தமானதாக இருப்பது இல்லை. வெங்காயம், உருளை, தக்காளி, பூண்டு, இஞ்சி போன்றவை எப்படியோ சமையலில் இடம் பிடித்து விடுகின்றன. ஆனால் மற்ற காய்கறிகளில் எத்தனை சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், ஆன்டிஆக்ஸிடென்ட், நார்சத்து என கொட்டிக் கிடக்கின்றன.

    அவையெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. கடும் நோய்களை தாக்கும் அபாயத்தினை வெகுவாக குறைக்கின்றன. ஜீரண சக்தி சீராகின்றது. எடை கூடுதல் தவிர்க்கப்படுகின்றது.

    பொட்டாசியம், வைட்டமின் கே போன்றவை உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு, இருதய பாதுகாப்பு இவற்றைத் தருகின்றன. வைட்டமின் ஏ, பி. சத்துக்கள் ஆரோக்கியமான கண், மூளை இவற்றிற்கு உதவுகின்றன. உங்கள் தட்டில் பாதி பகுதி தட்டு நிரம்ப காய்கறிகள் இருக்க வேண்டும். சருமம் இளமையாய் இருக்கின்றது. புற்று நோய், சர்க்கரை நோய், இருதய நோய் இவைகளுக்கு எதிர்ப்பாக அமைந்து காய்கறிகளே உடலை பாதுகாக்கின்றது.

    இப்படி எண்ணற்ற அத்தியாவசிய பயன்கள் உள்ளன.

    * பசலை கீரை- குறைந்த கலோரி சத்து கொண்ட இந்த கீரை உடலுக்கு நல்லது.

    * புற்று நோயில் இருந்து காப்பது, நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகின்றது.

    * ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது.

    * இருதய நோய்களில் இருந்து காக்கின்றது. பார்வை சீராக இருக்க உதவுகின்றது.

    * எலும்பு ஆரோக்கியம் கூட்டுகின்றது. மக்னீசியம் சத்து நிறைந்தது.

    * வைட்டமின் கே, ஏ. போலேட், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், வைட்டமின் பி6 என இதில் கொட்டி கிடக்கின்றது.

    * உயர் ரத்த அழுத்தம் குறைக்கின்றது. வயது கூடும் பொழுது ஏற்படும் மறதி பாதிப்பு குறைகின்றது.

    * குடல் ஆரோக்கியம் கூடுகின்றது. கழிவுப் பொருட்கள் தேக்கமின்றி வெளியேறுகின்றன.

    * இரும்பு சத்து நிறைந்தது

    கமலி ஸ்ரீபால்


     

    * ஒரு கப் பசலை கீரை அன்றாடம் இருந்தாலே போதும். இத்தனை நன்மைகளும் கிடைக்கும். பிள்ளைகளுக்கு கொஞ்சம் பன்னீர், கொஞ்சம் உருளை, கொஞ்சம் கூட்டு என எளிதாய் சேர்க்கலாமே.

    முட்டை கோஸ்- காபேஜ் எனப்படும் இந்த முட்டை கோசினை அதிகம் ஓட்டல்களில் கூட்டு, பொரியல் என பயன்படுத்துவார்கள். வீட்டில் இதற்கு சற்று மவுசு குறைவுதான். இதனை அதிக நீரில் வேக வைத்து நீரை கொட்டி சமைக்கும் போது சத்துக்களையும் இழந்து விடுகின்றோம். முட்டை கோஸ், காலிபிளவர், புரோகலி இவற்றினை ஒரு பிரிவின் கீழே கொண்டு வரலாம். இதில் பெரியது, சிறியது, நிற மாற்றம் கொண்டது என முட்டை கோஸ் பிரிவு படலாம். ஆனால் குணங்கள் அநேகமாக ஒரு மாதிரியாகதான் இருக்கும்.

    * காபேஜில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது இதில் உள்ள வைட்டமின் கே1, கே2 இவைதான். ரத்தம் உறைதலுக்கு மிகத் தேவையான வைட்டமின் ஆகும்.

    * வைட்டமின் 'சி' சத்து நிறைந்தது.

    * இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நாட்பட்ட உடல் வீக்கங்களையும் குறைக்கின்றது.

    * ஜீரணத்தை எளிதாக்குகின்றது. * இருதய பாதிப்பு அபாயத்தை குறைக்கின்றது.

    * உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. * கெட்ட கொழுப்பு குறையும். * நார் சத்து கொண்டது. * சமைப்பது எளிது... விலையும் குறைவுதான். * சூப், கூட்டு, பொரியல், சட்னி, காபேஜ் பக்கோடா (எப்போதாவது) என உணவில் எளிதாய் சேர்க்கலாமே.

    மஞ்ச பூசணி- தோட்டங்களில் காய்த்து கொட்டி கிடக்கும். இதற்கும் மக்களிடையே மவுசு குறைவுதான். ஆனால் இவையெல்லாம் நமக்கு இறைவன் கொடுத்த வரம். * நோய் எதிர்ப்பு சக்தி கூட்டவல்லது. * இதில் உள்ள அதிக வைட்டமின் 'சி' சத்து வெள்ளை ரத்த அணு உருவாக்கத்தில் பெரிதும் உதவுகிறது.

    * இதனால் காயங்கள் எளிதில் குணமாகின்றன.

    * வைட்டமின் ஏ, இரும்பு, ஸ்போலேட் சத்து நிறைந்தது.

    * இதில் உள்ள வைட்டமின் ஏ, வியூடின், சான்தின் இவை கண்பார்வையை காப்பதில் பெரும் பங்கு கொள்கின்றன. குறிப்பாக முதுமைகால கண் பாதிப்புகளை காக்கின்றன.

    * குறைந்த கலோரி சத்து கொண்டது என்பதால் எடை குறைப்புக்கும் உதவுகிறது.

    * இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட் புற்று நோயினை எதிர்க்கும் வல்லமை கொண்டது.

    இப்படியெல்லாம் வளம் கொண்ட இதனை உண்பது அவசியம் அல்லவா?

    இதெல்லாம் கூட வாழ்வில் அவசியம்தான்.

    * உங்களை மதிக்காத, அக்கறை கொடுக்காத ஒருவரின் பின்னால் நீங்கள் ஏன் தொங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் காட்டும் அலட்சியம், மரியாதையின்மையால் நீங்கள் ஏன் நொந்து துவண்டு, மனச்சோர்வில் செல்ல வேண்டும். ஏன் சோகமாக இருக்க வேண்டும். இவர்களை மனதில் இருந்து கண்டிப்பாக அகற்றி விடுங்கள். மறந்து விடுங்கள்.

    * எதற்காகவும் யாரையும் கெஞ்சாதீர்கள். இறைவனிடம் கெஞ்சுங்கள். (உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால்) பிரபஞ்சத்திடம் கேளுங்கள். மற்றபடி மனிதர்கள் அடுத்தவனுக்கு வாழ்வில் சற்று இறக்கம் வந்தால்கூட ஏறி மிதித்து மகிழ்பவர்கள்தான்.

    * தேவையான அளவு அடுத்தவரிடம் பேசுங்கள். நம் வீட்டு பால் செலவு, மளிகை செலவு, உறவினர் சண்டை இதெல்லாம் அடுத்தவருக்கு சொல்ல நீங்கள் என்ன சினிமா படம் ஓசியில் வெளியிடுகின்றீர்களா என்ன?

    * மரியாதை இல்லாத இடத்தினை உடனே அமைதியாய் எதிர்த்து விட வேண்டும்.

    * மதியாதார் தலை வாசல் மிதியாதே' என்பது தெரியுமே.

    * முயற்சி, உழைப்பு, பணம் இவற்றினை உங்கள் மீது முதலீடு செய்து மகிழ்ச்சி பெறுங்கள்.

    * பிறரைப் பற்றி, ஊர் வம்பினை சிறிது கூட ஆதரிக்க வேண்டாம்.

    * வாயில் இருந்து ஒரு வார்த்தை வருவதற்குள் நன்கு யோசித்து சொல்ல வேண்டும். இதில் தான் உங்களைப் பற்றிய மதிப்பும், மரியாதையும் பதிவாகின்றது.

    * தேவையின்றி பிறரைத் தூக்கி தலையில் வைத்து ஆட வேண்டாம். அவரவர் பண்பின் தகுதிக்கேற்ப அவர்களை மதித்தால் போதும்.

    * செய்வன திருந்த செய்வதோடு, சிறப்பாகவும் செய்ய வேண்டும்.

    * நமக்கு மகிழ்ச்சி வேண்டும். துன்ப கடலில் நீந்த வேண்டாம். அனைவரும். அன்னை தெரசா ஆக முடியாது.

    * உங்கள் குழந்தைகளுடன் நன்கு நேரம் செலவழியுங்கள்.

    பழைய நிகழ்வுகளை தோண்டி எடுத்து வருந்த வேண்டாமே.

    * வாழ்க்கையினை கொடூர அரக்கனாக பார்க்கக் கூடாது. நாம் நன்கு வாழ வேண்டும்.

    * அடிக்கடி வெளியில் செல்லுங்கள். இயற்கையோடு இருங்கள். சூரிய உதயம், கடல், மலை, பூங்கா என அத்தனை இடங்கள் உள்ளன. 'இவை அனைத்தும் வாழ்வினை நன்கு வாழ்வதற்காகவே' ஊர்வம்பு, புரளி, பிறரைப் பற்றி பேசக்கூடாது என்பதனை வலியுறுத்தும் ஒரு கதையினைப் பார்ப்போமா.

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு கொஞ்சம் நல்ல மனசு. இரக்கமான மனசு. அன்றாடம் கண் தெரியாதோர் ஆயிரம் பேருக்கு உணவு அளித்து வந்தார். ஒருநாள் அந்த உணவில் பாம்பின் விஷம் கலந்து ஆயிரம் பேரும் இறந்து விடுகின்றனர். ராசாவின் மனசு பாடாய்பட்டது. புண்ணியம் சேரா விட்டாலும் பரவாயில்லை. இப்படி பாவத்தினை சேர்த்துக் கொண்டு விட்டோமே என்று வேதனைப் பட்டான். ஊர் ஊராய் சுற்றி அலைந்தான். ஒரு நாள் இரவில் ஒரு கிராமத்தினை வந்தடைந்தான். அவனை யாருக்கும் அடையாளம் தெரிய வில்லை. மிகுந்த சோர்வாய் இருந்த அவன் ஒரு நல்ல பக்திமான் இருக்கும் வீட்டில் ஓய்வெடுக்க விரும்பினான்.

    அங்குள்ளவர்களை விசாரித்த பொழுது சற்று தள்ளி உள்ள குடிசையினை காட்டி 'இங்கு ஒரு சிறுவனும், சிறுமியும் உள்ளனர். அவர்கள் உடன்பிறந்தவர்கள். இந்த சிறு வயதிலேயே மிகுந்த பூஜை, பக்தி என்று இருப்பவர்கள். நீங்கள் அவர்கள் வீட்டு திண்ணையில் இன்று இரவு தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.

    அரசனும் அங்கு சென்றார். இரவும் சரி, விடியற்காலையும் சரி அந்த சிறுவனும், சிறுமியும் தியானம், பூஜை என்றிருந்தனர். வழக்கத்தினைக் காட்டிலும் அன்று அதிக நேரம் சிறுமி தியானத்தில் இருந்தாள். அப்பொழுது அவனது சகோதரன் 'அக்கா இன்று நீ மிக அதிக நேரம் தியானத்தில் இருந்தாய். ஏன்? வாசலில் ஒரு வழிப்போக்கர் உள்ளார்.

    அவருக்கு நாம் ஏதாவது உணவு கொடுக்க வேண்டாமா? என்று கேட்டான். அந்த பெண்ணோ, ஒரு விநோதமான குழப்பம் எமதர்ம ராஜனுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு அரசன் தினமும் 1000 பேருக்கு உணவளித்து வந்துள்ளான். அந்த உணவில் பாம்பின் விஷம் கலந்து அந்த ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.

    எமதர்மராஜனின் குழப்பமே இந்த பாவக் கணக்கினை யார் மீது எழுதுவது? அந்த பாம்பினை தூக்கிப் பறந்த பறவையின் மீதா, இறுக்கத்தால் விஷம் கக்கிய அந்த பாம்பின் மீதா அல்லது அரசன் மீதா என்ற விவாதம் நடக்கிறது. இதனை கேட்டுக் கொண்டிருந்தால் என் தியான நேரம் கூடி விட்டது என்றாள். இந்த விஷயம் தன்னைப் பற்றியதாக இருக்கவே அரசன் கூர்ந்து கவனித்தான்.

    'என்ன முடிவு எடுத்தார்கள்?'- சிறுவன்

    'இன்னமும் முடிவு எடுக்கவில்லை?'-சிறுமி

    அரசன் அந்த சிறுவர்களிடம் நான் இன்றும், நாளையும் இந்த வாசல் திண்ணையில் தங்கிக் கொள்ளலாமா எனக் கேட்டான். அவர்களும் மகிழ்ச்சியுடன் 'சரி' என்றனர்.

    என்ன முடிவு வருமோ என்ற கவலை அரசனுக்கு. ஊர் மக்கள் இவன் தங்குவதைப் பார்த்தனர். அவ்வளவுதான். ஊர் தான் என்ன வேண்டுமானாலும் பேசுமே. அந்த சிறுமி அழகாக இருப்பதால் இந்த வழிப்போக்கன் அங்கே தங்கி இருக்கிறான் என தவறாக பேசத் தொடங்கினர்.

    மறுநாள் சிறுமி தியானம் முடித்து வந்தாள். பயத்துடன் காத்திருந்த அரசன் 'குழந்தாய் இன்று எமதர்ம ராஜா என்ன முடிவு கூறினார்' என்று கேட்டார். அச்சிறுமி சொன்னாள் அந்த பாவம் எங்கள் கிராமத்தில் திண்ணையில் அமர்ந்து பேசிய நபர்களுக்கு பங்கிடப்பட்டுள்ளது. எனவே அடுத்தவரை தவறாக பேசுவது, கதை கட்டி விடுவது இவையெல்லாம் மற்றவர்களின் பாவத்தையும் சேர்த்து புரளி பேசுபவர் தலையில் கட்டி விடும். கவனம் தேவை.

    • 37 பவுன் நகைகளை, அடல்தாஸ் மற்றும் அமல் பஸ்வான் ஆகியோரிடம் கொடுத்து குறிப்பிட்ட நகை கடையில் கொடுத்து வரும்படி கூறியுள்ளார்.
    • தனிப்படையினர் விரைந்து சென்று அடல்தாசை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து 1½ ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்ய ப்பட்டு உள்ளார்.

    நாகர்கோவில் :

    வட மாநிலங்களைச் சேர்ந்த பலரும், தமிழகத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அடல்தாஸ் என்ற சுஜய் (வயது 32) மற்றும் அமல்பஸ்வான் ஆகியோர், குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் வேலை பார்த்துள்ளனர்.

    கேரள மாநிலம் திருச்சூ ரைச் சேர்ந்த மனோஜ் என்பவர் இந்த பட்டறையை நடத்தி வந்தார். இவர் சம்பவத்தன்று 37 பவுன் நகைகளை, அடல்தாஸ் மற்றும் அமல் பஸ்வான் ஆகியோரிடம் கொடுத்து குறிப்பிட்ட நகை கடையில் கொடுத்து வரும்படி கூறியுள்ளார்.

    ஆனால் அவர்கள் நகை யுடன் மாயமாகி விட்டனர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் அடல்தாஸ் மற்றும் அமல்பஸ்வானை தேடினர். அவர்களது சொந்த ஊர் சென்று தேடிய போது அவர்கள் அங்கு இல்லை.

    தலைமறைவான 2 பேரை யும் பிடிக்க, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினிஸ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ரகசிய மாக கண்காணித்து வந்த னர். இந்த நிலையில் அடல் தாஸ், மேற்கு வங்கா ளத்தில் உள்ள தனது சொந்த ஊரான மொத்த லாவிற்கு வந்திருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் விரைந்து சென்று அடல்தாசை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து 1½ ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்ய ப்பட்டு உள்ளார்.

    கைதான அடல்தாசை போலீசார் மார்த்தாண்டம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் நகை கள் எதுவும் இல்லை. இது பற்றி கேட்ட போது, திருடிச் சென்ற நகைகளை விற்று, உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதுபற்றி விசாரணை நடத்தும் போலீசார், வழக்கில் தொடர்ந்து தலைமைறைவாக உள்ள அமல் பஸ்வானை தேடி வருகின்றனர்.

    • உதயப்பிரகாசுடன் சேர்ந்து ஆஷா வாழ்ந்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் ஆஷா வைப்பிரிந்து உதயபிரகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.
    • தனிமையில் வாழ்ந்துவந்த ஆஷாவுக்கு வாழ்க்கையில் வெறுப்படைந்து வாழ்வதை விட சாவது மேல் என அடிக்கடி அவரது தாயார் பேபி சுலோச்சனாவிடம் புலம்பிவந்தார்

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபத்தை அடுத்த விராலிக்காட்டு விளை யைச்சேர்ந்தவர் ஆஷா (வயது 27). இவருக்கு ஷாஜி என்பவருடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். பின்னர் திண்டுக் கல்லை சேர்ந்த உதயப்பிர காசுடன் சேர்ந்து ஆஷா வாழ்ந்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் ஆஷா வைப்பிரிந்து உதயபிரகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.

    இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேக்காமண்டபம் அருகே கைசாலவிளையில் உள்ள வாடகை வீட்டில் மகளுடன் தனியாக வசித்து வந்தார். தனிமையில் வாழ்ந்துவந்த ஆஷாவுக்கு வாழ்க்கையில் வெறுப்படைந்து வாழ்வதை விட சாவது மேல் என அடிக்கடி அவரது தாயார் பேபி சுலோச்சனாவிடம் புலம்பிவந்தார். மன உளைச்சலில் இருந்து வந்த ஆஷா நேற்று வீட்டின் சமையலறை யில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் பிணத்தைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆஷாவின் தாயார் பேபிசுலோச்சனா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

    • விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
    • ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.

    சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர்.

    சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

    அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

    'மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பிடுகிறது. சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு' என்ற அடைமொழி கொடுத்து அழைப்பது தமிழர் மரபு. அந்த வகையில் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் ''திருமணம்'' என்று அழைக்கப்படுகிறது. திருமணம் என்றாலே அனுசரித்து வாழ்வது தான். இதில் தம்பதிகள் நம்முடைய வாழ்க்கை தத்துவமான ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதன் மூலம் இல்லறம் நிலைத்து நிற்கும். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று குடும்ப அமைப்பு. இவை சிதறாமல் பேணிக்காப்பது இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. பொதுவாக பெண்கள் உணர்வு பூர்வமாகவும், ஆண்கள் அறிவு பூர்வமாகவும் சிந்திப்பார்கள். குடும்ப உறவுக்கு இவை இரண்டும் தேவைப்படுகிறது. அப்பாவின் அரவணைப்பும், அம்மாவின் அன்பும் தேவை. இதில் சுயநலம் என்பது இருக்க கூடாது. 'விட்டு கொடுப்பதால் கெட்டு போவதில்லை' என்பதற்கு ஏற்ப அனைவரும் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ பழக வேண்டும்.

    'விவாகரத்துக்கு நிதி நிலைமை, சுதந்திரமாக இருக்க முடியாத நிலை முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சமூக ஊடகங்களில் நிறைய விஷயங்களை பார்ப்பதன் மூலம் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளாமல் பிறருடைய வாழ்க்கையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேசுவது, வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாதது போன்ற காரணங்களும் கூறப்படுகிறது. இதனால் எங்களிடம் வருபவர்களுக்கு முதலில் நாங்கள் கூறுவது பிறருடைய வாழ்க்கையை ஒப்பிட்டு பேச கூடாது. அத்துடன், தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கிடைத்த வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு சண்டை சச்சரவுகள் இன்றி விட்டு கொடுத்து சந்தோஷமாக வாழ பழக வேண்டும்.

    வாய்ப்பும் நேரமும்

    விவாகரத்து என்பது தம்பதிகள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே இல்லை. அவர்களுக்கு பெற்றோர்கள், குழந்தைகள் இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டதாகும். மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்பத்தினரையும் தாண்டி விவாகரத்து என்ற முடிவை எடுப்பார்கள். விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். 'விவாகரத்து' என்ற வார்தையை சண்டை போடும்போது மிரட்டுவதற்கான கருவியாக பயன்படுத்த வேண்டாம். நாளடைவில் இந்த வார்த்தைகள் நம் மனதில் ஆழமாக பதிந்து அதனை செய்வதற்கு தூண்டலாம். சின்ன, சின்ன விஷயத்துக்கு எல்லாம் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருக்கலாம். 'குரங்கில் இருந்து மனிதன் வந்தான்' என்பது நமக்கு கற்று தந்த பெரிய விஷயம் என்னவென்றால், மனிதன் மாறுவான் என்பதுதான். எனவே மனிதன் நிலையாக இருப்பதில்லை. எனவே விவாகரத்து என்ற முடிவை தம்பதிகள் எடுக்காமல் மாறுவதற்கான வாய்ப்பையும், நேரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    விவாகரத்து வழக்குகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தேவி நட்ராஜ் கூறும்போது, 'ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.

    ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

    குறிப்பாக தன் கணவர் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது ஆகியவை இந்து திருமண சட்டப் பிரிவின் கீழ் வருவதால் இத்தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. இந்தச் செயல்கள் கணவரின் நற்பெயருக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கோர்ட்டு கூறுகிறது. அத்துடன், மனைவி தனது தாலியை கழற்றுவது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாக கருதலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. தாலியை அகற்றுவது திருமண உறவைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது என்பதை கோர்ட்டு தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவாகரத்து பெற்றுத்தரப்படுகிறது. ஆனால் இப்படியே போகாமல் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்வதன் மூலம் குடும்ப உறவை மேம்படுத்த முடியும். இதற்கு தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ வேண்டும்' என்றார்.

    • ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
    • விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல.

    ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.

    ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

    1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.

    2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவு முறை.

    3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக் கொண்டு விவாகரத்து கோரலாம்.

    4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.

    5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.

    6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)

    7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.

    8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.

    9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.

    10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.

    11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.

    12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.

    13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.

    • ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
    • மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உலக மகளிர் தின விழா மற்றும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேல் வீதியில் உள்ள ஆர்.ஓ.ஏ. சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் ரசர்வதேச கலாம் அறக்கட்டளை மாவட்ட தலைவர் ராகவேந்திரன், வணிகர் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உறுப்பினர் தமிழரசன் வரவேற்றார்.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம், பிரதேச காங்கிரஸ் கமிட்டி மற்றும் அறம்செய் அறக்கட்டளை செயலாளர் மரகதவல்லி செந்தில் ஆகியோர் பேசினர். முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர்அய்யர் கலந்துகொண்டு சாதனை படைத்த மகளிருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசுகையில்

    இந்தியாவில் அரசியில் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு தான் பெண்கள் வெளிஉலகத்திற்கு வரத்தொடங்கினர்.

    குறிப்பாக அரசியலில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கி ஒரு தேர்தலில் பெண் நிற்கும்போது அவரை எதிர்த்து ஒருசில பெண்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டு ஒரு பெண்ணால் பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

    பொதுவாழ்க்கைக்கு வந்து மக்கள் பணியாற்றும் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பெண்கள் அவர்கள் பணியை அவர்களது கணவர்கள் மேற்கொள்வதை அனுமதிக்கக்கூடாது பெண்கள் தன்னிச்சையாக செயல்பட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.

    இதில் அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சாமிகணேசன், கவிஞர் ராதாகிருஷ்ணன், கனகசபை, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமார், அறம்செய் அமைப்பு சிவக்குமார், யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர்ஜெயின் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள், மகளிர் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.
    • மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    வாழ்க்கை எனும் அழகான பயணத்தில் பொருளாதாரம், குடும்பம் அல்லது சூழ்நிலையின் காரணமாக நாம் விரும்பிய செயலையோ அல்லது வேலையையோ செய்ய முடியாமல் போகலாம். பலர் பொருளாதார மேம்பாட்டிற்காக தனக்கு பிடித்த, இயல்பாக வரக்கூடிய வேலையை செய்யாமல், வேறு வேலையை முழுமனம் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

    பல வருடங்கள் கழித்து, நாம் வாழ்ந்த வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், நமக்கு பிடித்ததை செய்யவில்லையே, வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவிக்காமல் இருந்துவிட்டோமே என்ற கவலை ஏற்படும்.

    ஒருசில நேரங்களில் பொருளாதாரம் அல்லது சூழ்நிலைக்காக சில விஷயங்களை செய்யாமல் இருப்பதோ அல்லது தள்ளிப்போடுவதோ நல்லதுதான், ஆனால் எல்லா நேரத்திலும் அவ்வாறு செய்தால், ஒரு கட்டத்தில் 'ஏன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தோம்? யாருக்காக வாழ்ந்தோம்? என்ற கேள்வி தோன்ற ஆரம்பிக்கும்.

    வாழ்க்கையை உங்களுக்காக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் செய்கிற வேலையை செய்தால், நாமும் அவர்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய மகிழ்ச்சியை வேறு யாராலும் வரையறுக்க முடியாது.

    எது உங்களுக்கு திருப்தியானது அல்லது நிறைவானது என்று யாராலும் சொல்ல முடியாது. அதை உங்களால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு எந்த வேலை பிடித்து இருக்கிறதோ, அந்த வேலையை தேர்ந்தெடுத்து முழுமையாக மன நிம்மதியுடன் செய்யுங்கள்.

    மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    எப்போதாவது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பது நல்லது. ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து யோசிக்கக்கூடாது. நீங்கள் எப்படி இருந்தாலும், எவ்வளவு விசித்திரமாக இருந்தாலும், உங்களை நீங்களே பாராட்டுங்கள்! ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்.

    பெண்களே உங்களுக்கு இருக்கும் தனித்துவத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். அவ்வப்போது பிடித்தவற்றை வாங்குங்கள். பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். பிடித்த உணவை பிடித்த இடத்தில் சாப்பிடுங்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.

    நீங்கள் இதுவரை பிடிக்காத வேலையை செய்து கொண்டிருந்தால், இனி உங்களுக்கு பிடித்தவாறு அதை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசியுங்கள். இடைவேளை நேரத்தில் உங்களுக்கு பிடித்த செயலில் உங்களை ஈடுபடுத்துங்கள். புதிய வேலையை செய்யத் தோன்றினால் தயக்கமின்றி செய்யுங்கள்.

    'வயதாகி விட்டது, இனி நாம் என்ன செய்து என்ன நடக்கப் போகிறது?' என்று எண்ணாதீர்கள். இதுவரை உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை பற்றி யோசிப்பதை விடுத்து, இனி உங்களுக்கு பிடித்தவாறு எப்படி வாழலாம் என்று யோசியுங்கள்.

    • ஊட்டியில் நிலம் வாங்கிய அம்பலம்
    • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில், மே.26-

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் முதலிமார் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கார்த்திக் (வயது 34). நகை மதிப்பீட்டாளர். இவரது மனைவி பார்வதி (23). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்கள் முதலிமார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த மாதம் 12-ந்தேதி மகேஷ் கார்த்திக் வேலை விஷயமாக சென்னை சென்றார். இதையடுத்து மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது மகேஷ் கார்த்திக் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    வீட்டில் இருந்த 17 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன் வீட்டின் மாடி வழியாக புகுந்து பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றினார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையன் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் வாத்தியார்விளையை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவது அறிந்த ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆனந்திடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனந்த் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் அந்த பணத்தை பெண்களுக்கு ஜாலியாக செலவு செய்துள்ளார். ஊட்டி பகுதியில் அவர் நிலம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும் என விளக்கினார்.
    • வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாய் எப்படி இருக்க வேண்டும்?

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை அடுத்த காளி ஊராட்சி அஞ்சல் நிலையம் அருகே 'ஓய்வுபெற்ற ஆசிரியர் காவிரி செல்லையா எழுதிய, பெருமதிப்பிற்குரிய மாணவ மணிகளே, பெற்றோர்களே என்ற தலைப்பில் 2 நூல்கள் வெளியியிட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவி தேவி உமாபதி, சமூக ஆர்வலர் சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய கவுன்சிலர் காந்தி வரவேற்றார்.

    இதில் மாணவ-மாணவிகள் என்கிற நூலில், இவர்கள் - எப்படி படிக்க வேண்டும், எப்படி வாழவேண்டும், எப்படி முன்னேற வேண்டும் என விளக்கி உள்ளார்.

    அடுத்து, பெற்றோர்கள் என்கிற நூலில், பெற்றோர்கள், எப்படி, தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும், எப்படி படிக்க வைக்க வேண்டும், அவர்களை வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாய் எப்படி இருக்க வேண்டும் என தெளிவுபட எழுதி உள்ளார்.

    பின்னர் குத்தாலம் முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக செயல் திட்ட குழு உறுப்பினருமான கல்யாணம் ஆசிரியர் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

    இதனை ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி சார்பாக மயிலாடுதுறை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் செல்லத்துரை, இளமுருகச் செல்வன், வெண்மணி அழகன், உலக தமிழ் கழகம் மன்னர் மன்னன், நமச்சிவா யபுரம் ஊராட்சி தலைவர் நெப்போலியன், வி.சி.க. நெறியாளர் ஆனந்த், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், உள்ளீட்ட ஏராளமான ஆசிரி யர்களும், மானவர்களும், ஊர் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் புலவர் நூல் ஆசிரியர்காவிரி செல்லையா நன்றி கூறினார்.

    • சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
    • தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம்களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி தீபா (வயது 42) மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    பெரம்பலூர் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை. மேலும் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காரும் மாயமானது. அதைத்தொடர்ந்து மனைவியை காணவில்லை என தீபாவின் கணவர் பாலமுருகன் வி. களத்தூர் போலீஸ் நிலையத்திலும், கணவரை காணவில்லை என வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவை பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் மாயமான ஆசிரியை தீபாவின் கார் 2 நாட்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் போலீசார் விரைந்து சென்று காரைத்திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் ரத்தக் கறை படிந்த சுத்தியல், தீபா அணிந்திருந்த தாலி, கொலுசு, அவரின் ஏ.டி.எம். கார்டு வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இதனிடையே ஆசிரியர் வெங்கடேசன் செல்போனில் இருந்து பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபா கதி என்ன என்பது குறித்து தனிப்படை கோவை, தேனி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளது.

    தனிப்படை போலீசார் விசாரணையில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தீபா என்ன ஆனார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இதனிடையே கோவை, மதுரை, தேனி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்க.ளில் வெங்கடேசன் பணம் எடுத்த போது அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

    வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசுபவர்களின் செல்போன் எண்களை விசாரிக்கும் போது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரிய வந்தது.

    தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம் களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    மாயமான ஆசிரியர் வெங்கடேசன், தனது இருப்பிடத்தை போலீசர் அறிந்துவிடுவார்கள் என அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றி மாற்றி வருகிறார். இதனால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தீபாவை வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகள்.
    • வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டும்.

    நாம் வாழுகிற வாழ்க்கை இயற்கையின் கொடை. இந்த வாழ்க்கையை நேசிப்பவர்கள் மிக குறைவு. கோபமும், வெறுப்பும், மன அழுத்தமும் அதிகமாகிக் கொண்டு இருப்பதற்கு வாழ்க்கையை நேசிக்காததே அடிப்படை காரணமாகும். வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்!

    வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டும். ஒவ்வொன்றையும் நேசிக்க வேண்டும். காலையில் எழுந்து வெளியே வந்ததும் சூரிய ஒளி உடலில் படும்போது ஏற்படுகிற வெப்பத்தை உணர வேண்டும். மெல்லியக்காற்று நம்மீது படும் போது ஏற்படுகிற அந்த இதமான இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

    வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்தது தான். வெற்றியும் தோல்வியும் நிறைந்ததுதான். அதை நடுநிலையோடு எதிர்கொள்கிற போது சுமைகள் மாறி, சுகமாக தெரியும். அதற்கு நாம் நம்மை எப்போதும் இயங்கி கொண்டு இருப்பவர்களாக மாற்ற வேண்டும். இயங்குதல் என்றால் வழக்கமாய் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு வேலைகள் செய்வது மட்டுமல்ல. அந்த வட்டத்தை கடந்து கிடைக்கும் நேரத்தில் நமக்கு பிடித்த ஒரு வட்டத்தை உருவாக்க வேண்டும்.

    உதாரணமாக இலக்கியம் மீது ஆர்வம் என்றால் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இலக்கிய கூட்டங்களில் பங்கு பெறலாம். திரைப்பட ஆர்வலர் என்றால் திரைப்படங்களை பார்க்கலாம். திரைப்படங்கள்குறித்து கலந்துரையாடுகிற நிகழ்வுகளில் பங்கு பெறலாம்.


    எது உங்களுக்கு பிடிக்கிறதோ எந்த இடத்தில் இருந்தால் உங்களுக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என நினைக்கிறீர்களோ அந்த இடத்தோடு, அந்த நபர்களோடு உங்கள் ஓய்வு நேரத்தை செலவிடுங்கள். அது உங்களுக்குள் உள்ளார்ந்த மாற்றத்தை கொடுக்கும்.

    ஏதோ ஒன்றை திரும்ப, திரும்ப யோசித்து உங்களையே குழப்பிக் கொள்ளாமல் உங்கள் மனநிலையை சீராக வைக்க உங்கள் சிந்தனைகளை ஒருங்கிணைக்க உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அது உங்களை மாற்றும்.

    ஏதாவது ஒரு செயலை அன்றாடம் செய்வேன் என முடிவு எடுங்கள். அது காலையில் சிறிது நேரம் நடப்பதாக இருக்கலாம். செடிக்கு தண்ணீர் ஊற்றுவதாக இருக்கலாம். எதுவானாலும் சரி, அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.


    குடும்பத்திற்காகவும், எதிர்காலத்திற்காகவும் ஓடிக்கொண்டே இருக்கும் பலர் தங்களுக்கென ஓடுவதில்லை. ஒரு நாளின் பத்து நிமிடத்தையாவது உங்களுக்கென செலவிடுங்கள். அமைதியாக அமருங்கள்.

    எல்லாம் கடந்து போகும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துங்கள். என்ன நேர்ந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள். நாம் செய்கிற ஒவ்வொரு வேலைகளையும் ரசித்து, கவனத்தோடு, நிகழ்கால உணர்வோடு இணைந்து செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அர்த்தமானதாகவும், அழகானதாகவும் தெரியும்.

    ×