search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Family Problem"

    • கண்ணன் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
    • கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மேலப்பாளையம் நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது47). இவருக்கு கலா (45) என்ற மனைவியும், பிரதீப், திலீப் என்ற 2 மகன்களும், பிரீத்தி என்ற மகளும் உள்ளனர்.

    கண்ணன் கூலி வேலைக்கு சென்று வந்தார். நாளை முதல் 3 நாட்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதற்காக கோயம்புத்தூரில் நர்சிங் படிக்கும் தனது மகள் பிரீத்தியை அழைத்து வருவதற்கு ரெயிலில் செல்வதற்கு கலா முடிவு செய்துள்ளார்.

    இதற்காக நேற்று இரவு அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் கலா கோவைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணி கணவரை பிரிந்து ஏர்வாடி அருகே வசித்து வருகிறார்.
    • சுடலியம்மாளுக்கும், ஆசீர் பால்ராஜ்க்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.

    களக்காடு:

    வள்ளியூர் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் நியூட்டன் மகன் ஆசீர் பால்ராஜ் (வயது 55). இவரது மனைவி ராணி. இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

    முன்விரோதம்

    இதனால் ராணி கணவரை பிரிந்து, ஏர்வாடி அருகே உள்ள சமாதான புரம், காருண்யா நகரில் வசித்து வருகிறார். ஆசீர் பால்ராஜ், ராணி வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனை ராணி அதே தெருவில் வசிக்கும் பழனி மனைவி சுடலியம்மாளிடம் (48) கூறினார். இதையடுத்து சுடலியம்மாள், இதுகுறித்து ஆசீர் பால்ராஜை தட்டிக்கேட்டார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சுடலியம்மா ளுக்கும், ஆசீர் பால் ராஜ்க்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.

    கத்திக்குத்து

    இந்நிலையில் நேற்று ராணியும், சுடலியம்மாளும் அங்குள்ள கிறிஸ்தவ சபைக்கு சென்று கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த ஆசீர்பால்ராஜ், சுடலியம்மாளை வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசீர் பால் ராஜை கைது செய்தனர்.

    • ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
    • விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல.

    ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.

    ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

    1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.

    2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவு முறை.

    3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக் கொண்டு விவாகரத்து கோரலாம்.

    4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.

    5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.

    6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)

    7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.

    8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.

    9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.

    10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.

    11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.

    12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.

    13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.

    • விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
    • ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.

    சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர்.

    சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

    அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.

    'மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பிடுகிறது. சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு' என்ற அடைமொழி கொடுத்து அழைப்பது தமிழர் மரபு. அந்த வகையில் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் ''திருமணம்'' என்று அழைக்கப்படுகிறது. திருமணம் என்றாலே அனுசரித்து வாழ்வது தான். இதில் தம்பதிகள் நம்முடைய வாழ்க்கை தத்துவமான ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதன் மூலம் இல்லறம் நிலைத்து நிற்கும். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று குடும்ப அமைப்பு. இவை சிதறாமல் பேணிக்காப்பது இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. பொதுவாக பெண்கள் உணர்வு பூர்வமாகவும், ஆண்கள் அறிவு பூர்வமாகவும் சிந்திப்பார்கள். குடும்ப உறவுக்கு இவை இரண்டும் தேவைப்படுகிறது. அப்பாவின் அரவணைப்பும், அம்மாவின் அன்பும் தேவை. இதில் சுயநலம் என்பது இருக்க கூடாது. 'விட்டு கொடுப்பதால் கெட்டு போவதில்லை' என்பதற்கு ஏற்ப அனைவரும் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ பழக வேண்டும்.

    'விவாகரத்துக்கு நிதி நிலைமை, சுதந்திரமாக இருக்க முடியாத நிலை முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சமூக ஊடகங்களில் நிறைய விஷயங்களை பார்ப்பதன் மூலம் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளாமல் பிறருடைய வாழ்க்கையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேசுவது, வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாதது போன்ற காரணங்களும் கூறப்படுகிறது. இதனால் எங்களிடம் வருபவர்களுக்கு முதலில் நாங்கள் கூறுவது பிறருடைய வாழ்க்கையை ஒப்பிட்டு பேச கூடாது. அத்துடன், தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கிடைத்த வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு சண்டை சச்சரவுகள் இன்றி விட்டு கொடுத்து சந்தோஷமாக வாழ பழக வேண்டும்.

    வாய்ப்பும் நேரமும்

    விவாகரத்து என்பது தம்பதிகள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே இல்லை. அவர்களுக்கு பெற்றோர்கள், குழந்தைகள் இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டதாகும். மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்பத்தினரையும் தாண்டி விவாகரத்து என்ற முடிவை எடுப்பார்கள். விவாகரத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். 'விவாகரத்து' என்ற வார்தையை சண்டை போடும்போது மிரட்டுவதற்கான கருவியாக பயன்படுத்த வேண்டாம். நாளடைவில் இந்த வார்த்தைகள் நம் மனதில் ஆழமாக பதிந்து அதனை செய்வதற்கு தூண்டலாம். சின்ன, சின்ன விஷயத்துக்கு எல்லாம் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருக்கலாம். 'குரங்கில் இருந்து மனிதன் வந்தான்' என்பது நமக்கு கற்று தந்த பெரிய விஷயம் என்னவென்றால், மனிதன் மாறுவான் என்பதுதான். எனவே மனிதன் நிலையாக இருப்பதில்லை. எனவே விவாகரத்து என்ற முடிவை தம்பதிகள் எடுக்காமல் மாறுவதற்கான வாய்ப்பையும், நேரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    விவாகரத்து வழக்குகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தேவி நட்ராஜ் கூறும்போது, 'ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயலகளாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மனைவியைப் பழிவாங்கும் எண்ணம் இருப்பது ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது.

    ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து முடிவு எடுப்பது எந்த மனைவிக்கும் எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் பல கஷ்டமான சூழ்நிலைகள் உள்ளன. பெண்கள் ஏன் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்? குறிப்பாக எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும், ஏமாற்றினால் அந்த உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும் போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். தன் வாழ்வில் பிறர் வந்திருப்பதை துளியும் விரும்பாத பெண்கள், இந்த முடிவை எடுக்கிறார்கள்.

    குறிப்பாக தன் கணவர் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது ஆகியவை இந்து திருமண சட்டப் பிரிவின் கீழ் வருவதால் இத்தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. இந்தச் செயல்கள் கணவரின் நற்பெயருக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கோர்ட்டு கூறுகிறது. அத்துடன், மனைவி தனது தாலியை கழற்றுவது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாக கருதலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. தாலியை அகற்றுவது திருமண உறவைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது என்பதை கோர்ட்டு தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவாகரத்து பெற்றுத்தரப்படுகிறது. ஆனால் இப்படியே போகாமல் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்வதன் மூலம் குடும்ப உறவை மேம்படுத்த முடியும். இதற்கு தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ வேண்டும்' என்றார்.

    • ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது.
    • எந்தவொரு காரியத்தையும் துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை.

    கணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்தான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அது 'ஈகோ'வுக்கு வழிவகுத்துவிடும்.

    ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும். அவர்தான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோவுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசுவது மனைவியை மனம் நோக செய்துவிடும். மற்ற சமயங்களில் அன்பும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம்.

    மற்றவர்கள் முன்னிலையில் துணை தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணம்தான் ஈகோவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்படுவதை கணவர் பார்க்கும்போது அவருக்குள் தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும்.

    தானும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும்போது பாராட்ட வேண்டும். அதனைதான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும்.

    பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும். அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்தைகளை பேசுங்கள். அது அவருக்கு பிடித்து போய் விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுவார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்குள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்துவிடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்பார். அதனால் அதிகமாகவும் பாராட்டிவிடக்கூடாது.

    சில சமயங்களில் துணையின் செயல்பாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்திற்கு ஆளாக நேர்ந்தால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வதில் தவறு இல்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரிய வைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்களே தவறுகளை உணரும்போது மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது.

    எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து செயல்படுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதையெல்லாம் அவரிடம் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம்தான் ஈகோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    • இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.
    • மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

    திருமண பந்தத்தில் கணவரின் ஆதிக்கமே தலை தூக்கி நிற்கிறது. அப்படி ஆதிக்கம் செலுத்துவது தம்பதியர் இடையே அன்பை குறைத்துவிடும். மனைவிக்கு போன் செய்யும்போது இணைப்பு பிசியாக இருந்தால் வேறொருவருடன் பேசுவதாக சந்தேகிப்பது, சமூகவலைத்தளங்களில் வேறொருவருடன் அரட்டை அடிப்பதாக சந்தேகிப்பது, நடத்தையில் குறை கூறுவது போன்றவை குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து விடும்.

    எந்தவொரு சூழலிலும் மனைவி மீது கணவர் சந்தேகம் கொள்ளக்கூடாது. அந்த அளவிற்கு துணை மீது கணவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.

    கணவன்-மனைவி இருவருக்குள் சந்தேக எண்ணம் தலைதூக்கினால் உடனடியாக பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், அபிலாஷைகள் இருக்கும். அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருவர்மீது ஒருவர் ஆணித்தரமான நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை எந்தவொரு சூழலிலும் சிதைப்பதற்கு இடம் கொடுத்துவிடவும் கூடாது.

    குடும்ப நலன் குறித்து எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் இருவரும் கலந்து பேச வேண்டும். வெளி இடங்களுக்கு செல்வது, ஆடை அணி வது, விருப்பமான உணவு சாப்பிடுவது, செலவு செய்வது எதுவாக இருந்தாலும் கணவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. தன் விருப்பத்தின்படிதான் மனைவி செயல்பட வேண்டும் என்று பிடிவாதம் கொள்ளக்கூடாது.

    வீட்டில் கணவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தால் அந்த உறவில் நேசமும், பாசமும் குறைவாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில் மனைவி தன் உணர்வுகளை கணவர் புரிந்துகொள்ளும் படி பக்குவமாக பேச வேண்டியது அவசியம். அதனை கேட்கும் மனநிலையில் கணவர் இல்லாமல் இருந்தால் மன நல நிபுணரின் ஆலோசனையை நாடலாம்.

    கணவர் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டாலோ, அதிகாரம் செலுத்தினாலோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினாலோ அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதேவேளையில் மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

    தம்பதியர் ஒருவரையொருவர் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் தாம்பத்ய பந்தம் வலுவாக இருக்கும். இருவருக்குமிடையே சந்தேக குணமோ, ஈகோ பிரச்சினையோ, சர்வாதிகார மனபாவமோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அது தாம்பத்ய வாழ்க்கையை சிதைத்துவிடும்.

    • தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.
    • மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    இல்லற வாழ்க்கையில் இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தம்பதியரிடையே புரிதல் இருக்க வேண்டும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த சமயத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும்.

    கருத்து மோதல் தலைதூக்கும்போது ஒருசில வார்த்தைகளை உச்சரிப்பதை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தை மற்றொருவருக்கு மன வேதனையை உண்டாக்கக்கூடும். அதனால் தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தை பிரயோகத்தை கவனமாக கையாள வேண்டும்.

    'உன்னால் என்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நீ கேட்டுத்தான் நடந்தாக வேண்டும்' என்ற ரீதியில் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அது துணையின் கோபத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அவருடைய ஆழ்மனதில் அந்த வார்த்தை ஆழமாக பதிந்துவிடும். அது ஆறாத மன காயமாக மாறிவிடவும் கூடும். அதனால் தன்னை சார்ந்திருந்துதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    எதிர்பாராதவிதமாக நிகழும் தவறுக்கு துணை காரணமாக இருக்கலாம். அது அவருக்கு தெரியாமலேயே நடந்திருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் முன்கூட்டியே அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் செய்த தவறுக்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட 'தன்னால் இப்படியொரு தவறு நடந்துவிட்டதே' என்ற வேதனை அவரை ஆட்கொண்டிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'நீதான் காரணம்' என்று துணை மீது குற்றம் சாட்டக்கூடாது. அது மோதல் போக்கை உண்டாக்கிவிடும். தவறை திருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வதற்கு பதிலாக திசை திருப்பும் நடவடிக்கையாக மாறிவிடும்.

    எதேச்சையாக தவறுகள் நடக்கும்போது 'நீ ஒரு முட்டாள், உன்னால் அதற்கேற்பத்தான் செயல்பட முடியும்', 'நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவள்' என்பன போன்ற வார்த்தைகளை உபயோகித்து திட்டுவது துணையின் தன்மானத்தை சீண்டுவதாக அமையும். அவரது சுய கவுரவத்தை சிதைப் பதாகவும் அமைந்துவிடும். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் துணையை விட கணவர் அதிக தவறுகளை செய்திருக்கக்கூடும். அவரது தவறான வழி நடத்தல்தான் தவறுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கும். அதனால் தவறுகள் நிகழும் பட்சத்தில் இருவரும் நிதானம் இழக்காமல் அதனை திருத்துவதற்கான முயற்சியில்தான் கவனம் செலுத்த வேண்டும். துணை வருத்தப்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்திருந்தால் மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    அதேபோல் தவறு நிகழும்போது, 'நீ கடந்த முறையும் அப்படித்தானே செய்தாய்? இதுவே உனக்கு வாடிக்கையாகி விட்டது' என்றும் பேசக்கூடாது. அது உறவுக்குள் விரிசலை அதிகப்படுத்திவிடும். கணவர் தன் மீது எப்போதும் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை துணையிடம் விதைத்து விடும். குடும்ப மகிழ்ச்சியையும் சிதைத்துவிடும்.

    மேலும் தவறு நடந்துவிட்டால், 'எதனால் அந்த தவறு நிகழ்ந்தது?' என்பதை கண்டறி வதற்கே நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'ஏன் இப்படி நடந்தது. எனக்கு உடனே பதில் சொல்' என்று கடுமையாக திட்டுவதும் கூடாது.

    நடந்த தவறை நினைத்து துணை வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை உணராமல், 'ஏன் எதுவும் பேசாமல் 'உம்'மென்று இருக்கிறாய்? வாயை திறந்து பதில் சொல்' என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக ''நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இருவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போமா?" என்று சொல்லிப் பாருங்கள்.

    துணை முக மலர்ச்சியுடன் செயல்பட தொடங்கிவிடுவார். தவறுகளையெல்லாம் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். தேவையற்ற கருத்து மோதல்கள் எழுவதற்கு இடமிருக்காது. இல்லற வாழ்வில் நிம்மதியும் குடிகொள்ளும்.

    • சிவக்குமார் சமையல் தொழிலாளி என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார்.
    • சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் அப்பர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28), சமையல் தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டவுன் அண்ணாநகரை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சிவக்குமார் சமையல் தொழிலாளி என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக சிவக்குமார் கூறி சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில், எருமாபாளையம் பகுதியில் உள்ள குருவிபனை ஏரியில் மாயமான சிவக்குமார்் பிணமாக கிடப்பதாக நேற்று பிற்பகல் கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் பிணமாக கிடந்த சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வெளியே சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது எப்படி?, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது. பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும்.
    • பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
    • மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    மனிதர்களின் அடிப்படை குணாதிசயங்களில் இருந்து இந்த நூற்றாண்டில் காணாமல்போன விஷயங்கள் மூன்று. அவை: பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை. இவைகள் இல்லாமல் போனதால்தான், கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்துக்கு மாற்றாக வேறு எதையும் அவர்கள் கருத்தில்கொள்வதில்லை. முறித்துக்கொள்வது மட்டுமே முடிவானது என்று கருதுகிறார்கள்.

    ஆணும், பெண்ணும் சரி சமம் என்று தலைநிமிர்ந்து நிற்கும் இன்றைய தலை முறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. பொறுமையின்றி, நிதானமின்றி அதிரடியும் ஆவேசமுமாக களத்தில் இறங்கி சண்டையிட்டுக்கொண்டு விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி பலரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இழந்த எதையும் பணத்தால் வாங்கமுடியாது என்பதை உணரும்போது அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.

    மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். அதை திருத்திக்கொள்ளும் முயற்சிதான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்பு செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.

    திருமணத்துக்கு முன்பு - திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு - பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அநேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.

    விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. 'தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!' என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிதாகி தன் கண்முன்னே வந்து நின்று மிரட்டும். அந்த நேரத்தில் தன் மீதே தனக்கு கோபமும், வருத்தங்களும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண் பாடான பாதையில் அவர்கள் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.

    அதனால் அவர்களது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவர்களுடைய வாழ்க்கை யில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதை புரிந்துகொள்வார்கள்.

    பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும். அதற்குதக்கபடி பெண்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்துபோவார்கள். அப்போது தங்களுக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தங்களுக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வார்கள்.

    அப்படி உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, 'நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அதனால் மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    • இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தாக்குதலில் காயமடைந்த வசந்தியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி வசந்தி(வயது51). அதே பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (24). வசந்திக்கு புகழேந்திக்கு மருமகன் ஆவார்.

    இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வசந்திக்கும், புகழேந்திக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புகழேந்தி, வசந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த வசந்தியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள்.
    நாளை (மே 15-ந்தேதி) உலக குடும்ப தினம்.

    குடும்பம் என்பது அதிகாரம் தூள்பறக்கும் நிறுவனமல்ல. அன்பும், அருளும் தவழும் கோவில். குடும்பம் என்பது உருவங்கள் நடமாடும் இடம் அல்ல, உள்ளங்கள் உறவாடும் இடம். வீடு என்பது தங்குமிடமல்ல. இன்பம் பொங்குமிடம். எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு வகையான பெருமை உண்டு என்றால் இந்தியாவின் பெருமை இனிய குடும்பம்.

    தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு தம்பதியிடம் ஒரு நிருபர் பேட்டி எடுத்தார். “இங்குள்ள கோவில்களையெல்லாம் பார்த்தீர்களா?” “பார்த்தோம். அதிசயமாக இருந்தது. அதைவிட அதிசயம் இங்குள்ள குடும்பங்களெல்லாம் கோவிலாக இருப்பது” இதுதான் நமக்குப் பெருமை. அந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். கால ஓட்டத்தில் நிலைமை மாறி வருவதாகச் சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் உடைந்த வீடுகள் உடையாத உள்ளங்கள்.

    இப்போது உடையாத வீடுகள் ஆனால் உடைந்த உள்ளங்கள். இல்லறத்தில் மகிழ்ச்சி எப்போது வரும்? புடவை, பட்டுக் கொடுத்தால் வருமா? நகை நட்டு கொடுத்தால் வருமா? பணக்கட்டு கொடுத்தால் வருமா? சீர்வரிசை தட்டு கொடுத்தால் வருமா? அப்போதெல்லாம் விட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் வரும். விட்டுக் கொடுப்பதென்பது வீழ்ச்சியல்ல விதைப்பது. உலகின் மிக உன்னதமானது கணவன் மனைவி உறவு. முன்பின் அறிமுகம் இல்லாத, ரத்த உறவாகப் பிறந்திடாத இரண்டு பேருக்கு இடையே அறிமுகம் முளைத்து, அது நட்பாக வளர்ந்து, இனிய அன்பாகப் பிரவாகம் எடுத்து, இரண்டு உடல்களில் ஓர் உயிர் இருப்பது போல நெருக்கமாகி, ஆயுள் முழுவதும் இணைந்திருக்கும் இனிய பந்தம். அது அழகாக இருக்க சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

    கணவனுக்கும், மனைவிக்கும் நடக்கும் விவாதங்களில் ஜெயிப்பதற்கு ஆர்வம் காட்டாதீர்கள். யார் ஜெயித்தாலும், தோற்றவர் வாழ்க்கைத் துணைதானே. ஒருவர் தோல்வியின் விரக்தியில் இருக்கும்போது, மற்றவர் வெற்றியைக் கொண்டாட முடியுமா? விட்டுக்கொடுங்கள். அன்பை வெளிப்படுத்தவும், ஆறுதல் சொல்லவும் அவ்வப்போது அரவணைப்பையும் அன்பான வார்த்தைகளையும் பயன்படுத்துங்கள். நெடுநாள் இனிமையாக உறவு நீடிக்க இந்த “மந்திரச் செயல்” அவசியம்.

    பணம்தான் பல குடும்பங்களில் உறவை உடைக்கும் கருவியாக இருக்கிறது. வருமானம், கடன், செலவுகள், வீடு வாங்குவது போன்ற உங்கள் பொருளாதார இலக்குகள் என எதையும் வாழ்க்கைத்துணையிடம் மறைக்காதீர்கள். வாழ்க்கையில் யாராவது ஒருவரிடமாவது ஒளிவு மறைவின்றி உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அது உங்களது வாழ்க்கைத்துணையாக இருக்கட்டும்.

    எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள். வாழ்க்கைத்துணை கச்சிதமான நபரான, எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்பவராக, நூறு சதவீதம் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்பவராக இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். பலங்களும், பலவீனங்களும் இணைந்தவர்களே ஒவ்வொருவரும். நீங்களும் அப்படித்தானே. வாழ்க்கைத் துணையிடம் மட்டும் நூறு சதவீத கச்சிதத்தை எதிர்பார்ப்பது நியாயமா?

    யாரோடும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒப்பிட்டால் அந்த நிமிடத்தில் இருந்து நிம்மதியைத் தொலைத்துவிடுவீர்கள். ஒவ்வொரு தனிநபரும் தனிப்பட்ட குணங்களின், திறமைகளின், விருப்பங்களின் கலவை. அந்தத் தனித் திறமையைக் கண்டறிந்து, அதை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல சிந்தனைகளில் மூழ்காதீர்கள். “டைனிங் டேபிளில்” அமர்ந்து சாப்பிட்டபடி அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலையை மனதில் நினைத்துக்கொண்டு, உதட்டளவில் வாழ்க்கைத் துணையிடம் பேசாதீர்கள். நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் அக்கறை குறைவதை, வேறு யாரையும்விட வாழ்க்கைத் துணையால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

    வாழ்க்கைத்துணையின் உறவினரோ, நண்பரோ, உங்களை ஏமாற்றி இருக்கலாம்; ஏதாவது நஷ்டத்துக்கு ஆளாக்கி இருக்கலாம். அதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கைத்துணையை விமர்சிக்காதீர்கள். யாரோ செய்த தவறுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்? உங்கள் உடன்பிறந்தவர்களே கூட உங்களைப் போல இருக்க முடியாது என்கிறபோது, யாரோ ஒருவர் எப்படி உங்களின் வாழ்க்கைத் துணைபோல அக்கறையாக இருப்பார்?

    வாழ்க்கைத்துணை மீது கோபமோ, வருத்தமோ ஏற்படும்போது என்ன செய்யலாம்? எதுவுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லவழி. கோபத்தில் திட்டுவதோ, போனில் கத்துவதோ பிரச்சினைகளைத் தீர்க்காது. அவசரத்தில் உதிர்க்கும் வார்த்தைகள், இன்னொரு புது பிரச்சினையை உருவாக்கிவிடும். உணர்ச்சிவசப்பட்டு மனதால் முடிவு எடுக்காதீர்கள்; நிதானமாக யோசித்து அறிவால் முடிவெடுங்கள். இன்றைய கோபத்தை இன்றே மறந்துவிடுங்கள். அதை சுமந்துகொண்டு படுக்கைக்குப் போகாதீர்கள். மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். கோபத்தில் வரும் யோசனைகள், பலூன் மாதிரி பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கிவிடும். அன்பு எனும் ஊசியால் அதை உடைத்துவிடுங்கள். கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் பிரச்சினையை பெரிதாக்காமல் தீர்க்கும் போக்கில் அமைய வேண்டும். சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?

    ஒருவர், தன் மகள் திருமணத்துக்காக ஒரு ஜோசியரைப் பார்த்து, இரண்டு ஜாதகங்களைக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார். இரண்டும் பெண்களின் ஜாதகமாயிருந்தால் அதிர்ச்சியடைந்த ஜோசியர் காரணம் கேட்டார். “ஒன்று என் மகள் ஜாதகம், இன்னொன்று அவளுக்கு மாமியாராக வரப்போறவங்க ஜாதகம். இரண்டும், பொருந்தி வருதா பாருங்க”.

    இந்த நிலைமை ஏன்? தன்னுடைய மகள் கட்டிக்கொடுத்த இடத்தில் கண்கலங்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிற தாய், தன்னை நம்பி வந்திருக்கும் ஒரு பெண்ணை கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டாமா? தன் அம்மாவை நேசிக்கும் ஒரு பெண், தனது மாமியாரும் தாய்மாதிரித்தான் என்று எண்ணத் தொடங்கினால் குடும்பம் கோவிலாகி விடும். மாமியாரின் அனுபவத்தை மருமகளும், படித்த மருமகளின் அறிவாற்றலை மாமியாரும் மதிக்கத் தொடங்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.

    நமது குடும்பத்தின் வலிமையே கூட்டுக்குடும்பம்தான். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா அடடா? எத்தனை உறவுமுறைகள். தாய்மாமன் உறவு என்பது தனித்துவமானது. தாத்தா சரித்திரம் சொல்ல, பாட்டி கதைகள் சொல்ல, அத்தையும், மாமாவும் அரவணைக்க அந்த வளர்ப்பின் அனுபவமே அற்புதமானது. நட்ட நடுநிசியில் தொட்டில் குழந்தை, நிதானத்துக்கு அதிகமாக அழுது துடித்தால் எந்த டாக்டரிடம் கொண்டு செல்வது? இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம்.

    இப்போது அவசர உலகத்தில் இந்த கூட்டுக்குடும்ப தத்துவம் தகர்ந்து கொண்டிருக்கிறது. தனிக்குடித்தனம் என்ற சுயநலத் தேவை அதிகரித்துவிட்டது. வேலை நிமித்தம் தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர, மற்ற காலகட்டத்தில் ஒன்றாக வாழ்வதே நல்லது. அப்போதும் இல்லறங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் நெருங்கியிருந்தால் உறவுகள் மேம்படும். “வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்” என்ற நிலையும் உள்ளது. ஒரு பெரியவர் சொன்னார்: எனக்கு ஐந்து சன்ஸ் உண்டு. ஆனால் நான் பெற்றெடுக்காத இன்னொரு சன்தான் என்னைக் காப்பாற்றுகிறான். அவன்தான் பென்சன்.

    பெரியவர்கள் வீட்டில் இருந்தால் பெருமை என்று கருதுவோம். அவர்களை வழிபடுவதே சிறந்த ஆன்மிகம் என்ற நிலை வந்தால் குடும்பம் கோவிலாகிவிடும். குடும்ப தினத்தில் அதைப்பற்றி அதிகம் யோசிப்போம்.

    முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை.
    நத்தம் அருகே குடும்ப தகராறில் மகளுடன் தீக்குளித்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோசி (வயது 42). இவர்களது மகள் பிரனீதா (17). பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

    தாய் மகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலையிலும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரோசி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்ததும் அவரது மகளும் தாயை கட்டிப்பிடித்தார்.

    இருவரும் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். ஆனால் ரோசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×