search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother kills"

    நத்தம் அருகே குடும்ப தகராறில் மகளுடன் தீக்குளித்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோசி (வயது 42). இவர்களது மகள் பிரனீதா (17). பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

    தாய் மகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலையிலும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரோசி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்ததும் அவரது மகளும் தாயை கட்டிப்பிடித்தார்.

    இருவரும் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். ஆனால் ரோசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தினமும் மகன் குடித்துவிட்டு வந்ததால் வேதனை அடைந்த குடும்பத்தில் உள்ள 4 பேர் வி‌ஷம் குடித்தனர். இதில் பாட்டி, தாய் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டினத்தை சேர்ந்தவர் காசிநாதன் (50), இவரது மனைவி மாரியம்மாள் (47), இவர்களின் மகன் கார்த்தி, மருமகள் கவிதா (25), மாரியம்மாள் தாயார் வேதவல்லி (60) ஆகியோர் மகாதேவப்பட்டினத்தில் விவசாய வேலை பார்த்து வருகின்றனர். 

    கார்த்தி வேலைக்கு செல்லாதது குறித்து அவரது மனைவி கவிதா கண்டித்துள்ளார். இதனால் கடத்த 15 நாட்களாக தினமும் குடித்து விட்டு வந்து கார்த்தி வீட்டில் பொருட்களை உடைத்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த காசிநாதன், கவிதா, மாரியம்மாள், வேதவல்லி ஆகிய 4 பேரும் நேற்று வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் மாரியம்மாள், வேதவல்லி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இது குறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×