என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நத்தம் அருகே குடும்ப தகராறில் மகளுடன் தீக்குளித்த தாய் பலி
Byமாலை மலர்24 April 2019 11:46 AM GMT (Updated: 24 April 2019 11:46 AM GMT)
நத்தம் அருகே குடும்ப தகராறில் மகளுடன் தீக்குளித்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோசி (வயது 42). இவர்களது மகள் பிரனீதா (17). பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
தாய் மகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலையிலும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரோசி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்ததும் அவரது மகளும் தாயை கட்டிப்பிடித்தார்.
இருவரும் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். ஆனால் ரோசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X