search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் ஏரியில் வாலிபர் பிணம்  கொலையா? போலீசார் விசாரணை
    X

    சேலம் ஏரியில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

    • சிவக்குமார் சமையல் தொழிலாளி என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார்.
    • சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் அப்பர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28), சமையல் தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டவுன் அண்ணாநகரை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சிவக்குமார் சமையல் தொழிலாளி என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக சிவக்குமார் கூறி சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில், எருமாபாளையம் பகுதியில் உள்ள குருவிபனை ஏரியில் மாயமான சிவக்குமார்் பிணமாக கிடப்பதாக நேற்று பிற்பகல் கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் பிணமாக கிடந்த சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வெளியே சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது எப்படி?, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது. பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×