search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Thread"

    • மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும் என விளக்கினார்.
    • வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாய் எப்படி இருக்க வேண்டும்?

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை அடுத்த காளி ஊராட்சி அஞ்சல் நிலையம் அருகே 'ஓய்வுபெற்ற ஆசிரியர் காவிரி செல்லையா எழுதிய, பெருமதிப்பிற்குரிய மாணவ மணிகளே, பெற்றோர்களே என்ற தலைப்பில் 2 நூல்கள் வெளியியிட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவி தேவி உமாபதி, சமூக ஆர்வலர் சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய கவுன்சிலர் காந்தி வரவேற்றார்.

    இதில் மாணவ-மாணவிகள் என்கிற நூலில், இவர்கள் - எப்படி படிக்க வேண்டும், எப்படி வாழவேண்டும், எப்படி முன்னேற வேண்டும் என விளக்கி உள்ளார்.

    அடுத்து, பெற்றோர்கள் என்கிற நூலில், பெற்றோர்கள், எப்படி, தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும், எப்படி படிக்க வைக்க வேண்டும், அவர்களை வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாய் எப்படி இருக்க வேண்டும் என தெளிவுபட எழுதி உள்ளார்.

    பின்னர் குத்தாலம் முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக செயல் திட்ட குழு உறுப்பினருமான கல்யாணம் ஆசிரியர் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

    இதனை ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி சார்பாக மயிலாடுதுறை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் செல்லத்துரை, இளமுருகச் செல்வன், வெண்மணி அழகன், உலக தமிழ் கழகம் மன்னர் மன்னன், நமச்சிவா யபுரம் ஊராட்சி தலைவர் நெப்போலியன், வி.சி.க. நெறியாளர் ஆனந்த், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், உள்ளீட்ட ஏராளமான ஆசிரி யர்களும், மானவர்களும், ஊர் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் புலவர் நூல் ஆசிரியர்காவிரி செல்லையா நன்றி கூறினார்.

    ×