search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தற்கொலை
    X

    இளம்பெண் தற்கொலை

    • உதயப்பிரகாசுடன் சேர்ந்து ஆஷா வாழ்ந்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் ஆஷா வைப்பிரிந்து உதயபிரகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.
    • தனிமையில் வாழ்ந்துவந்த ஆஷாவுக்கு வாழ்க்கையில் வெறுப்படைந்து வாழ்வதை விட சாவது மேல் என அடிக்கடி அவரது தாயார் பேபி சுலோச்சனாவிடம் புலம்பிவந்தார்

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபத்தை அடுத்த விராலிக்காட்டு விளை யைச்சேர்ந்தவர் ஆஷா (வயது 27). இவருக்கு ஷாஜி என்பவருடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். பின்னர் திண்டுக் கல்லை சேர்ந்த உதயப்பிர காசுடன் சேர்ந்து ஆஷா வாழ்ந்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் ஆஷா வைப்பிரிந்து உதயபிரகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.

    இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேக்காமண்டபம் அருகே கைசாலவிளையில் உள்ள வாடகை வீட்டில் மகளுடன் தனியாக வசித்து வந்தார். தனிமையில் வாழ்ந்துவந்த ஆஷாவுக்கு வாழ்க்கையில் வெறுப்படைந்து வாழ்வதை விட சாவது மேல் என அடிக்கடி அவரது தாயார் பேபி சுலோச்சனாவிடம் புலம்பிவந்தார். மன உளைச்சலில் இருந்து வந்த ஆஷா நேற்று வீட்டின் சமையலறை யில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் பிணத்தைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆஷாவின் தாயார் பேபிசுலோச்சனா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×